Loading...

Loading...
நூல்கள்
௧௬௩ ஹதீஸ்கள்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (முற்காலத்தில்) பெண்ணொருத்தி தன் மகனுக்குப் பாலூட்டிக்கொண்டிருந்தாள். அவள் அவனுக்குப் பாலூட்டிக் கொண்டிருந்தபோது வாகனத்தில் சென்ற ஒருவன் அவளைக் கடந்துசென்றான். அப்பெண், ‘‘இறைவா! இவனைப் போல் என் மகன் ஆகும்வரை அவனுக்கு நீ மரணத்தைத் தராதே” என்று பிரார்த்தித்தாள். உடனே அந்தக் குழந்தை, ‘‘இறைவா! என்னை இவனைப் போல் ஆக்கிவிடாதே” என்று பிரார்த்தித்தது. பிறகு திரும்பச் சென்று (அவளது) மார்பில் பால் அருந்தலாயிற்று. பிறகு (தரையில்) இழுபட்டுக்கொண்டே வந்த ஒரு பெண் அவளைக் கடந்துசென்றாள். அவளைப் பிறர் கேலி செய்து விளையாட் டுப் பொருளாக நடத்திக்கொண்டிருந்தனர். (தன் குழந்தைக்குப் பாலூட்டிக்கொண்டிருந்த) அந்தப் பெண், ‘‘இறைவா! என் மகனை இவளைப் போல் ஆக்கிவிடாதே” என்று பிரார்த்தித்தாள். உடனே அக் குழந்தை, ‘‘இறைவா! என்னை இவளைப் போல் ஆக்கு” என்று பிரார்த்தித்தது. பிறகு அது, ‘‘வாகனத்தில் சென்றவன் இறைமறுப்பாளன் ஆவான். இந்தப் பெண்ணோ, இவளைப் பற்றி மக்கள் யிஇவள் விபசாரம் செய்கிறாள்’ என்று (அபாண்டமாகக்) கூறுகிறார்கள். ஆனால், இவள், யிஎனக்கு அல்லாஹ்வே போதுமானவன்’ என்று கூறுகிறாள். அவர்கள், யிஇவள் திருடுகிறாள்’ என்று (அவதூறாகக்) கூறுகிறார்கள். இவள், யிஎனக்கு அல்லாஹ்வே போதுமானவன்’ என்று கூறுகிறாள்” என (அக்குழந்தை) சொல்லிற்று. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.137 அத்தியாயம் :
حدثنا ابو اليمان، اخبرنا شعيب، حدثنا ابو الزناد، عن عبد الرحمن، حدثه انه، سمع ابا هريرة رضى الله عنه انه سمع رسول الله صلى الله عليه وسلم يقول " بينما امراة ترضع ابنها اذ مر بها راكب وهى ترضعه، فقالت اللهم لا تمت ابني حتى يكون مثل هذا. فقال اللهم لا تجعلني مثله. ثم رجع في الثدى، ومر بامراة تجرر ويلعب بها فقالت اللهم لا تجعل ابني مثلها. فقال اللهم اجعلني مثلها. فقال اما الراكب فانه كافر، واما المراة فانهم يقولون لها تزني. وتقول حسبي الله. ويقولون تسرق. وتقول حسبي الله
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (முன்னொரு காலத்தில்) நாய் ஒன்று ஒரு கிணற்றைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தது. அது தாகத்தால் செத்துவிடும் நிலையில் இருந்தது. அப்போது, இஸ்ரவேலர் சமுதாயத்தின் விபசாரிகளில் ஒருத்தி அதைப் பார்த்தாள். உடனே, அவள் தன் காலுறையைக் கழற்றி (அதில் தண்ணீரை எடுத்து) அந்த நாய்க்குப் புகட்டினாள். அதன் காரணமாக அவளுக் குப் பாவமன்னிப்பு வழங்கப்பட்டது. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا سعيد بن تليد، حدثنا ابن وهب، قال اخبرني جرير بن حازم، عن ايوب، عن محمد بن سيرين، عن ابي هريرة رضى الله عنه قال قال النبي صلى الله عليه وسلم " بينما كلب يطيف بركية كاد يقتله العطش، اذ راته بغي من بغايا بني اسراييل، فنزعت موقها فسقته، فغفر لها به
ஹுமைத் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: முஆவியா (ரலி) அவர்கள் ஹஜ் செய்த ஆண்டில் சொற்பொழிவு மேடை மீதிருந்தபடி, காவலர் ஒருவரின் கையிலிருந்த முடிக்கற்றை (சவுரி முடி) ஒன்றை எடுத்து (கையில் வைத்துக்கொண்டு), ‘‘மதீனாவாசிகளே! உங்கள் (மார்க்க) அறிஞர்கள் எங்கே?” என்று கேட்டுவிட்டு, ‘‘நபி (ஸல்) அவர்கள் இது போன்றதி லிருந்து (மக்களைத்) தடுப்பதையும், இஸ்ரவேலர்கள் அழிந்துபோனதெல்லாம் இதை அவர்களுடைய பெண்கள் பயன் படுத்தியபோதுதான்’ என்று சொல்வதையும் நான் செவியுற்றிருக்கிறேன்” என்று சொல்லக் கேட்டேன். அத்தியாயம் :
