ஹதீஸ்கள்
#3466
ஸஹீஹ் அல்-புகாரீ - Prophets
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (முற்காலத்தில்) பெண்ணொருத்தி தன் மகனுக்குப் பாலூட்டிக்கொண்டிருந்தாள். அவள் அவனுக்குப் பாலூட்டிக் கொண்டிருந்தபோது வாகனத்தில் சென்ற ஒருவன் அவளைக் கடந்துசென்றான். அப்பெண், ‘‘இறைவா! இவனைப் போல் என் மகன் ஆகும்வரை அவனுக்கு நீ மரணத்தைத் தராதே” என்று பிரார்த்தித்தாள். உடனே அந்தக் குழந்தை, ‘‘இறைவா! என்னை இவனைப் போல் ஆக்கிவிடாதே” என்று பிரார்த்தித்தது. பிறகு திரும்பச் சென்று (அவளது) மார்பில் பால் அருந்தலாயிற்று. பிறகு (தரையில்) இழுபட்டுக்கொண்டே வந்த ஒரு பெண் அவளைக் கடந்துசென்றாள். அவளைப் பிறர் கேலி செய்து விளையாட் டுப் பொருளாக நடத்திக்கொண்டிருந்தனர். (தன் குழந்தைக்குப் பாலூட்டிக்கொண்டிருந்த) அந்தப் பெண், ‘‘இறைவா! என் மகனை இவளைப் போல் ஆக்கிவிடாதே” என்று பிரார்த்தித்தாள். உடனே அக் குழந்தை, ‘‘இறைவா! என்னை இவளைப் போல் ஆக்கு” என்று பிரார்த்தித்தது. பிறகு அது, ‘‘வாகனத்தில் சென்றவன் இறைமறுப்பாளன் ஆவான். இந்தப் பெண்ணோ, இவளைப் பற்றி மக்கள் யிஇவள் விபசாரம் செய்கிறாள்’ என்று (அபாண்டமாகக்) கூறுகிறார்கள். ஆனால், இவள், யிஎனக்கு அல்லாஹ்வே போதுமானவன்’ என்று கூறுகிறாள். அவர்கள், யிஇவள் திருடுகிறாள்’ என்று (அவதூறாகக்) கூறுகிறார்கள். இவள், யிஎனக்கு அல்லாஹ்வே போதுமானவன்’ என்று கூறுகிறாள்” என (அக்குழந்தை) சொல்லிற்று. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.137 அத்தியாயம் :
حدثنا ابو اليمان، اخبرنا شعيب، حدثنا ابو الزناد، عن عبد الرحمن، حدثه انه، سمع ابا هريرة رضى الله عنه انه سمع رسول الله صلى الله عليه وسلم يقول " بينما امراة ترضع ابنها اذ مر بها راكب وهى ترضعه، فقالت اللهم لا تمت ابني حتى يكون مثل هذا. فقال اللهم لا تجعلني مثله. ثم رجع في الثدى، ومر بامراة تجرر ويلعب بها فقالت اللهم لا تجعل ابني مثلها. فقال اللهم اجعلني مثلها. فقال اما الراكب فانه كافر، واما المراة فانهم يقولون لها تزني. وتقول حسبي الله. ويقولون تسرق. وتقول حسبي الله
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prophets
- Hadith Index
- #3466
- Book Index
- 133
Grades
- -
