Loading...

Loading...
நூல்கள்
௫௦௪ ஹதீஸ்கள்
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: என் தந்தை (அபூபக்ர் (ரலி) அவர்கள்), சத்தியத்தை முறித்ததற்கான பரிகார(ம் தொடர்பான வசன)த்தை அல்லாஹ் அருளும்வரை எந்தச் சத்தியத்தையும் முறிக்காமலிருந்துவந்தார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள், “நான் ஒரு சத்தியத்தைச் செய்து, (அதன்பின் அதைக் கைவிட்டு) மற்ற (ஒன்றைத் தேர்ந்தெடுப்ப)தே அதைவிடச் சிறந்தது என்று கருதினால் (அதைக் கைவிட்டு) அல்லாஹ் அளித்த சலுகையை ஏற்றுக் கொண்டு எது சிறந்ததோ அதையே செய்வேன்” என்று சொன்னார்கள்.11 அத்தியாயம் :
حدثنا احمد بن ابي رجاء، حدثنا النضر، عن هشام، قال اخبرني ابي، عن عايشة رضى الله عنها ان اباها، كان لا يحنث في يمين حتى انزل الله كفارة اليمين. قال ابو بكر لا ارى يمينا ارى غيرها خيرا منها، الا قبلت رخصة الله، وفعلت الذي هو خير
கைஸ் பின் அபீஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், “எங்களுடன் துணைவியர் யாரும் இல்லாத நிலையில் நபி (ஸல்) அவர்களுடன் நாங்கள் (ஓர்) அறப் போரில் கலந்துகொண்டிருந்தோம். ஆகவே, நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம், “நாங்கள் காயடித்து (ஆண்மை நீக்கம் செய்து)கொள்ளலாமா?' என்று கேட்டோம். அதற்கு அவர்கள் அப்படிச் செய்ய வேண்டாமென்று எங்களைத் தடுத்தார்கள். அதன் பிறகு துணியை (மஹ்ராக)க் கொடுத்துப் பெண்ணை மணந்துகொள்ள எங்களுக்கு அனுமதியளித்தார்கள்” என்று கூறிவிட்டுப் பிறகு, “இறைநம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ் உங்களுக்கு அனுமதித்த நல்லவற்றை விலக்கி (ஹராமாக்கி)க்கொள்ளாதீர்கள்” எனும் (5:87ஆவது) இறைவசனத்தை ஓதிக்காட்டினார்கள்.12 அத்தியாயம் :
حدثنا عمرو بن عون، حدثنا خالد، عن اسماعيل، عن قيس، عن عبد الله، رضى الله عنه قال كنا نغزو مع النبي صلى الله عليه وسلم وليس معنا نساء فقلنا الا نختصي فنهانا عن ذلك، فرخص لنا بعد ذلك ان نتزوج المراة بالثوب، ثم قرا {يا ايها الذين امنوا لا تحرموا طيبات ما احل الله لكم}
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: மது பானத்தைத் தடை செய்யும் இறைவசனம் அருளப்பெற்ற காலகட்டத் தில் ஐந்து வகையான மது பானங்கள் மதீனாவில் இருந்தன. அவற்றில் திராட்சை மதுபானம் இருக்கவில்லை.14 அத்தியாயம் :
حدثنا اسحاق بن ابراهيم، اخبرنا محمد بن بشر، حدثنا عبد العزيز بن عمر بن عبد العزيز، قال حدثني نافع، عن ابن عمر رضى الله عنهما قال نزل تحريم الخمر وان في المدينة يوميذ لخمسة اشربة، ما فيها شراب العنب
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: நீங்கள் “ஃபளீக்' என்றழைக்கின்ற (பழுக்காத) இந்தப் பேரீச்சங்காய் மதுவைத் தவிர வேறெந்த மதுவும் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் எங்களிடம் இருக்கவில்லை. (ஒருமுறை) நான் (என் தாயாரின் இளைய கணவர்) அபூதல்ஹா (ரலி) அவர்களுக்கும் இன்னாருக்கும் இன்னாருக்கும் மது ஊற்றிக் கொடுத்துக் கொண்டிருந்தபோது ஒரு மனிதர் வந்து, “உங்களுக்குச் செய்தி எட்டியதா?” என்று கேட்டார். அங்கு இருந்தவர்கள், “என்ன அது?” என்று கேட்டனர். அவர், “மது தடை செய்யப்பட்டுவிட்டது” என்று பதிலளித்தார். அப்போது அவர்கள், “அனஸே! இந்த (மது) பீப்பாய்களைக் கீழே கொட்டிவிடுங்கள்” என்று கூறினர். அந்த மனிதர் அறிவித்த பிறகு அவர்கள் மதுவைக் குறித்து (வேறு யாரிடமும்) கேட்கவுமில்லை; மதுவைத் திரும்பிப் பார்க்கவுமில்லை. அத்தியாயம் :