حدثنا عبد الله بن مسلمة، عن مالك، عن ابن شهاب، عن حميد بن عبد الرحمن، انه سمع معاوية بن ابي سفيان،، عام حج على المنبر، فتناول قصة من شعر وكانت في يدى حرسي فقال يا اهل المدينة، اين علماوكم سمعت النبي صلى الله عليه وسلم ينهى عن مثل هذه، ويقول " انما هلكت بنو اسراييل حين اتخذها نساوهم
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: உங்களுக்குமுன் வாழ்ந்த சமுதாயங் களில், (பல்வேறு பிரச்சினைகளில் சரியான தீர்வு எது என்பது குறித்து இறையருளால்) முன்கூட்டியே அறிவிக்கப்பட்டவர்கள் இருந்திருக்கிறார்கள். அத்தகையவர்களில் எவரேனும் எனது இந்தச் சமுதாயத்தில் இருப்பாராயின், அது உமர் பின் அல்கத்தாப் அவர்கள்தான். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا عبد العزيز بن عبد الله، حدثنا ابراهيم بن سعد، عن ابيه، عن ابي سلمة، عن ابي هريرة رضى الله عنه عن النبي صلى الله عليه وسلم قال " انه قد كان فيما مضى قبلكم من الامم محدثون، وانه ان كان في امتي هذه منهم، فانه عمر بن الخطاب
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: இஸ்ரவேலர்களில் ஒரு மனிதர் இருந் தார். அவர் தொண்ணூற்றொன்பது மனிதர் களைக் கொன்றுவிட்டிருந்தார். பிறகு (தன் குற்றங்களுக்காக மனம் வருந்தி, தனக்கு மன்னிப்புக் கிடைக்குமா என்று) விசாரித்த படி, ‘‘(எனக்குப்) பாவமன்னிப்புக் கிடைக் குமா?” என்று ஒரு பாதிரியாரிடம் வந்து கேட்டார். அந்தப் பாதிரியார், ‘‘கிடைக்காது” என்று கூற, அவரையும் அம்மனிதர் கொன்றுவிட்டார். பிறகு (மீண்டும் மனம் வருந்தி) விசாரிக்கலானார். அப்போது ஒரு மனிதர், ‘‘(நல்லோர் வாழும்) இன்ன ஊருக்குப் போ!” என்று அவருக்குச் சொன்னார். (அந்த ஊரை நோக்கி அவர் சென்றபோது பாதி வழியில்) மரணம் அவரைத் தழுவி யது. (மரணத் தருவாயில்) அவர் தன் நெஞ்சை அந்த ஊர் இருக்கும் திசையில் சாய்த்துக்கொண்(டே இறந்துவிட்)டார். அப்போது இறையருளைப் பொழியும் வானவர்களும் இறை தண்டனைகளை நிறைவேற்றும் வானவர்களும் அவர் விஷயத்தில் (அவரை யார் அழைத்துச் செல்வது என்று) சச்சரவிட்டுக்கொண்டனர். உடனே அல்லாஹ் அதை நோக்கி, ‘‘நீ நெருங்கி வா!” என்று (அவர் செல்லவிருந்த ஊருக்கு) உத்தரவிட்டான். இதை நோக்கி, ‘‘நீ தூரப் போ!” என்று (அவர் வசித்துவந்த ஊருக்கு) உத்தரவிட்டான். பிறகு, ‘‘அவ்விரண்டுக்குமிடையே உள்ள தூரத்தைக் கணக்கெடுங்கள்” என்று (வானவர்களுக்குக்) கூறினான். (அவ்வாறே கணக்கெடுத்தபோது) செல்லவிருந்த ஊருக்கு (அவர் வசித்துவந்த ஊரைவிட ஒரே) ஒரு சாண் அளவுக்கு அவர் (உடைய உடல்) சமீபமாக இருந்த காரணத்தால் அவருக்குப் பாவமன்னிப்பு வழங்கப்பட்டது. இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا محمد بن بشار، حدثنا محمد بن ابي عدي، عن شعبة، عن قتادة، عن ابي الصديق الناجي، عن ابي سعيد رضى الله عنه عن النبي صلى الله عليه وسلم قال " كان في بني اسراييل رجل قتل تسعة وتسعين انسانا ثم خرج يسال، فاتى راهبا فساله، فقال له هل من توبة قال لا. فقتله، فجعل يسال، فقال له رجل ايت قرية كذا وكذا. فادركه الموت فناء بصدره نحوها، فاختصمت فيه ملايكة الرحمة وملايكة العذاب، فاوحى الله الى هذه ان تقربي. واوحى الله الى هذه ان تباعدي. وقال قيسوا ما بينهما. فوجد الى هذه اقرب بشبر، فغفر له
