ஹதீஸ்கள்
#4615
ஸஹீஹ் அல்-புகாரீ - Prophetic Commentary on the Qur'an
கைஸ் பின் அபீஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், “எங்களுடன் துணைவியர் யாரும் இல்லாத நிலையில் நபி (ஸல்) அவர்களுடன் நாங்கள் (ஓர்) அறப் போரில் கலந்துகொண்டிருந்தோம். ஆகவே, நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம், “நாங்கள் காயடித்து (ஆண்மை நீக்கம் செய்து)கொள்ளலாமா?' என்று கேட்டோம். அதற்கு அவர்கள் அப்படிச் செய்ய வேண்டாமென்று எங்களைத் தடுத்தார்கள். அதன் பிறகு துணியை (மஹ்ராக)க் கொடுத்துப் பெண்ணை மணந்துகொள்ள எங்களுக்கு அனுமதியளித்தார்கள்” என்று கூறிவிட்டுப் பிறகு, “இறைநம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ் உங்களுக்கு அனுமதித்த நல்லவற்றை விலக்கி (ஹராமாக்கி)க்கொள்ளாதீர்கள்” எனும் (5:87ஆவது) இறைவசனத்தை ஓதிக்காட்டினார்கள்.12 அத்தியாயம் :
حدثنا عمرو بن عون، حدثنا خالد، عن اسماعيل، عن قيس، عن عبد الله، رضى الله عنه قال كنا نغزو مع النبي صلى الله عليه وسلم وليس معنا نساء فقلنا الا نختصي فنهانا عن ذلك، فرخص لنا بعد ذلك ان نتزوج المراة بالثوب، ثم قرا {يا ايها الذين امنوا لا تحرموا طيبات ما احل الله لكم}
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prophetic Commentary on the Qur'an
- Hadith Index
- #4615
- Book Index
- 137
Grades
- -