حدثنا يعقوب بن ابراهيم، حدثنا ابن علية، حدثنا عبد العزيز بن صهيب، قال قال انس بن مالك رضى الله عنه ما كان لنا خمر غير فضيخكم هذا الذي تسمونه الفضيخ. فاني لقايم اسقي ابا طلحة وفلانا وفلانا اذ جاء رجل فقال وهل بلغكم الخبر فقالوا وما ذاك قال حرمت الخمر. قالوا اهرق هذه القلال يا انس. قال فما سالوا عنها ولا راجعوها بعد خبر الرجل
ஜாபிர் (ரலி) அவர்கள் கூறிய தாவது: மக்கள் சிலர், உஹுத் போர் நடந்த நாளின் காலையில் மது அருந்தினர். அன்று அவர்கள் அனைவருமே வீர மரணம் அடைந்தார்கள். இது, மது தடை செய்யப்படுவதற்கு முன்னர் நடந்ததாகும்.15 அத்தியாயம் :
حدثنا صدقة بن الفضل، اخبرنا ابن عيينة، عن عمرو، عن جابر، قال صبح اناس غداة احد الخمر فقتلوا من يومهم جميعا شهداء، وذلك قبل تحريمها
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் சொற்பொழிவு மேடை யிóருந்தபடி, “(இறைவனைப் போற்றிப் புகழ்ந்த பின்பு) மக்களே! மதுபானத் தடை(ச் சட்டம்) அருளப்பெற்றுவிட்டது. திராட்சை, பேரீச்சம்பழம், தேன், கோதுமை, தீட்டப்படாத கோதுமை ஆகிய ஐந்து பொருட்களிலிருந்தும் மது தயாரிக்கப் படுகிறது. (ஆயினும்,) அறிவை மயக்கும் அனைத்தும் மதுதான்” என்று கூறி னார்கள்.16 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا اسحاق بن ابراهيم الحنظلي، اخبرنا عيسى، وابن، ادريس عن ابي حيان، عن الشعبي، عن ابن عمر، قال سمعت عمر رضى الله عنه على منبر النبي صلى الله عليه وسلم يقول اما بعد ايها الناس انه نزل تحريم الخمر وهى من خمسة، من العنب والتمر والعسل والحنطة والشعير، والخمر ما خامر العقل
அனஸ் (ரலி) அவர்கள் கூறிய தாவது: (மதுபானம் தடை செய்யப்பட்ட அன்று மதீனாவின் வீதிகளில்) கொட்டப்பட்ட மது, (பழுக்காத) பேரீச்சங்காய் மது (ஃபளீக்) ஆகும். அபுந்நுஅமான் (ரஹ்) அவர்களிடமிருந்து முஹம்மத் பின் சலாம் (ரஹ்) அவர்கள் வழியாக இதே ஹதீஸ் கூடுதல் தகவலுடன் வந்துள்ளது. அந்தத் தகவலாவது: அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: (மதுபானம் தடை செய்யப்பட்ட நாளன்று) நான் அபூதல்ஹா (ரலி) அவர்களின் வீட்டில் (அங்கிருந்த) மக்களுக்கு மது ஊற்றிக் கொடுத்துக்கொண்டிருந்தேன். அப்போது (முழு) மது விலக்கிற்கான இறைவசனம் அருளப்பெற்றது. உடனே நபி (ஸல்) அவர்கள் பொது அறிவிப்புச் செய்பவர் ஒருவருக்கு (மது தடை செய்யப்பட்ட செய்தியை மக்களுக்குத் தெரிவிக்க) பொது அறிவிப்புச் செய்யும்படி உத்தரவிட்டார்கள். அவர் அவ்வாறே அறிவிப்புச் செய்தார். இதைக் கேட்டதும் அபூதல்ஹா (ரலி) அவர்கள், “வெளியே போய் இது என்ன சப்தம் என்று பார்(த்து வா)” எனச் சொன்னார்கள். உடனே நான் வெளியே சென்றேன். (பார்த்துவிட்டுத் திரும்பி