ஹதீஸ்கள்
#4620
ஸஹீஹ் அல்-புகாரீ - Prophetic Commentary on the Qur'an
அனஸ் (ரலி) அவர்கள் கூறிய தாவது: (மதுபானம் தடை செய்யப்பட்ட அன்று மதீனாவின் வீதிகளில்) கொட்டப்பட்ட மது, (பழுக்காத) பேரீச்சங்காய் மது (ஃபளீக்) ஆகும். அபுந்நுஅமான் (ரஹ்) அவர்களிடமிருந்து முஹம்மத் பின் சலாம் (ரஹ்) அவர்கள் வழியாக இதே ஹதீஸ் கூடுதல் தகவலுடன் வந்துள்ளது. அந்தத் தகவலாவது: அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: (மதுபானம் தடை செய்யப்பட்ட நாளன்று) நான் அபூதல்ஹா (ரலி) அவர்களின் வீட்டில் (அங்கிருந்த) மக்களுக்கு மது ஊற்றிக் கொடுத்துக்கொண்டிருந்தேன். அப்போது (முழு) மது விலக்கிற்கான இறைவசனம் அருளப்பெற்றது. உடனே நபி (ஸல்) அவர்கள் பொது அறிவிப்புச் செய்பவர் ஒருவருக்கு (மது தடை செய்யப்பட்ட செய்தியை மக்களுக்குத் தெரிவிக்க) பொது அறிவிப்புச் செய்யும்படி உத்தரவிட்டார்கள். அவர் அவ்வாறே அறிவிப்புச் செய்தார். இதைக் கேட்டதும் அபூதல்ஹா (ரலி) அவர்கள், “வெளியே போய் இது என்ன சப்தம் என்று பார்(த்து வா)” எனச் சொன்னார்கள். உடனே நான் வெளியே சென்றேன். (பார்த்துவிட்டுத் திரும்பி வந்து), “இதோ பொது அறிவிப்புச் செய்பவர், (மக்களே!) எச்சரிக்கை! மது பானம் தடை செய்யப்பட்டுவிட்டது என்று அறிவிக்கிறார்” என்று சொன்னேன். அதற்கு அபூதல்ஹா (ரலி) அவர்கள் என்னிடம், “நீ போய், இதைக் கொட்டி விடு!” என்று சொன்னார்கள். (மக்கள் மதுவைத் தரையில் கொட்ட) அது மதீனாவின் தெருக்களில் ஓடியது. அந்த நாளில் அவர்களது மதுபானம் (பழுக்காத) பேரீச்சங்காய் மதுவாக இருந்தது. அப்போது மக்களில் சிலர், “(உஹுத் போரில்) ஒரு கூட்டத்தார் தம் வயிறுகளில் மது இருக்கக் கொல்லப்பட்டார்களே!” என்று கூறினர். அப்போதுதான், “இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிகின்றவர்கள் (விலக்கப்பட்ட பொருட்களில்) எதையேனும் (தடை செய்யப்படுவதற்கு முன்னர்) உட்கொண்டிருந்தால் அவர்கள்மீது (அது) குற்றமாகாது” எனும் (5:93ஆவது) இறைவசனத்தை அல்லாஹ் அருளினான்.17 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prophetic Commentary on the Qur'an
- Hadith Index
- #4620
- Book Index
- 142
Grades
- -