ஹதீஸ்கள்
#5934
ஸஹீஹ் அல்-புகாரீ - Dress
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அன்சாரிப் பெண்ணொருவர் மணம் புரிந்துகொண்டார். பிறகு அவர் நோயுற்று விட அதன் காரணத்தால் அவருடைய தலைமுடி கொட்டிவிட்டது. ஆகவே, அவருடைய உறவினர்கள் அவருக்கு ஒட்டுமுடி வைக்க விரும்பி நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘ஒட்டு முடி வைத்துவிடுபவளையும் ஒட்டுமுடி வைத்துக்கொள்பவளையும் அல்லாஹ் சபிக்கின்றான். (தன் கருணையிóருந்து அப்புறப்படுத்துகின்றான்)” என்று கூறி னார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.122 அத்தியாயம் :
حدثنا ادم، حدثنا شعبة، عن عمرو بن مرة، قال سمعت الحسن بن مسلم بن يناق، يحدث عن صفية بنت شيبة، عن عايشة رضى الله عنها ان جارية، من الانصار تزوجت، وانها مرضت فتمعط شعرها، فارادوا ان يصلوها فسالوا النبي صلى الله عليه وسلم فقال " لعن الله الواصلة والمستوصلة ". تابعه ابن اسحاق عن ابان بن صالح عن الحسن عن صفية عن عايشة
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Dress
- Hadith Index
- #5934
- Book Index
- 149
Grades
- -