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபஜ்ர் தொழுகை தொழுதார்கள். பிறகு மக்களை நோக்கி, ‘‘(இஸ்ரவேலர்களில்) ஒரு மனிதர் ஒரு பசுமாட்டை ஓட்டிச் சென்றுகொண்டிருக்கையில் அதில் ஏறி னார். பிறகு அதை அடித்தார். அப்போது அந்தப் பசுமாடு, ‘‘நாங்கள் இதற்காக (மனிதர்களாகிய உங்களைச் சுமந்து செல்வதற்காகப்) படைக்கப்படவில்லை. நாங்கள் படைக்கப்பட்டது (நிலத்தை) உழுவதற்காகத்தான்” என்று கூறியது எனச் சொன்னார்கள். மக்கள், ‘‘சுப்ஹானல்லாஹ்! (அல்லாஹ் தூயவன்!) பசுமாடு பேசுமா?” என்று (வியந்துபோய்க்) கூறினார்கள். இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், ‘‘நானும் அபூபக்ரும் உமரும் இதை நம்புகிறோம்” என்று சொன்னார்கள். அப்போது அங்கே அபூபக்ர் (ரலி) அவர்களும் உமர் (ரலி) அவர்களும் இருக்கவில்லை. தொடர்ந்து, நபி (ஸல்) அவர்கள், ‘‘ஒரு மனிதர் தன் ஆடுகளுக்கிடையே (அவற்றை மேய்த்துக்கொண்டு) இருந்தபோது ஓநாய் (ஆட்டு மந்தைக்குள்) புகுந்து ஆட்டை(த் தாக்கிக் கவ்வி)க்கொண்டு சென்றுவிட்டது. அந்த ஆட்டைத் தேடி, ஓநாயிடமிருந்து அவர் காப்பாற்றிவிட்டார். அப்போது அந்த ஓநாய் அவரைப் பார்த்து, யிஏய்! இதை என்னிடமிருந்து இன்று நீ காப்பாற்றிவிட்டாய். ஆனால், கொடிய விலங்குகள் ஆதிக்கம் செலுத்தும் (உலக முடிவு) நாளில் இதற்கு (பாதுகாவலர்) யார் இருக்கிறார்கள்? அந்நாளில் இதற்கு என்னைத் தவிர பாதுகாவலர் யாரும் இல்லையே’ என்று கூறியது” எனச் சொன்னார்கள். அப்போதும் மக்கள், ‘‘சுப்ஹானல்லாஹ்! (அல்லாஹ் தூயவன்!) ஓநாய் பேசுமா?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘நானும் அபூபக்ரும், உமரும் இதை நம்புகிறோம்” என்று சொன்னார்கள். அபூபக்ர் (ரலி) அவர்களும் உமர் (ரலி) அவர்களும் அங்கே அப்போது இருக்க வில்லை.138 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا علي بن عبد الله، حدثنا سفيان، حدثنا ابو الزناد، عن الاعرج، عن ابي سلمة، عن ابي هريرة رضى الله عنه قال صلى رسول الله صلى الله عليه وسلم صلاة الصبح، ثم اقبل على الناس، فقال " بينا رجل يسوق بقرة اذ ركبها فضربها فقالت انا لم نخلق لهذا، انما خلقنا للحرث ". فقال الناس سبحان الله بقرة تكلم. فقال " فاني اومن بهذا انا وابو بكر وعمر وما هما ثم وبينما رجل في غنمه اذ عدا الذيب فذهب منها بشاة، فطلب حتى كانه استنقذها منه، فقال له الذيب هذا استنقذتها مني فمن لها يوم السبع، يوم لا راعي لها غيري ". فقال الناس سبحان الله ذيب يتكلم. قال " فاني اومن بهذا انا وابو بكر وعمر ". وما هما ثم. وحدثنا علي، حدثنا سفيان، عن مسعر، عن سعد بن ابراهيم، عن ابي سلمة، عن ابي هريرة، عن النبي صلى الله عليه وسلم بمثله
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: இஸ்ரவேலர்களில் ஒரு மனிதர் இன்னொரு மனிதரிடமிருந்து அவருடைய அசையாச் சொத்து (நிலம்) ஒன்றை வாங்கி னார். அந்த நிலத்தை வாங்கிய மனிதர் தமது நிலத்தில் தங்கம் நிரம்பிய (களிமண்) ஜாடி ஒன்றைக் கண்டெடுத்தார். நிலத்தை வாங்கியவர் (நிலத்தை) விற்றவரிடம், ‘‘என்னிடமிருந்து உன் தங்கத்தை எடுத்துக் கொள். (ஏனெனில்), உன்னிடமிருந்து நான் நிலத்தைத்தான் வாங்கினேன்; இந்தத் தங்கத்தை வாங்கவில்லை” என்று கூறினார். நிலத்தின் (முந்தைய) உரிமையாளர், ‘‘நிலத்தை, அதிலிருப்பவற்றுடன் சேர்த்துத்தான் உனக்கு நான் விற்றேன். (ஆகவே, இந்தத் தங்கம் உனக்குத்தான் உரியது)” என்று கூறினார். (இருவருக்குமிடையே தகராறு முற்றி) மற்றொரு மனிதரிடம் தீர்ப்புக் கேட்டு சென்றனர். அவர்கள் இருவரும் தீர்ப்புக் கேட்டு சென்ற அந்த மனிதர், ‘‘உங்கள் இருவருக்கும் குழந்தை இருக்கிறதா?” என்று கேட்டார். அவ்விருவரில் ஒருவர், ‘‘எனக்குப் பையன் ஒருவன் இருக்கிறான்” என்று சொன்னார். மற்றொருவர், ‘‘எனக்கு மகள் ஒருத்தி இருக்கிறாள்” என்று சொன்னார். தீர்ப்புச் சொல்பவர், ‘‘அந்தப் பையனுக்கு அந்தச் சிறுமியை மணமுடித்துவையுங்கள். அவர்கள் இருவருக்காகவும் அதிலிருந்து செலவழி யுங்கள்; தானதர்மமும் செய்யுங்கள்” என்று தீர்ப்பளித்தார். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا اسحاق بن نصر، اخبرنا عبد الرزاق، عن معمر، عن همام، عن ابي هريرة رضى الله عنه قال قال النبي صلى الله عليه وسلم " اشترى رجل من رجل عقارا له، فوجد الرجل الذي اشترى العقار في عقاره جرة فيها ذهب، فقال له الذي اشترى العقار خذ ذهبك مني، انما اشتريت منك الارض، ولم ابتع منك الذهب. وقال الذي له الارض انما بعتك الارض وما فيها، فتحاكما الى رجل، فقال الذي تحاكما اليه الكما ولد قال احدهما لي غلام. وقال الاخر لي جارية. قال انكحوا الغلام الجارية، وانفقوا على انفسهما منه، وتصدقا
ஆமிர் பின் சஅத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (என் தந்தை) சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் உசாமா பின் ஸைத் (ரலி) அவர்களிடம், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து கொள்ளை நோயைப் பற்றி நீங்கள் செவியுற்றிருக் கிறீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு உசாமா (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், யிகொள்ளை நோய் என்பது இஸ்ரவேலர் களின் ஒரு கூட்டத்தார்மீது லிஅல்லது உங்களுக்கு முன்னிருந்தவர்கள்மீதுலி (அவர்களுடைய அட்டூழியங்கள் அதி கரித்தபோது) அனுப்பப்பட்ட ஒரு (வகை) வேதனையாகும். அது ஒரு பிரதேசத்தில் இருப்பதாக நீங்கள் கேள்விப்பட்டால் அங்கே நீங்கள் செல்லாதீர்கள். நீங்கள் இருக்கின்ற ஒரு பூமியில் அது பரவிவிட்டால், அதிலிருந்து தப்பியோட முனைந்தவர்களாக (அங்கிருந்து) வெளியேறாதீர்கள்” என்று சொன்னார்கள் எனப் பதிலளித்தார்கள். அபுந்நஸ்ர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அதிலிருந்து தப்பியோடும் நோக்கம் மட்டுமே கொண்டு நீங்கள் அங்கிருந்து வெளியேறக் கூடாது. (வேறு ஏதாவது காரணத்திற்காக அங்கிருந்து நீங்கள் வெளியேறினால் அதற்கு அனுமதியுண்டு.) அத்தியாயம் :
حدثنا عبد العزيز بن عبد الله، قال حدثني مالك، عن محمد بن المنكدر، وعن ابي النضر، مولى عمر بن عبيد الله عن عامر بن سعد بن ابي وقاص، عن ابيه، انه سمعه يسال، اسامة بن زيد ماذا سمعت من، رسول الله صلى الله عليه وسلم في الطاعون فقال اسامة قال رسول الله صلى الله عليه وسلم " الطاعون رجس ارسل على طايفة من بني اسراييل او على من كان قبلكم، فاذا سمعتم به بارض فلا تقدموا عليه، واذا وقع بارض وانتم بها فلا تخرجوا فرارا منه ". قال ابو النضر " لا يخرجكم الا فرارا منه
நபி (ஸல்) அவர்களின் துணை வியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொள்ளைநோய் பற்றிக் கேட்டேன் அதற்கு அவர்கள், ‘‘அது, தான் நாடியவர்கள்மீது அல்லாஹ் அனுப்புகின்ற வேதனையாகும். அல்லாஹ் அதை இறை நம்பிக்கையாளர்களுக்குக் கருணையாக ஆக்கியுள்ளான்” என்று தெரிவித்தார்கள். மேலும், ‘‘கொள்ளைநோய் பரவிய இடத்தில் இருப்பவர் எவரேனும் பொறுமையுடனும், இறைவெகுமதியை விரும்பியவராகவும், அல்லாஹ் நமக்கு எழுதியுள்ள (விதிப்படி நம்மைப் பீடிக்க விருப்ப)தைத் தவிர வேறெதுவும் நம்மைப் பீடிக்காது என்னும் நம்பிக்கை