Loading...

Loading...
நூல்கள்
௧௮௭ ஹதீஸ்கள்
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு, அவர்களிடம் இருந்தவற்றி லேயே நல்ல மணமுடைய வாசனைப் பொருளை நான் பூசிவந்தேன். எந்த அளவுக்கென்றால் அந்த நறுமணப் பொருளின் மினுமினுப்பை அவர்களின் தலையிலும் அவர்களின் தாடியிலும் என்னால் காண முடிந்தது. அத்தியாயம் :
حدثنا اسحاق بن نصر، حدثنا يحيى بن ادم، حدثنا اسراييل، عن ابي اسحاق، عن عبد الرحمن بن الاسود، عن ابيه، عن عايشة، قالت كنت اطيب النبي صلى الله عليه وسلم باطيب ما يجد، حتى اجد وبيص الطيب في راسه ولحيته
சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் ஒரு துவாரத்தின் வழியாக நபி (ஸல்) அவர்களின் வீட்டினுள் எட்டிப் பார்த்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ஈர்வலிச் சீப்பால் தமது தலையைக் கோதிக்கொண்டிருந்தார்கள். (அவர் எட்டிப் பார்த்ததையறிந்த) நபி (ஸல்) அவர்கள், ‘‘நீ பார்த்துக் கொண்டிருக்கிறாய் என்பது எனக்கு (முன்பே) தெரிந்திருந்தால் இந்த ஈர்வலியைக் கொண்டே உன் கண்ணைக் குத்தியிருப்பேன். (வீட்டுக்குள் நுழைய) அனுமதி கேட்க வேண்டும் என்று சட்டமாக்கப்பட்டதே பார்வைகள் (வரம்புமீறி வீட்டிலிருப்பவர்கள்மீது விழக்கூடும் என்ற) காரணத்தால்தான்” என்று சொன்னார்கள். அத்தியாயம் :
حدثنا ادم بن ابي اياس، حدثنا ابن ابي ذيب، عن الزهري، عن سهل بن سعد، ان رجلا، اطلع من جحر في دار النبي صلى الله عليه وسلم والنبي صلى الله عليه وسلم يحك راسه بالمدرى فقال " لو علمت انك تنظر لطعنت بها في عينك، انما جعل الاذن من قبل الابصار
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தலையை நான் வாரிவிட்டிருக்கிறேன். ... இதே ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து மற்றோர் அறிவிப் பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.113 அத்தியாயம் :
حدثنا عبد الله بن يوسف، اخبرنا مالك، عن ابن شهاب، عن عروة بن الزبير، عن عايشة رضى الله عنها قالت كنت ارجل راس رسول الله صلى الله عليه وسلم وانا حايض. حدثنا عبد الله بن يوسف، اخبرنا مالك، عن هشام، عن ابيه، عن عايشة، مثله
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் தலைவாரிக் கொள்ளும்போதும் சரி, அவர்கள் அங்கத் தூய்மை (உளூ) செய்யும்போதும் சரி இயன்ற வரை வலப் பக்கத்திலிருந்து தொடங்குவதே அவர்களுக்கு விருப்ப மானதாக இருந்தது.114 அத்தியாயம் :
حدثنا ابو الوليد، حدثنا شعبة، عن اشعث بن سليم، عن ابيه، عن مسروق، عن عايشة، عن النبي صلى الله عليه وسلم انه كان يعجبه التيمن ما استطاع في ترجله ووضويه
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (அல்லாஹ் கூறுகின்றான்:) ஆதமின் மகனுடைய (மனிதனுடைய) செயல் ஒவ்வொன்றும் அவனுக்கு உரியது; நோன்பைத் தவிர! ஏனெனில், அது எனக்குரியது. அதற்கு (நான் விரும்பும் அளவுக்கு) நானே பிரதிபலன் அளிக்கிறேன். (மேலும், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:) நோன்பாளியின் வாய் வாடையானது, கஸ்தூரியின் வாசனையைவிட அல்லாஹ்விடம் நறுமணமிக்கதாகும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.115 அத்தியாயம் :
