ஹதீஸ்கள்
#6022
ஸஹீஹ் அல்-புகாரீ - Ethics
அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: “தர்மம் செய்வது எல்லா முஸ்லிமின் மீதும் கடமையாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், “(தர்மம் செய்ய ஏதும்) கிடைக்கவில்லையானால்?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “தம் இரு கைகளால் உழைத்துத் தாமும் பயனடைவார்; தர்மம் செய்(து பிறரையும் பயனடையச் செய்)வார்” என்று சொன்னார்கள். மக்கள், “ ‘அவருக்கு (உழைக்க உடலில்) தெம்பு இல்லையானால்’ அல்லது ‘அதை அவர் செய்யாவிட்டால்’ (என்ன செய்வது?)” என்று கேட்டனர். நபி (ஸல்) அவர்கள், “பாதிக்கப்பட்ட தேவையாளிக்கு அவர் உதவட்டும்” என்றார்கள். மக்கள், “(இதை இயலாமையாலோ சோம்பóனாலோ) அவர் செய்யவில்லையானால் (என்ன செய்வது?)” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “அப்போது ‘நல்லதை’ அல்லது ‘நற்கர்மத்தை’(ச் செய்யும்படி பிறரை) அவர் ஏவட்டும்” என்றார்கள். “(இதையும்) அவர் செய்யாவிட்டால்?” என்று கேட்டதற்கு, நபி (ஸல்) அவர்கள், “அவர் தீங்கு செய்யாமல் இருக்கட்டும். அதுவே அவருக்குத் தர்மம் ஆகும்” என்றார்கள்.39 அத்தியாயம் :
حدثنا ادم، حدثنا شعبة، حدثنا سعيد بن ابي بردة بن ابي موسى الاشعري، عن ابيه، عن جده، قال قال النبي صلى الله عليه وسلم " على كل مسلم صدقة ". قالوا فان لم يجد قال " فيعمل بيديه فينفع نفسه ويتصدق ". قالوا فان لم يستطع او لم يفعل قال " فيعين ذا الحاجة الملهوف ". قالوا فان لم يفعل قال " فيامر بالخير ". او قال " بالمعروف ". قال فان لم يفعل قال " فيمسك عن الشر، فانه له صدقة
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Ethics
- Hadith Index
- #6022
- Book Index
- 53
Grades
- -