கொண்டவராகவும் தமது ஊரிலேயே தங்கியிருப்பாராயின் இறைவழியில் உயிர்த் தியாகம் செய்தவர் பெறுவதைப் போன்ற நற்பலன் அவருக்கும் நிச்சயம் கிடைக்கும்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا موسى بن اسماعيل، حدثنا داود بن ابي الفرات، حدثنا عبد الله بن بريدة، عن يحيى بن يعمر، عن عايشة رضى الله عنها زوج النبي صلى الله عليه وسلم قالت سالت رسول الله صلى الله عليه وسلم عن الطاعون، فاخبرني " انه عذاب يبعثه الله على من يشاء، وان الله جعله رحمة للمومنين، ليس من احد يقع الطاعون فيمكث في بلده صابرا محتسبا، يعلم انه لا يصيبه الا ما كتب الله له، الا كان له مثل اجر شهيد
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (மக்கா வெற்றியின்போது) மக்ஸூமீ குலத்துப் பெண் ஒருத்தி (ஃபாத்திமா பின்த் அல்அஸ்வத்) திருடிவிட்டார். அவர் விஷயமாக குறைஷியர் மிகவும் கவலைக்குள்ளாயினர். ‘‘அவர் தொடர்பாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் யார் பேசுவார்கள்?” என்று தமக்குள் பேசிக்கொண்டனர். அவர்களில் சிலர், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய செல்லப் பிள்ளையான உசாமா பின் ஸைத் (ரலி) அவர்களைத் தவிர இதற்கு யாருக்குத் துணிவு வரும்?” என்று கூறினர். (உசாமா (ரலி) அவர்களிடம் பரிந்துரை செய்யும்படி அவர்கள் கேட்டுக்கொள்ள, அவ்வாறே) உசாமா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் (அவர் விஷயமாகப்) பேசினார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தண்டனைகளில் ஒரு தண்டனையின் விஷயத்திலா (அதைத் தளர்த்தும்படி என்னிடம்) நீ பரிந்துரை செய்கிறாய்?” என்று (கோபத்து டன்) கேட்டுவிட்டு, பிறகு எழுந்து நின்று உரை நிகழ்த்தினார்கள். பிறகு (அவ்வுரை யில்), ‘‘உங்களுக்கு முன்னிருந்தவர்கள், அழிக்கப்பட்டதெல்லாம் அவர்களில் உயர் குலத்தவன் திருடிவிட்டால் அவர்கள் அவனை (தண்டிக்காமல்) விட்டுவந்தார்கள்; அவர்களில் பலவீனமானவன் திருடி விட்டால் அவனுக்குத் தண்டனையளித்து வந்தார்கள் என்பதால்தான். அல்லாஹ்வின் மீதாணையாக! முஹம்மதின் மகள் ஃபாத்திமா திருடியிருந்தாலும் அவரது கையையும் நான் துண்டித்திருப்பேன்” என்று சொன்னார்கள். அத்தியாயம் :
حدثنا قتيبة بن سعيد، حدثنا ليث، عن ابن شهاب، عن عروة، عن عايشة رضى الله عنها ان قريشا، اهمهم شان المراة المخزومية التي سرقت، فقال ومن يكلم فيها رسول الله صلى الله عليه وسلم فقالوا ومن يجتري عليه الا اسامة بن زيد، حب رسول الله صلى الله عليه وسلم، فكلمه اسامة، فقال رسول الله صلى الله عليه وسلم " اتشفع في حد من حدود الله ". ثم قام فاختطب، ثم قال " انما اهلك الذين قبلكم انهم كانوا اذا سرق فيهم الشريف تركوه، واذا سرق فيهم الضعيف اقاموا عليه الحد، وايم الله، لو ان فاطمة ابنة محمد سرقت لقطعت يدها
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் குர்ஆனின் ஒரு வசனத்தை ஓத நான் கேட்டேன். அவர் ஓதிய முறைக்கு மாற்றமாக நபி (ஸல்) அவர்கள் ஓத நான் கேட்டிருந்தேன். ஆகவே, அவரை அழைத்துக்கொண்டு நபி (ஸல்) அவர்களிடம் வந்து விவரத்தைத் தெரிவித்தேன். அப்போது அவர்களின் முகத்தில் அதிருப்தி(யின் சாயல்) படிந்திருப்பதை உணர்ந்தேன். அவர்கள், ‘‘நீங்கள் இருவருமே சரியாகத்தான் ஓதியிருக்கிறீர்கள். (எல்லா விஷயங்களிலும்) கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள். ஏனெனில், உங்களுக்கு முன்னிருந்தவர்கள் (ஒவ்வொரு விஷயத்திலும்) கருத்து வேறுபாடு கொண்டு அதனால்தான் அழிந்துபோனார்கள்” என்று சொன்னார்கள்.139 அத்தியாயம் :