حدثني عبد الله بن محمد، حدثنا هشام، اخبرنا معمر، عن الزهري، عن ابن المسيب، عن ابي هريرة رضى الله عنه عن النبي صلى الله عليه وسلم قال " كل عمل ابن ادم له، الا الصوم فانه لي، وانا اجزي به، ولخلوف فم الصايم اطيب عند الله من ريح المسك
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டியபோது நான் அவர்களுக்கு என்னிட மிருந்ததிலேயே மிக நல்ல வாசனைப் பொருளைப் பூசிவந்தேன்.116 அத்தியாயம் :
حدثنا موسى، حدثنا وهيب، حدثنا هشام، عن عثمان بن عروة، عن ابيه، عن عايشة رضى الله عنها قالت كنت اطيب النبي صلى الله عليه وسلم عند احرامه باطيب ما اجد
ஸுமாமா பின் அப்தில்லாஹ் பின் அனஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அனஸ் (ரலி) அவர்கள் (தமக்கு அன்பளிப்பாகத் தரப்படும்) நறுமணப் பொருளை மறுக்காமல் ஏற்றுக்கொள் வார்கள். மேலும், அவர்கள், ‘‘நபி (ஸல்) அவர்கள் (தமக்கு அன்பளிப்பாக அளிக்கப்பட்ட) நறுமணப் பொருளை மறுத்ததில்லை” என்று கூறினார்கள்.117 அத்தியாயம் :
حدثنا ابو نعيم، حدثنا عزرة بن ثابت الانصاري، قال حدثني ثمامة بن عبد الله، عن انس رضى الله عنه انه كان لا يرد الطيب، وزعم ان النبي صلى الله عليه وسلم كان لا يرد الطيب
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘விடைபெறும்’ ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டியபோதும் இஹ்ராமிலிருந்து விடுபட்டபோதும் நான் என் இரு கைகளால் அவர்களுக்கு (‘தரீரா’ எனும்) வாசனைத் தூளைப் பூசிவிட்டேன். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا عثمان بن الهيثم، او محمد عنه عن ابن جريج، اخبرني عمر بن عبد الله بن عروة، سمع عروة، والقاسم، يخبران عن عايشة، قالت طيبت رسول الله صلى الله عليه وسلم بيدى بذريرة في حجة الوداع، للحل والاحرام
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: பச்சை குத்திவிடும் பெண்கள், பச்சை குத்திக்கொள்ளும் பெண்கள், முகத்தில் முளைத்திருக்கும் முடிகளை அகற்றக் கேட்டுக்கொள்ளும் பெண்கள், அழகிற்காக அரத்தால் தேய்த்துப் பல்வரிசையைப் பிரித்துக்கொள்ளும் பெண்கள், (மொத்தத்தில்) இறைவன் அளித்த உருவத்தை மாற்றிக்கொள்ள முயலும் பெண்கள்மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்! நபி (ஸல்) அவர்கள் யாரைச் சபித்தார்களோ அவர்களை நான் ஏன் சபிக்கக் கூடாது? அல்லாஹ்வின் வேதத்திலும் அது உள்ளதே! ‘‘இறைத்தூதர் எதை உங்களுக்குக் கொடுத்தாரோ அதை எடுத்துக்கொள்ளுங்கள். அவர் எதிóருந்து உங்களைத் தடுத்தாரோ அதிலிருந்து விலகியிருங்கள்” என்பதே அந்த (59:7ஆவது) வசனம்.120 அத்தியாயம் :
حدثنا عثمان، حدثنا جرير، عن منصور، عن ابراهيم، عن علقمة، عن عبد الله، لعن الله الواشمات، والمستوشمات، والمتنمصات والمتفلجات للحسن، المغيرات خلق الله تعالى، مالي لا العن من لعن النبي صلى الله عليه وسلم وهو في كتاب الله {وما اتاكم الرسول فخذوه}