வந்து), “இதோ பொது அறிவிப்புச் செய்பவர், (மக்களே!) எச்சரிக்கை! மது பானம் தடை செய்யப்பட்டுவிட்டது என்று அறிவிக்கிறார்” என்று சொன்னேன். அதற்கு அபூதல்ஹா (ரலி) அவர்கள் என்னிடம், “நீ போய், இதைக் கொட்டி விடு!” என்று சொன்னார்கள். (மக்கள் மதுவைத் தரையில் கொட்ட) அது மதீனாவின் தெருக்களில் ஓடியது. அந்த நாளில் அவர்களது மதுபானம் (பழுக்காத) பேரீச்சங்காய் மதுவாக இருந்தது. அப்போது மக்களில் சிலர், “(உஹுத் போரில்) ஒரு கூட்டத்தார் தம் வயிறுகளில் மது இருக்கக் கொல்லப்பட்டார்களே!” என்று கூறினர். அப்போதுதான், “இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிகின்றவர்கள் (விலக்கப்பட்ட பொருட்களில்) எதையேனும் (தடை செய்யப்படுவதற்கு முன்னர்) உட்கொண்டிருந்தால் அவர்கள்மீது (அது) குற்றமாகாது” எனும் (5:93ஆவது) இறைவசனத்தை அல்லாஹ் அருளினான்.17 அத்தியாயம் :
حدثنا ابو النعمان، حدثنا حماد بن زيد، حدثنا ثابت، عن انس رضى الله عنه ان الخمر، التي اهريقت الفضيخ. وزادني محمد عن ابي النعمان قال كنت ساقي القوم في منزل ابي طلحة فنزل تحريم الخمر، فامر مناديا فنادى. فقال ابو طلحة اخرج فانظر ما هذا الصوت قال فخرجت فقلت هذا مناد ينادي الا ان الخمر قد حرمت. فقال لي اذهب فاهرقها. قال فجرت في سكك المدينة. قال وكانت خمرهم يوميذ الفضيخ فقال بعض القوم قتل قوم وهى في بطونهم قال فانزل الله {ليس على الذين امنوا وعملوا الصالحات جناح فيما طعموا}
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒருநாள்) ஓர் உரை நிகழ்த்தினார்கள். அதைப் போன்ற ஓர் உரையை நான் (என் வாழ்நாளில்) ஒருபோதும் கேட்டதில்லை. (அதில்) அவர்கள், “நான் அறிகின்றவற்றை நீங்கள் அறிந்தால், நீங்கள் குறைவாகச் சிரிப்பீர்கள்; அதிகமாக அழுவீர்கள்” என்று குறிப்பிட்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய தோழர்கள் தம் முகங்களை மூடிக்கொண்டு சப்தமிட்டு அழுதார்கள். அப்போது ஒரு மனிதர், “என் தந்தை யார்?' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “இன்னார்' என்று சொன்னார்கள். அப்போதுதான், “இறைநம்பிக்கைகொண்டவர்களே! சில விஷயங்களைப் பற்றி (துருவித்துருவிக்) கேட்காதீர்கள். (ஏனெனில்,) அவை உங்களிடம் வெளிப்படுத்தப்பட்டால் அவை உங்களுக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தும்” எனும் இந்த (5:101ஆவது) இறைவசனம் அருளப்பெற்றது. இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا منذر بن الوليد بن عبد الرحمن الجارودي، حدثنا ابي، حدثنا شعبة، عن موسى بن انس، عن انس رضى الله عنه قال خطب رسول الله صلى الله عليه وسلم خطبة ما سمعت مثلها قط، قال " لو تعلمون ما اعلم لضحكتم قليلا ولبكيتم كثيرا ". قال فغطى اصحاب رسول الله صلى الله عليه وسلم وجوههم لهم خنين، فقال رجل من ابي قال فلان فنزلت هذه الاية {لا تسالوا عن اشياء ان تبد لكم تسوكم}. رواه النضر وروح بن عبادة عن شعبة
