ஹதீஸ்கள்
#3478
ஸஹீஹ் அல்-புகாரீ - Prophets
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: உங்களுக்குமுன் (ஒரு காலத்தில்) ஒரு மனிதர் இருந்தார். அவருக்கு அல்லாஹ் செல்வத்தை வழங்கியிருந்தான். அவருக்கு மரணம் நெருங்கியபோது தம் மகன்களிடம், ‘‘உங்களுக்கு நான் எப்படிப்பட்ட தந்தை யாக இருந்தேன்?” என்று கேட்டார். அவர்கள், ‘‘சிறந்த தந்தையாக இருந்தீர்கள்” என்று பதில் கூறினர். அதற்கு அவர், ‘‘நான் நற்செயல் எதையும் செய்யவேயில்லை. ஆகவே, நான் இறந்துவிட்டால் என்னை எரித்துவிடுங்கள். பிறகு என்னைப் பொடிப்பொடியாக்கி சூறாவளிக் காற்று வீசும் நாளில் (காற்றில்) என்னைத் தூவிவிடுங்கள்” என்று சொன்னார். அவர்களும் அவ்வாறே செய்தனர். அவரை (அவரது உடல் அணுக்களை) வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் ஒன்றுதிரட்டி (முழு உருவை மீண்டும் அளித்து) ‘‘இப்படிச் செய்ய உத்தரவிடும்படி உன்னைத் தூண்டியது எது?” என்று கேட்டான். அவர், ‘‘உன்(மீது எனக்குள்ள) அச்சம்தான் (இப்படி உத்தரவிட என்னைத் தூண்டியது)” என்று சொன்னார். உடனே அவரைத் தன் கருணையால் அல்லாஹ் அரவணைத்துக் கொண்டான். இதை அபூசயீத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا ابو الوليد، حدثنا ابو عوانة، عن قتادة، عن عقبة بن عبد الغافر، عن ابي سعيد رضى الله عنه عن النبي صلى الله عليه وسلم " ان رجلا كان قبلكم رغسه الله مالا فقال لبنيه لما حضر اى اب كنت لكم قالوا خير اب. قال فاني لم اعمل خيرا قط، فاذا مت فاحرقوني ثم اسحقوني ثم ذروني في يوم عاصف. ففعلوا، فجمعه الله عز وجل، فقال ما حملك قال مخافتك. فتلقاه برحمته ". وقال معاذ حدثنا شعبة، عن قتادة، سمعت عقبة بن عبد الغافر، سمعت ابا سعيد الخدري، عن النبي صلى الله عليه وسلم
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prophets
- Hadith Index
- #3478
- Book Index
- 145
Grades
- -