ஹுமைத் பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: முஆவியா பின் அபீசுஃப்யான் (ரலி) அவர்கள் ஹஜ் செய்த ஆண்டில் சொற்பொழிவு மேடையின் மீது நின்று கொண்டு (மெய்க்)காவலர் ஒருவரது கையிலிருந்த முடிக்கற்றை (சவுரி முடி) ஒன்றை எடுத்துக்காட்டி, ‘‘(மதீனா வாசிகளே!) உங்கள் (மார்க்க) அறிஞர்கள் எங்கே? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இது போன்றதைத் தடை செய்து, ‘பனூ இஸ்ராயீல் சமுதாயத்தார் அழிந்துபோனதெல்லாம் அவர்களுடைய பெண்கள் இதைப் பயன்படுத்தியபோதுதான்’ என்று சொல்ல நான் கேட்டேன்” எனக் கூறினார்கள்.121 அத்தியாயம் :
حدثنا اسماعيل، قال حدثني مالك، عن ابن شهاب، عن حميد بن عبد الرحمن بن عوف، انه سمع معاوية بن ابي سفيان، عام حج وهو على المنبر، وهو يقول وتناول قصة من شعر كانت بيد حرسي اين علماوكم سمعت رسول الله صلى الله عليه وسلم ينهى عن مثل هذه ويقول " انما هلكت بنو اسراييل حين اتخذ هذه نساوهم
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒட்டுமுடி வைத்துவிடும் பெண்கள், ஒட்டுமுடி வைத்துக்கொள்ளும் பெண்கள், பச்சை குத்திவிடும் பெண்கள், பச்சை குத்திக்கொள்ளும் பெண்கள் ஆகியோரை அல்லாஹ் சபிக்கின்றான். (தன் கருணை யிலிருந்து அப்புறப்படுத்துகின்றான்.) இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
وقال ابن ابي شيبة حدثنا يونس بن محمد، حدثنا فليح، عن زيد بن اسلم، عن عطاء بن يسار، عن ابي هريرة رضى الله عنه عن النبي صلى الله عليه وسلم قال " لعن الله الواصلة والمستوصلة، والواشمة والمستوشمة
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அன்சாரிப் பெண்ணொருவர் மணம் புரிந்துகொண்டார். பிறகு அவர் நோயுற்று விட அதன் காரணத்தால் அவருடைய தலைமுடி கொட்டிவிட்டது. ஆகவே, அவருடைய உறவினர்கள் அவருக்கு ஒட்டுமுடி வைக்க விரும்பி நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘ஒட்டு முடி வைத்துவிடுபவளையும் ஒட்டுமுடி வைத்துக்கொள்பவளையும் அல்லாஹ் சபிக்கின்றான். (தன் கருணையிóருந்து அப்புறப்படுத்துகின்றான்)” என்று கூறி னார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.122 அத்தியாயம் :
حدثنا ادم، حدثنا شعبة، عن عمرو بن مرة، قال سمعت الحسن بن مسلم بن يناق، يحدث عن صفية بنت شيبة، عن عايشة رضى الله عنها ان جارية، من الانصار تزوجت، وانها مرضت فتمعط شعرها، فارادوا ان يصلوها فسالوا النبي صلى الله عليه وسلم فقال " لعن الله الواصلة والمستوصلة ". تابعه ابن اسحاق عن ابان بن صالح عن الحسن عن صفية عن عايشة
அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு பெண் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, ‘‘நான் என் மகளுக்கு மணமுடித்துவைத்தேன். பிறகு அவள் (தட்டம்மையால்) நோயுற்றுவிட அதன் காரணத்தால் அவளது தலைமுடி கொட்டிவிட்டது. அவளுடைய கணவரோ (அவளை அழகுபடுத்தும்படி) என்னைத் தூண்டுகிறார். ஆகவே, அவளது தலையில் நான் ஒட்டுமுடி வைத்துவிடட்டுமா?” என்று கேட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒட்டுமுடி வைத்து விடுபவளையும், ஒட்டுமுடி வைத்துக் கொள்பவளையும் சபித்தார்கள். அத்தியாயம் :