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: சிலர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் விளையாட்டாகக் கேள்வி கேட்பது வழக்கம். இவ்வாறாக ஒருவர் (நபி (ஸல்) அவர்களிடம்), “என் தந்தை யார்?” என்று கேட்டார். தமது ஒட்டகம் காணாமற் போய்விட்ட இன்னொருவர், “என் ஒட்டகம் எங்கே?” என்று கேட்டார். அப்போதுதான் அல்லாஹ், அவர்கள் விஷயத்தில் இந்த வசனத்தை அருளினான்: இறைநம்பிக்கை கொண்டவர்களே! சில விஷயங்களைப் பற்றி (துருவித் துருவிக்) கேட்காதீர்கள். (ஏனெனில்,) அவை உங்களிடம் வெளிப்படுத்தப்பட்டால் அவை உங்களுக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தும். குர்ஆன் அருளப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் அவற்றைப் பற்றி நீங்கள் வினவினால் அப்போது அவை உங்களுக்கு வெளிப்படையாகக் கூறப்பட்டுவிடும். நீங்கள் (இதுவரை விளையாட்டுத்தனமாக) வினவியவற்றை அல்லாஹ் மன்னித்துவிட்டான். அல்லாஹ் மன்னிப்பு வழங்குபவனாகவும் சகிப்புத் தன்மையுடையவனாகவும் இருக்கின்றான். (5:101) அத்தியாயம் :
حدثنا الفضل بن سهل، حدثنا ابو النضر، حدثنا ابو خيثمة، حدثنا ابو الجويرية، عن ابن عباس رضى الله عنهما قال كان قوم يسالون رسول الله صلى الله عليه وسلم استهزاء، فيقول الرجل من ابي ويقول الرجل تضل ناقته اين ناقتي فانزل الله فيهم هذه الاية {يا ايها الذين امنوا لا تسالوا عن اشياء ان تبد لكم تسوكم} حتى فرغ من الاية كلها
சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: “பஹீரா' என்பது, (அறியாமைக் காலச்) சிலைகளுக்காக (அவற்றின் பெயரால்) பால் கறக்கக் கூடாதெனத் தடை விதிக்கப்பட்டுவந்த ஒட்டகமாகும்; மக்களில் யாரும் அதன் பாலைக் கறக்கமாட்டார்கள். “சாயிபா' என்பது, (அறியாமைக் காலத்தில் நோய் குணமாதல் போன்ற தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்ற வேண்டுதலில்) சிலைகளுக்காக (நேர்ந்து) சுதந்திரமாகத் திரிய விடப்பட்டு வந்த ஒட்டகமாகும். அதன் மீது எந்தச் சுமையும் ஏற்றப்படுவதில்லை. (அது நினைத்த தண்ணீரில் வாய்வைக்கும்; நினைத்த நிலத்தில் மேயும்; யாரும் அதைத் தடுக்கமாட்டார்கள்.) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “அம்ர் பின் ஆமிர் அல்குஸாஈ' தமது குடலை இழுத்தபடி நரகத்தில் சென்று கொண்டிருப்பதை நான் கண்டேன். முதன் முதலாக “சாயிபா' (ஒட்டகத்தைச் சிலைகளுக்காக நேர்ச்சை செய்து) திரியவிட்டவர் அவர்தான்.19 “வஸீலா' என்பது, முதல் ஈற்றிலும் இரண்டாம் ஈற்றிலும் பெண்குட்டி ஈனுகின்ற இளம் ஒட்டகமாகும்; இதை (அறியாமைக் கால) மக்கள் தங்கள் சிலைகளுக்காக (நேர்ந்து) சுதந்திரமாகத் திரியவிட்டுவந்தனர். இரண்டு (ஈற்று)க்குமத்தியில் ஆண்குட்டி ஈனாமல் ஒன்றை யடுத்து மற்றொன்றும் (பெண்குட்டியாக) அமைந்திருப்பதால் (இதை “தொடர்ந்து வரக்கூடியது' எனும் பொருளில்) “வஸீலா' என்று அழைத்தனர். “ஹாம்' என்பது, குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஒட்டகங்களைச் சூல் கொள்ளச்செய்த (பொலி) ஒட்டகமாகும். இவ்வாறு சூல் கொள்ளச்செய்தபின் அந்த (பொலி) ஒட்டகத்தை (அறியாமைக் கால) மக்கள் தங்கள் சிலைகளுக்காக அப்படியே விட்டுவந்தனர்; அதன் மீது சுமை ஏற்றாமல் விட்டுவிட்டனர்; எனவே, அதன் மீது சுமை எதுவும் ஏற்றப்படவில்லை. இதை “ஹாமீ' (தன் முதுகைப் பாதுகாத்துக்கொண்ட ஒட்டகம்) என்று பெயரிட்டு அழைத்தனர். