Loading...
Loading...
நூல்கள்
136 ஹதீஸ்கள்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வானவர்கள் மேகத்தில் இறங்கி, விண்ணில் தீர்மானிக்கப்பட்ட விஷயங்கள் குறித்துப் பேசிக்கொள்கிறார்கள். ஷைத்தான்கள் திருட்டுத்தனமாக (ஒளிந் திருந்து) அவற்றை ஒட்டுக்கேட்டு, சோதிடர்களுக...
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: வெள்ளிக்கிழமை வந்துவிட்டால் வானவர்கள் (ஜுமுஆ தொழுகை நடக் கும்) பள்ளிவாசலின் நுழைவாயில்களில் ஒவ்வொரு வாசலிலும் (இருந்துகொண்டு) முதன் முதலாக உள்ளே நுழைபவரையும் அடுத்தடுத்து உள்ளே நுழைபவரையும்...
சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில் (நபித்தோழரும் கவிஞருமான) ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கவிபாடிக் கொண்டிருக்க, உமர் (ரலி) அவர்கள் அங்கு வந்தார்கள். (ஹஸ்ஸான் (ரலி) அவர்களை...
பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் கவிஞர் ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி) அவர்களிடம், ‘‘எதிரிகளுக்கு (பதிலடியாக) வசைக்கவி பாடுங்கள். (வானவர்) ஜிப்ரீல் உங்களுடன் (துணையாக) இருப்பார்” என்று கூறினார்கள்....
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: (கஸ்ரஜ் குலத்தைச் சேர்ந்த) பனூ ஃகன்ம் கிளையாரின் குறுகலான வீதியில் கிளம்புகின்ற புழுதியை (இன்றும்) நான் பார்ப்பதைப் போன்றுள்ளது. இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது...
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஹாரிஸ் பின் ஹிஷாம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், ‘‘தங்களுக்கு வேத அறிவிப்பு (வஹீ) எப்படி வருகிறது?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘அவையெல்லாம் (இப்படித்தான்:) சில வேளைகளில்...
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘‘ஒரு ஜோடி (பொருட்களை) அல்லாஹ் வின் பாதையில் செலவழித்தவர்களை சொர்க்கத்தின் காவலர்(களான வானவர்)கள் யிஇன்னாரே! இங்கே வாருங்கள்’ என்று அழைப்பார்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதைக...
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒருமுறை) நபி (ஸல்) அவர்கள் என்னிடம், ‘‘ஆயிஷாவே! இதோ (வானவர்) ஜிப்ரீல் உனக்கு முகமன் (சலாம்) கூறுகிறார்” என்று கூறினார்கள். நான், ‘‘வ அலைஹிஸ் ஸலாமு வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு” (அவர்மீ...
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்களிடம், ‘‘தாங்கள் (இப்போது) எம்மைச் சந்தித்துக் கொண்டிருப்பதைவிட அதிகமாக (அடிக்கடி) சந்திக்கமாட்டீர்களா?” என்று (ஆர்வமுட...
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரேயொரு (வட்டார) மொழிவழக்குப் படி (வானவர்) ஜிப்ரீல் (குர்ஆனை) எனக்கு ஓதக் கற்றுத்தந்தார். ஆனால், நான் அதை இன்னும் பல (வட்டார) மொழிவழக்குகளின்படி எனக்கு ஓதக் கற்றுத்தருமாறு அவர...
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிலேயே அதிகமாக வாரி வழங்கக் கூடியவர்களாக இருந்தார்கள்; ரமளான் மாதத்தில் அவர்களை வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் சந்திக்கும் வேளையில் (வழக்கத...
இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்கள் அஸ்ர் தொழுகையைச் சிறிது தாமதப்படுத்தித் தொழுதார்கள். உடனே உர்வா (ரஹ்) அவர்கள், ‘‘(வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் (வானிலிருந்து) இறங்க...
அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘‘உங்கள் சமுதாயத்தாரில் அல்லாஹ்வுக்கு எதையும் இணையாகக் கருதாமல் இறந்துவிடுபவர், சொர்க்கத்தில் நுழைவார் லிஅல்லது நரகம் செல்லமாட்டார்லி என்று (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்னிடம் கூறினா...
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: இரவு நேரத்தில் சில வானவர்களும் பகல் நேரத்தில் சில வானவர்களும் ஒருவர்பின் ஒருவராக அடுத்தடுத்து வருகிறார்கள். ஃபஜ்ருடைய தொழுகை யிலும் அஸ்ருடைய தொழுகையிலும் ஒன்றுசேர்கின்றார்கள். பிறகு, அல்லாஹ்...
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது நபி (ஸல்) அவர்களுக்கு நான் ஒரு தலையணையை (ஈச்ச நாரை அடைத்துத்) தயாரித்தேன். அதில் உருவப் படங்கள் வரையப்பட்டிருந்தன. அது சிறிய மெத்தை போன்றிருந்தது. நபி (ஸல்) அவர்கள் வந்ததும் (அதைப் பார்த்த...
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நாயும் (உயிரினங்களின் சிலைகள் அல்லது) உருவப் படங்களும் உள்ள வீட்டினுள் (அருள்) வானவர்கள் நுழைய மாட்டார்கள். இதை அபூதல்ஹா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ(ரலி) அவர்கள் கூறியதாவது: ‘‘(உயிரினங்களின்) உருவப் படமுள்ள வீட்டில் (அருள்) வானவர்கள் நுழைய மாட்டார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்” என என்னிடம் அபூதல்ஹா (ரலி) அவர்கள் தெரிவித்தார்கள். அற...
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் (தாம் வருவதாக) வாக்களித்திருந்தார்கள். (ஆனால், வர வில்லை. நபி (ஸல்) அவர்கள் ஜிப்ரீல் (அலை) அவர்களிடம் அது பற்றிக் கேட்ட...
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இமாம் (தொழுகையில்), ‘‘சமிஅல் லாஹு லிமன் ஹமிதஹு” (தன்னைப் புகழ்ந்தவனின் புகழுரையை அல்லாஹ் செவிமடுத்தான்) என்று கூறும்போது நீங்கள், ‘‘அல்லாஹும்ம ரப்பனா ல(க்)கல் ஹம்து” (இறைவா, எ...
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் தொழுகைக்காகக் காத்திருக்கும்வரை அவர் தொழுகை யிலேயே இருக்கிறார். அவர் தொழுகை முடிந்து எழாதிருக்கும்வரை, அல்லது அவருக்கு துடக்கு ஏற்படாதிருக்கும்வரை வானவர்கள், ‘‘இறைவா! இவரை ம...