حدثني احمد بن المقدام، حدثنا فضيل بن سليمان، حدثنا منصور بن عبد الرحمن، قال حدثتني امي، عن اسماء بنت ابي بكر رضى الله عنهما ان امراة، جاءت الى رسول الله صلى الله عليه وسلم فقالت اني انكحت ابنتي، ثم اصابها شكوى فتمرق راسها، وزوجها يستحثني بها افاصل راسها فسب رسول الله صلى الله عليه وسلم الواصلة والمستوصلة
அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஒட்டுமுடி வைத்துவிடுபவளையும் ஒட்டுமுடி வைத்துக்கொள்பவளையும் (‘அல்லாஹ் தன் கருணையிலிருந்து அப்புறப்படுத் தட்டும்’ என்று) சபித்தார்கள். அத்தியாயம் :
حدثنا ادم، حدثنا شعبة، عن هشام بن عروة، عن امراته، فاطمة عن اسماء بنت ابي بكر، قالت لعن النبي صلى الله عليه وسلم الواصلة والمستوصلة
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒட்டுமுடி வைத்துவிடுபவளையும் ஒட்டுமுடி வைத்துக்கொள்பவளையும் பச்சை குத்திவிடுபவளையும் பச்சை குத்திக்கொள்பவளையும் அல்லாஹ் சபிக்கின்றான். (தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துகின்றான்.) இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இதன் அறிவிப்பாளர் நாஃபிஉ (ரஹ்) அவர்கள், ‘‘பல் ஈறுகளிலும் பச்சை குத்தப்படுவதுண்டு” என்று சொன்னார்கள். அத்தியாயம் :
حدثني محمد بن مقاتل، اخبرنا عبد الله، اخبرنا عبيد الله، عن نافع، عن ابن عمر رضى الله عنهما ان رسول الله صلى الله عليه وسلم قال " لعن الله الواصلة والمستوصلة، والواشمة والمستوشمة ". قال نافع الوشم في اللثة
சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: முஆவியா (ரலி) அவர்கள் மதீனாவுக்கு இறுதியாக வந்தார்கள். அப்போது எங்களுக்கு உரையாற்றினார்கள். மேலும், முடிக்கற்றை ஒன்றை (கையில்) எடுத்து, ‘‘இந்த ஒட்டுமுடி வைத்துக்கொள்ளும் செயலை யூதர்களைத் தவிர வேறெவரும் செய்வதை நான் பார்த்ததில்லை. நபி (ஸல்) அவர்கள் இதை ‘போலி’ (‘ஸூர்’) என அழைத்தார்கள்” என்று ஒட்டுமுடி வைப்பதைக் குறிப்பிட்டுச் சொன்னார்கள்.123 அத்தியாயம் :
حدثنا ادم، حدثنا شعبة، حدثنا عمرو بن مرة، سمعت سعيد بن المسيب، قال قدم معاوية المدينة اخر قدمة قدمها، فخطبنا فاخرج كبة من شعر قال ما كنت ارى احدا يفعل هذا غير اليهود، ان النبي صلى الله عليه وسلم سماه الزور. يعني الواصلة في الشعر
அல்கமா பின் கைஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், பச்சை குத்திவிடும் பெண்களையும் முகத்தில் முளைத்திருக்கும் முடிகளை நீக்கிக்கொள்ளும் பெண்களையும் அழகிற்காக பல்வரிசையை அரத்தால் தேய்த்துப் பிரித்துக்கொள்ளும் பெண்களையும் (மொத்தத்தில்) அல்லாஹ் படைத்த உருவ அமைப்பை மாற்றும் பெண்களை சபித்தார்கள். (இதைக் கேள்விப்பட்ட) உம்மு யஅகூப் என்ற பெண், ‘‘என்ன இது (இவ்வாறெல்லாம் சபித்தீர்களாமே)?” என்று கேட்டார். அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் யாரைச் சபித்தார்களோ அவர்களையும், அல்லாஹ்வின் வேதத்தில் சபிக்கப்பட்டு