حدثنا ادم، حدثنا شعبة، حدثنا عبد الملك بن ميسرة، قال سمعت النزال بن سبرة الهلالي، عن ابن مسعود رضى الله عنه قال سمعت رجلا، قرا، وسمعت النبي صلى الله عليه وسلم يقرا خلافها فجيت به النبي صلى الله عليه وسلم فاخبرته فعرفت في وجهه الكراهية وقال " كلاكما محسن، ولا تختلفوا، فان من كان قبلكم اختلفوا فهلكوا
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: (முற்கால) இறைத்தூதர்களில் ஒருவரின் நிலையை நபி (ஸல்) அவர்கள் எடுத் துரைத்துக்கொண்டிருப்பதை நான் இப்போதும் பார்ப்பதைப் போன்றுள்ளது. ‘‘அந்த இறைத்தூதரை அவருடைய சமுதாயத்தார் அடித்து அவரை இரத்தத் தில் தோய்த்துவிட்டார்கள். அப்போது அவர் தமது முகத்திலிருந்து இரத்தத்தைத் துடைத்தபடி, யிஇறைவா! என் சமுதாயத் தாரை மன்னித்துவிடு! ஏனெனில், அவர்கள் அறியாதவர்களாயிருக்கிறார்கள்’ என்று சொல்லிக்கொண்டிருந்தார்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا عمر بن حفص، حدثنا ابي، حدثنا الاعمش، قال حدثني شقيق، قال عبد الله كاني انظر الى النبي صلى الله عليه وسلم يحكي نبيا من الانبياء ضربه قومه فادموه، وهو يمسح الدم عن وجهه، ويقول " اللهم اغفر لقومي فانهم لا يعلمون
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: உங்களுக்குமுன் (ஒரு காலத்தில்) ஒரு மனிதர் இருந்தார். அவருக்கு அல்லாஹ் செல்வத்தை வழங்கியிருந்தான். அவருக்கு மரணம் நெருங்கியபோது தம் மகன்களிடம், ‘‘உங்களுக்கு நான் எப்படிப்பட்ட தந்தை யாக இருந்தேன்?” என்று கேட்டார். அவர்கள், ‘‘சிறந்த தந்தையாக இருந்தீர்கள்” என்று பதில் கூறினர். அதற்கு அவர், ‘‘நான் நற்செயல் எதையும் செய்யவேயில்லை. ஆகவே, நான் இறந்துவிட்டால் என்னை எரித்துவிடுங்கள். பிறகு என்னைப் பொடிப்பொடியாக்கி சூறாவளிக் காற்று வீசும் நாளில் (காற்றில்) என்னைத் தூவிவிடுங்கள்” என்று சொன்னார். அவர்களும் அவ்வாறே செய்தனர். அவரை (அவரது உடல் அணுக்களை) வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் ஒன்றுதிரட்டி (முழு உருவை மீண்டும் அளித்து) ‘‘இப்படிச் செய்ய உத்தரவிடும்படி உன்னைத் தூண்டியது எது?” என்று கேட்டான். அவர், ‘‘உன்(மீது எனக்குள்ள) அச்சம்தான் (இப்படி உத்தரவிட என்னைத் தூண்டியது)” என்று சொன்னார். உடனே அவரைத் தன் கருணையால் அல்லாஹ் அரவணைத்துக் கொண்டான். இதை அபூசயீத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا ابو الوليد، حدثنا ابو عوانة، عن قتادة، عن عقبة بن عبد الغافر، عن ابي سعيد رضى الله عنه عن النبي صلى الله عليه وسلم " ان رجلا كان قبلكم رغسه الله مالا فقال لبنيه لما حضر اى اب كنت لكم قالوا خير اب. قال فاني لم اعمل خيرا قط، فاذا مت فاحرقوني ثم اسحقوني ثم ذروني في يوم عاصف. ففعلوا، فجمعه الله عز وجل، فقال ما حملك قال مخافتك. فتلقاه برحمته ". وقال معاذ حدثنا شعبة، عن قتادة، سمعت عقبة بن عبد الغافر، سمعت ابا سعيد الخدري، عن النبي صلى الله عليه وسلم