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا موسى بن اسماعيل، حدثنا ابراهيم بن سعد، عن صالح بن كيسان، عن ابن شهاب، عن سعيد بن المسيب، قال البحيرة التي يمنع درها للطواغيت فلا يحلبها احد من الناس. والسايبة كانوا يسيبونها لالهتهم لا يحمل عليها شىء. قال وقال ابو هريرة قال رسول الله صلى الله عليه وسلم " رايت عمرو بن عامر الخزاعي يجر قصبه في النار، كان اول من سيب السوايب ". والوصيلة الناقة البكر تبكر في اول نتاج الابل، ثم تثني بعد بانثى. وكانوا يسيبونهم لطواغيتهم ان وصلت احداهما بالاخرى ليس بينهما ذكر. والحام فحل الابل يضرب الضراب المعدود، فاذا قضى ضرابه ودعوه للطواغيت واعفوه من الحمل فلم يحمل عليه شىء وسموه الحامي. وقال لي ابو اليمان اخبرنا شعيب، عن الزهري، سمعت سعيدا، قال يخبره بهذا قال وقال ابو هريرة سمعت النبي صلى الله عليه وسلم نحوه. ورواه ابن الهاد عن ابن شهاب عن سعيد عن ابي هريرة رضى الله عنه سمعت النبي صلى الله عليه وسلم
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நரகத்தின் ஒரு பகுதி மற்றொரு பகுதியைத் (தின்று) தகர்த்துக்கொண்டி ருப்பதை நான் கண்டேன். “அம்ர் (பின் ஆமிர் அல்குஸாஈ' நரகத்தில்) தன் குடலை இழுத்தபடி சென்றுகொண்டிருப்பதையும் கண்டேன். முதன் முதலாக ஒட்டகங்களைச் சிலைகளுக்காக (நேர்ச்சை செய்து) திரிய விட்டவர் அவர்தான். இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثني محمد بن ابي يعقوب ابو عبد الله الكرماني، حدثنا حسان بن ابراهيم، حدثنا يونس، عن الزهري، عن عروة، ان عايشة، رضى الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم " رايت جهنم يحطم بعضها بعضا، ورايت عمرا يجر قصبه، وهو اول من سيب السوايب
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒருமுறை மக்களுக்கு) உரை நிகழ்த்தினார்கள். (அதில்), “மக்களே! நீங்கள் (மறுமையில்) செருப்பணியாதவர்களாகவும், நிர்வாணமானவர்களாகவும், விருத்த சேதனம் செய்யப்படாதவர்களாகவும் அல்லாஹ்விடம் கொண்டுவரப்படுவீர்கள்” என்று கூறிவிட்டுப் பிறகு, “எழுதப்பட்ட ஏடு சுருட்டப்படுவதைப் போன்று நாம் வானத்தைச் சுருட்டும் அந்நாளில், நாம் முதலில் எவ்வாறு படைக்கத் தொடங்கினோமோ அவ்வாறே நாம் மீண்டும் (அவர்களுக்கு உயிர் கொடுத்து) படைப்போம்” எனும் (21:104ஆவது) இறைவசனத்தை இறுதிவரை ஓதினார்கள். பிறகு, “அறிந்துகொள்ளுங்கள்: மறுமை நாளில் (சொர்க்கத்தின்) ஆடை அணிவிக்கப்படும் முதல் நபர் (இறைத்தூதர்) இப்ராஹீம் அவர்கள்தான். அறிந்துகொள்ளுங்கள்: என் சமுதாயத்தாரில் சிலர் கொண்டுவரப்பட்டு, இடப்பக் கத்(திலுள்ள நரகத்)திற்குக் கொண்டுசெல்லப்படுவார்கள். அப்போது நான், “என் இறைவா! (இவர்கள்) என் தோழர்களில் சிலர்” என்று சொல்வேன். அதற்கு, “இவர்கள் உங்களு(டைய மரணத்து)க்குப்பின் என்னவெல்லாம் புதிது புதிதாக உருவாக்கினார்கள் என்று உங்களுக்குத் தெரியாது” என்று கூறப்படும். அப்போது நான், நல்லடியார் ஈசா (அலை) அவர்கள் சொன்னதைப் போன்று, “நான் அவர்களுடன் இருந்தவரையில் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். நீ என்னைத் திரும்ப அழைத்துக்கொண்டபோது நீயே அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தாய்!” என்று பதிலளிப்பேன். அதற்கு, “இவர்களை நீங்கள் பிரிந்ததி óருந்து, இவர்கள் தங்கள் குதிகால் (சுவடு)களின் வழியே தமது மார்க்கத்திலிருந்து வெளியேறிக்கொண்டுதான் இருந்தார்கள்” என்று கூறப்படும்.20 அத்தியாயம் :
حدثنا ابو الوليد، حدثنا شعبة، اخبرنا المغيرة بن النعمان، قال سمعت سعيد بن جبير، عن ابن عباس رضى الله عنهما قال خطب رسول الله صلى الله عليه وسلم فقال " يا ايها الناس انكم محشورون الى الله حفاة عراة غرلا ثم قال {كما بدانا اول خلق نعيده وعدا علينا انا كنا فاعلين} الى اخر الاية ثم قال الا وان اول الخلايق يكسى يوم القيامة ابراهيم، الا وانه يجاء برجال من امتي فيوخذ بهم ذات الشمال، فاقول يا رب اصيحابي. فيقال انك لا تدري ما احدثوا بعدك. فاقول كما قال العبد الصالح {وكنت عليهم شهيدا ما دمت فيهم فلما توفيتني كنت انت الرقيب عليهم} فيقال ان هولاء لم يزالوا مرتدين على اعقابهم منذ فارقتهم
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் (மறுமையில் உயிருடன்) எழுப்பப்படவிருக்கிறீர்கள். சிலபேர் இடப் பக்கத்(திலுள்ள நரகத்)திற்குக் கொண்டுசெல்லப்படுவார்கள். அப்போது நான் நல்லடியார் ஈசா (அலை) அவர்கள் சொன்னதைப் போல், “நான் அவர்களுடன் இருந்தவரையில் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். நீ என்னைத் திரும்ப அழைத்துக்கொண்டபோது நீயே அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தாய்! (இப்போது) நீ அவர்களுக்கு வேதனை அளித்தால் அவர்கள் நிச்சயமாக உன்னுடைய அடியார்களே! நீ அவர்களை மன்னித்தாலும் (அப்போதும் அவர்கள் உன் அடியார்களே!) நீயே யாவற்றையும் மிகைத்தவ னும் நுண்ணறிவுடையவனுமாய் இருக்கின்றாய்” (5:117,118) என்று சொல்வேன். இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا محمد بن كثير، حدثنا سفيان، حدثنا المغيرة بن النعمان، قال حدثني سعيد بن جبير، عن ابن عباس، عن النبي صلى الله عليه وسلم قال " انكم محشورون، وان ناسا يوخذ بهم ذات الشمال، فاقول كما قال العبد الصالح {وكنت عليهم شهيدا ما دمت فيهم} الى قوله {العزيز الحكيم}
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மறைவானவற்றின் திறவுகோல்கள் ஐந்தாகும். (ஏனெனில், அல்லாஹ் கூறுகிறான்:) “நிச்சயமாக (இறுதித் தீர்ப்பிற்குரிய) அந்த நேரத்தைப் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே உள்ளது. அவனே மழையைப் பொழிவிக்கின்றான். (பெண்களின்) கருப்பைகளில் இருப்பவற்றையும் அவனே அறிவான். எந்த மனிதனும், அவன் நாளை என்ன சம்பாதிக்கப்போகிறான் என்பதை அறிவதில்லை. தாம் எந்த இடத்தில் மரணிப்பார் என்பதும் எந்த மனிதருக்கும் தெரியாது. நிச்சயமாக, அல்லாஹ்தான் (யாவற்றையும்) நன்கு அறிந்தவனாகவும் நுண்ணறிவுள்ளவனாகவும் இருக்கின் றான். (31:34)5 இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.6 அத்தியாயம் :