உள்ளவர்களையும் நான் ஏன் சபிக்கக் கூடாது?” என்று கேட்டார்கள். அதற்கு அந்தப் பெண், ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! (குர்ஆன் பிரதியில்) இரு அட்டைகளுக்கிடையிலுள்ள அனைத் தையும் நான் ஓதியுள்ளேன். (நீங்கள் குறிப்பிட்ட) அதை நான் அதில் காண வில்லையே!” என்று கேட்டார். அதற்கு அவர்கள், ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! நீ குர்ஆனை(ச் சரியாக) ஓதியிருந்தால் அதில் நான் கூறியதைக் கண்டிருப்பாய்: ‘‘இறைத்தூதர் எதை உங்களுக்குக் கொடுத்தாரோ, அதைப் பெற்றுக்கொள்ளுங்கள். அவர் எதிóருந்து உங்களைத் தடுத்தாரோ அதிலிருந்து நீங்கள் விலகி இருங்கள்” (எனும் 59:7 ஆவது வசனமே அது) என்று பதிலளித்தார்கள்.125 அத்தியாயம் :
حدثنا اسحاق بن ابراهيم، اخبرنا جرير، عن منصور، عن ابراهيم، عن علقمة، قال لعن عبد الله الواشمات، والمتنمصات، والمتفلجات للحسن، المغيرات خلق الله. فقالت ام يعقوب ما هذا قال عبد الله وما لي لا العن من لعن رسول الله، وفي كتاب الله. قالت والله لقد قرات ما بين اللوحين فما وجدته. قال والله لين قراتيه لقد وجدتيه {وما اتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا}
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஒட்டுமுடி வைத்துவிடுபவளையும் ஒட்டுமுடி வைத்துக் கொள்பவளையும் பச்சை குத்திவிடுபவளையும் பச்சை குத்திக்கொள்பவளையும் சபித்தார்கள். அத்தியாயம் :
حدثني محمد، حدثنا عبدة، عن عبيد الله، عن نافع، عن ابن عمر رضى الله عنهما قال لعن النبي صلى الله عليه وسلم الواصلة والمستوصلة، والواشمة والمستوشمة
அஸ்மா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி, ‘‘அல்லாஹ்வின் தூதரே! என் மகளுக்குத் தட்டம்மை நோய் ஏற்பட்டு அதன் காரணத்தால் அவளது தலைமுடி கொட்டிவிட்டது. அவளை நான் மணமுடித்துக் கொடுத்திருக்கிறேன். அவளது தலைமுடியுடன் ஒட்டுமுடி வைக்கலாமா?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘ஒட்டுமுடி வைத்துவிடுபவளையும் ஒட்டுமுடி வைத்துக்கொள்பவளையும் அல்லாஹ் சபிக்கின்றான். (தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துகின்றான்)” என்று சொன்னார்கள்.127 அத்தியாயம் :
حدثنا الحميدي، حدثنا سفيان، حدثنا هشام، انه سمع فاطمة بنت المنذر، تقول سمعت اسماء، قالت سالت امراة النبي صلى الله عليه وسلم فقالت يا رسول الله ان ابنتي اصابتها الحصبة، فامرق شعرها، واني زوجتها افاصل فيه فقال " لعن الله الواصلة والموصولة
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: பச்சை குத்துபவளையும் பச்சை குத்திக்கொள்பவளையும் ஒட்டுமுடி வைத்துவிடுபவளையும் ஒட்டுமுடி வைத்துக்கொள்பவளையும் நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள். அத்தியாயம் :
حدثني يوسف بن موسى، حدثنا الفضل بن دكين، حدثنا صخر بن جويرية، عن نافع، عن عبد الله بن عمر رضى الله عنهما سمعت النبي صلى الله عليه وسلم او قال النبي صلى الله عليه وسلم " الواشمة والموتشمة، والواصلة والمستوصلة ". يعني لعن النبي صلى الله عليه وسلم