ஹதீஸ்கள்
#6023
ஸஹீஹ் அல்-புகாரீ - Ethics
அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒருமுறை) நபி (ஸல்) அவர்கள் நரகத்தைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். அப்போது அதைவிட்டு அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரினார்கள். அப்போது தமது முகத்தைத் திருப்பிக்கொண்டார்கள். பிறகும் நரகத்தைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். அப்போதும் அதைவிட்டு அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரினார்கள். அப்போதும் தமது முகத்தைத் திருப்பிக் கொண்டார்கள். பிறகு, “பேரீச்சம்பழத்தின் ஒரு துண்டைத் தர்மம் செய்தேனும் நரகத்திலிருந்து உங்களைக் காப்பாற்றிக்கொள்ளுங்கள். அதுவும் இல்லையானால் இன் சொல்லைக் கொண்டாவது (காப்பாற்றிக்கொள்ளுங்கள்)” என்றார்கள். அறிவிப்பாளர் ஷுஅபா (ரஹ்) அவர்கள், “(நபியவர்கள் நரகத்தைப் பற்றி) இருமுறை (குறிப்பிட்டார்கள்) என்பதில் சந்தேகமில்லை. (மூன்றாவது முறை குறிப்பிட்டார்களா என்பதில்தான் சந்தேகம் உள்ளது)” என்று கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا ابو الوليد، حدثنا شعبة، قال اخبرني عمرو، عن خيثمة، عن عدي بن حاتم، قال ذكر النبي صلى الله عليه وسلم النار، فتعوذ منها واشاح بوجهه، ثم ذكر النار، فتعوذ منها، واشاح بوجهه قال شعبة اما مرتين فلا اشك ثم قال " اتقوا النار ولو بشق تمرة، فان لم تجد فبكلمة طيبة
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Ethics
- Hadith Index
- #6023
- Book Index
- 54
Grades
- -