حدثنا عبد العزيز بن عبد الله، حدثنا ابراهيم بن سعد، عن ابن شهاب، عن سالم بن عبد الله، عن ابيه، ان رسول الله صلى الله عليه وسلم قال " مفاتح الغيب خمس ان الله عنده علم الساعة، وينزل الغيث، ويعلم ما في الارحام، وما تدري نفس ماذا تكسب غدا، وما تدري نفس باى ارض تموت، ان الله عليم خبير
ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: “(நபியே!) கூறுக: உங்களுக்கு மேலிருந்தோ உங்கள் கால்களுக்குக் கீழேயிருந்தோ ஏதேனுமொரு வேத னையை உங்கள்மீது அனுப்பவும், அல்லது உங்களைப் பல்வேறு குழுக் களாகப் பிரித்து உங்களில் சிலர் தரும் துன்பத்தை மற்றச் சிலர் சுவைக்கும்படி செய்யவும் அவன் ஆற்றலுள்ளவன்” எனும் (6:65ஆவது) இறைவசனம் அருளப்பெற்றபோது, “உங்களுக்கு மேலிருந்து ஏதேனுமொரு வேதனையை உங்கள்மீது இறக்கிவைக்கவும் அவன் ஆற்றலுள்ளவன்” என்பதைக் கேட்டவுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(இறைவா!) உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன்” என்று கூறினார்கள். “உங்கள் கால்களுக்குக் கீழேயிருந்து' என்பதைக் கேட்டவுடன் நபி (ஸல்) அவர்கள், “உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்” என்று கூறினார்கள். “அல்லது உங்களைப் பல்வேறு குழுக்களாகப் பிரித்து உங்களில் சிலர் தரும் துன்பத்தை மற்றச் சிலர் சுவைக்கும்படி செய்யவும்” என்பதைக் கேட்டவுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இது (முந்தைய வேதனைகளைவிட) “எளிதானது' அல்லது “இது சுலபமானது' ஆகும்” என்று சொன்னார்கள்.7 அத்தியாயம் :
حدثنا ابو النعمان، حدثنا حماد بن زيد، عن عمرو بن دينار، عن جابر رضى الله عنه قال لما نزلت هذه الاية {قل هو القادر على ان يبعث عليكم عذابا من فوقكم} قال رسول الله صلى الله عليه وسلم " اعوذ بوجهك ". قال {او من تحت ارجلكم} قال " اعوذ بوجهك" {او يلبسكم شيعا ويذيق بعضكم باس بعض} قال رسول الله صلى الله عليه وسلم " هذا اهون ". او " هذا ايسر
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: “எவர் இறைநம்பிக்கை கொண்டு பிறகு தமது இறைநம்பிக்கையுடன் அநீதியைக் கலக்கவில்லையோ அவர்களுக்கு உண்மையில் அமைதி உண்டு. மேலும், அவர்களே நல்வழி பெற்றவர்கள் ஆவர்” எனும் (6:82ஆவது) வசனம் அருளப்பெற்றபோது நபித்தோழர்கள், “எங்களில் எவர்தான் (தமக்குத் தாமே) அநீதியிழைக்கவில்லை?” என்று கேட்டனர். அப்போது, “இணைவைப்புத்தான் மாபெரும் அநீதியாகும்” எனும் (31:13ஆவது) இறைவசனம் அருளப்பெற்றது.8 அத்தியாயம் :
حدثني محمد بن بشار، حدثنا ابن ابي عدي، عن شعبة، عن سليمان، عن ابراهيم، عن علقمة، عن عبد الله رضى الله عنه قال لما نزلت {ولم يلبسوا ايمانهم بظلم} قال اصحابه واينا لم يظلم فنزلت {ان الشرك لظلم عظيم}
அபுல்ஆலியா ருஃபைஉ பின் மிஹ்ரான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: உங்கள் நபியினுடைய தந்தையின் சகோதரருடைய புதல்வர், அதாவது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக எனக்கு அறிவித்தார்கள்: “நான் யூனுஸ் பின் மத்தா அவர்களை விடச் சிறந்தவன்” என்று (என்னைப் பற்றிக்) கூறுவது எந்த மனிதருக்கும் தகாது.9 அத்தியாயம் :