ரிப்யீ பின் ஹிராஷ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: உக்பா பின் அம்ர் (ரலி) அவர்கள் ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்களிடம், ‘‘நபி (ஸல்) அவர்களிடமிருந்து நீங்கள் செவியுற்றதை எங்களுக்கு அறிவிக்கக் கூடாதா?” என்று கேட்டார்கள். ஹுதைஃபா (ரலி) அவர்கள் கூறினார்கள்: நான் நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு சொல்லக் கேட்டிருக்கிறேன்: ‘‘(மண்ணறையைத் தோண்டி கஃபன் துணியைத் திருடி விற்றுவந்த) ஒரு மனிதருக்கு மரண (நேர)ம் வந்தது. அவர் இனி வாழ்வோம் என்ற நம்பிக்கையை இழந்தபோது தம் குடும்பத்தாரிடம் தமது இறுதி விருப்பத்தைத் தெரிவித்தார். யிநான் இறந்துவிட்டால் எனக்கு நிறைய விறகுகளைச் சேகரித்து (சிதைக்குத்) தீ மூட்டிவிடுங்கள். அந்த நெருப்பு என் இறைச்சியைத் தின்று முடித்து என் எலும்பைச் சென்றடைந்துவிட்டால், எரிந்து கருகிய எலும்புகளை எடுத்து அவற்றைப் பொடியாக்கி ஒரு வெப்பமான நாளில் லிஅல்லது காற்று அதிகம் வீசும் ஒரு நாளில்லி என்னைக் கடலில் தூவிவிடுங்கள்” என்று சொன்னார். (அவ்வாறே அவர்கள் செய்ய) அல்லாஹ் அவரை (அவரது அணுக்களை) ஒன்றுதிரட்டி, (முழு உருவையளித்து), ‘‘ஏன் (இவ்வாறு) செய்தாய்?” என்று கேட்டான். அவர், ‘‘உன் அச்சத்தால்தான்” என்று சொன்னார். எனவே, அவருக்கு அல்லாஹ் மன்னிப்பளித்தான்.140 வேறொரு அறிவிப்பில், உக்பா (ரலி) அவர்கள், ‘‘ஹுதைஃபா (ரலி) அவர்கள் கூற நான் கேட்டேன்...” என்று சொன்னார்கள். அதில் ‘‘காற்று அதிகமாக வீசும் ஒரு நாளில்” என்னும் வாசகம் (மட்டுமே) இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
حدثنا مسدد، حدثنا ابو عوانة، عن عبد الملك بن عمير، عن ربعي بن حراش، قال قال عقبة لحذيفة الا تحدثنا ما سمعت من النبي صلى الله عليه وسلم. قال سمعته يقول " ان رجلا حضره الموت، لما ايس من الحياة، اوصى اهله اذا مت فاجمعوا لي حطبا كثيرا، ثم اوروا نارا حتى اذا اكلت لحمي، وخلصت الى عظمي، فخذوها فاطحنوها، فذروني في اليم في يوم حار او راح. فجمعه الله، فقال لم فعلت قال خشيتك. فغفر له ". قال عقبة وانا سمعته يقول. حدثنا موسى حدثنا ابو عوانة حدثنا عبد الملك وقال " في يوم راح
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (முற்காலத்தில்) ஒரு மனிதர் மக்களுக் குக் கடன் கொடுத்து (உதவி) வந்தார். (அதை வசூலிக்கச் செல்கின்ற) தம் (அலுவலரான) வாலிபரிடம், ‘‘(வசதியின்றிச்) சிரமப்படுபவரிடம் நீ சென்றால் (அவரை) மன்னித்து(க் கடனைத் தள்ளுபடி செய்து) விடு. அல்லாஹ்வும் நம்மை மன்னித்து விடக்கூடும்” என்று சொல்லிவந்தார். அவர் (மரணமடைந்து) அல்லாஹ்வைச் சந்தித்தபோது அவருடைய பிழைகளைப் பொறுத்து அவன் மன்னித்து விட் டான்.141 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا عبد العزيز بن عبد الله، حدثنا ابراهيم بن سعد، عن ابن شهاب، عن عبيد الله بن عبد الله بن عتبة، عن ابي هريرة، ان رسول الله صلى الله عليه وسلم قال " كان الرجل يداين الناس، فكان يقول لفتاه اذا اتيت معسرا فتجاوز عنه، لعل الله ان يتجاوز عنا. قال فلقي الله فتجاوز عنه
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: (முற்காலத்தில்) ஒரு மனிதர், எல்லை மீறி (தீய செயல் புரிந்து)வந்தார். அவருக்கு மரணம் வந்தபோது தம் மகன்களை அழைத்து, ‘‘நான் இறந்துவிட்டால் என்னை எரித்துவிடுங்கள். பிறகு என்னைப் பொடிப் பொடியாக்கி பின்னர் காற்றில் தூவிவிடுங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! (இவ்வளவும் செய்த பிறகும்) அல்லாஹ் என்னை உயிராக்க முடிந்தால் எவரையும் வேதனைப்படுத்தாத அளவுக்கு ஒரு வேதனையை (தண்டனையாக) எனக்கு அவன் அளிப்பான்” என்று கூறினார். அவர் இறந்தபோது அவ்வாறே அவரைச் செய்துவிட்டார்கள். உடனே உயர்ந்தோன் அல்லாஹ், பூமியை நோக்கி, ‘‘அவரி(ன் உடல் அணுக்களி)லிருந்து உன்னில் இருப்பவற்றை ஒன்றுசேர்” என்று கட்டளையிட்டான். அவ்வாறே பூமி செய்தது. அவர் (அல்லாஹ்வின் முன்னிலையில் முழு உருப்பெற்று) நின்ற போது அல்லாஹ், ‘‘நீ இப்படிச் செய்யும் படி உன்னைத் தூண்டியது எது?” என்று கேட்டான். அவர், ‘‘என் இறைவா! உன் அச்சம்தான் இப்படிச் செய்யும்படி என் னைத் தூண்டியது” என்று பதிலளித்தார். ஆகவே, அவருக்கு அல்லாஹ் மன்னிப் பளித்தான். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثني عبد الله بن محمد، حدثنا هشام، اخبرنا معمر، عن الزهري، عن حميد بن عبد الرحمن، عن ابي هريرة رضى الله عنه عن النبي صلى الله عليه وسلم قال " كان رجل يسرف على نفسه، فلما حضره الموت قال لبنيه اذا انا مت فاحرقوني ثم اطحنوني ثم ذروني في الريح، فوالله لين قدر على ربي ليعذبني عذابا ما عذبه احدا. فلما مات فعل به ذلك، فامر الله الارض، فقال اجمعي ما فيك منه. ففعلت فاذا هو قايم، فقال ما حملك على ما صنعت قال يا رب، خشيتك. فغفر له ". وقال غيره " مخافتك يا رب
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு பூனையை, அது சாகும்வரை (பட்டினி போட்டு) கட்டிவைத்த காரணத்தால் பெண் ஒருத்தி (நரகத்தில்) வேதனை செய்யப்பட்டாள். அதை அடைத்து வைத்தபோது அவள் அதற்குத் தீனியும் போடவில்லை; அதற்கு (குடிக்கத்) தண்ணீரும் கொடுக்கவில்லை; அவள் அதை பூமியின் புழுபூச்சிகளைத் தின்ன (அவிழ்த்து)விடவுமில்லை. இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.142 அத்தியாயம் :
حدثني عبد الله بن محمد بن اسماء، حدثنا جويرية بن اسماء، عن نافع، عن عبد الله بن عمر رضى الله عنهما ان رسول الله صلى الله عليه وسلم قال " عذبت امراة في هرة سجنتها حتى ماتت، فدخلت فيها النار، لا هي اطعمتها ولا سقتها اذ حبستها، ولا هي تركتها تاكل من خشاش الارض
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்கள் இறைத் தூதர்களின் சொற்களிலிருந்து பெற்ற (அறிவுரைகளில்) ஒன்றுதான், ‘‘உனக்கு நாணம் இல்லையேல் நாடியதைச் செய்துகொள்” என்பதும். இதை அபூமஸ்ஊத் உக்பா பின் அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا احمد بن يونس، عن زهير، حدثنا منصور، عن ربعي بن حراش، حدثنا ابو مسعود، عقبة قال قال النبي صلى الله عليه وسلم " ان مما ادرك الناس من كلام النبوة، اذا لم تستحي فافعل ما شيت
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: மக்கள் இறைத்தூதர்களின் சொற்களிலிருந்து பெற்ற (அறிவுரைகளில்) ஒன்றுதான், ‘‘உனக்கு நாணம் இல்லையேல் நாடியதைச் செய்துகொள்” என்பதும்.143 இதை அபூமஸ்ஊத் உக்பா பின் அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا ادم، حدثنا شعبة، عن منصور، قال سمعت ربعي بن حراش، يحدث عن ابي مسعود، قال النبي صلى الله عليه وسلم " ان مما ادرك الناس من كلام النبوة اذا لم تستحي فاصنع ما شيت
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (முற்காலத்தில்) ஒரு மனிதன் தன் கீழங்கியை தற்பெருமையின் காரணத்தால் (கணுக்காலின் கீழ் தொங்கவிட்டு) இழுத் துக்கொண்டே நடந்தபொழுது, அவன் (பூமி பிளந்து, அதில்) புதைந்து போகும்படி செய்யப்பட்டான். அவன் மறுமை நாள் வரை பூமிக்குள் அழுந்திச் சென்று கொண்டேயிருப்பான். இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا بشر بن محمد، اخبرنا عبيد الله، اخبرنا يونس، عن الزهري، اخبرني سالم، ان ابن عمر، حدثه ان النبي صلى الله عليه وسلم قال " بينما رجل يجر ازاره من الخيلاء خسف به، فهو يتجلجل في الارض الى يوم القيامة ". تابعه عبد الرحمن بن خالد عن الزهري