حدثنا محمد بن بشار، حدثنا ابن مهدي، حدثنا شعبة، عن قتادة، عن ابي العالية، قال حدثني ابن عم، نبيكم يعني ابن عباس رضى الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال " ما ينبغي لعبد ان يقول انا خير من يونس بن متى
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நான் யூனுஸ் பின் மத்தா அவர்களை விடச் சிறந்தவன்” என்று (என்னைப் பற்றிக்) கூறுவது எந்த மனிதருக்கும் முறையாகாது.10 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا ادم بن ابي اياس، حدثنا شعبة، اخبرنا سعد بن ابراهيم، قال سمعت حميد بن عبد الرحمن بن عوف، عن ابي هريرة رضى الله عنه عن النبي صلى الله عليه وسلم قال " ما ينبغي لعبد ان يقول انا خير من يونس بن متى
முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், “ஸாத் (எனும் 38ஆவது) அத்தியாயத்தில் (ஓதலுக்குரிய) சஜ்தா உண்டா?” என்று கேட்டேன். அவர்கள், “ஆம் (38:24ஆவது வசனத்தில் சஜ்தா உண்டு)” என்று கூறிவிட்டு, “நாம் இப்ராஹீமுக்கு இஸ்ஹாக்கையும் யஅகூபையும் (சந்ததி களாக) வழங்கினோம்” என்று தொடங்கி, “இவர்களுடைய நல்வழியையே நீரும் பின்பற்றுவீராக!” என்பதுவரை (6:84-90 வசனங்களை) ஓதினார்கள். பிறகு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “தாவூத் (அலை) அவர்கள் இந்த (வசனத் தில் கூறப்பட்டுள்ள) இறைத்தூதர்களில் ஒருவர்தான்” என்று சொன்னார்கள். இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் பிந்திய மூன்று தொடர்களில் முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூடுதலாகக் கூறுகிறார்கள்: நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் (மேற்கண்டவாறு) கேட்டேன். அதற்கு அவர்கள், “முந்தைய இறைத்தூதர்களைப் பின்பற்றும்படி கட்டளையிடப் பட்டவர்களில் உங்கள் நபி (ஸல்) அவர்களும் ஒருவர்தான்” என்று சொன்னார்கள்.11 அத்தியாயம் :
حدثني ابراهيم بن موسى، اخبرنا هشام، ان ابن جريج، اخبرهم قال اخبرني سليمان الاحول، ان مجاهدا، اخبره انه، سال ابن عباس افي " ص " سجدة فقال نعم. ثم تلا {ووهبنا} الى قوله {فبهداهم اقتده} ثم قال هو منهم. زاد يزيد بن هارون ومحمد بن عبيد وسهل بن يوسف عن العوام عن مجاهد قلت لابن عباس فقال نبيكم صلى الله عليه وسلم ممن امر ان يقتدي بهم
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் யூதர்களைத் தன் அருளிலிருந்து அப்புறப்படுத்துவானாக! அவர்களுக்கு அல்லாஹ் செத்த பிராணி களின் கொழுப்புகளை (ஹராமாக்கித்) தடை செய்தபோது அதை அவர்கள் உருக்கி அத(ன் விலையி)னை உட்கொண்டார்கள். இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.13 அத்தியாயம் :
حدثنا عمرو بن خالد، حدثنا الليث، عن يزيد بن ابي حبيب، قال عطاء سمعت جابر بن عبد الله رضى الله عنهما سمعت النبي صلى الله عليه وسلم قال " قاتل الله اليهود، لما حرم الله عليهم شحومها جملوه ثم باعوه فاكلوها ". وقال ابو عاصم حدثنا عبد الحميد، حدثنا يزيد، كتب الى عطاء سمعت جابرا، عن النبي صلى الله عليه وسلم