ஹதீஸ்கள்
#3224
ஸஹீஹ் அல்-புகாரீ - Beginning of Creation
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது நபி (ஸல்) அவர்களுக்கு நான் ஒரு தலையணையை (ஈச்ச நாரை அடைத்துத்) தயாரித்தேன். அதில் உருவப் படங்கள் வரையப்பட்டிருந்தன. அது சிறிய மெத்தை போன்றிருந்தது. நபி (ஸல்) அவர்கள் வந்ததும் (அதைப் பார்த்துவிட்டு) இரு கதவுகளுக்கிடையே நின்றுகொண்டார்கள். அவர்களின் முகம் (கோபத்தால் நிறம்) மாறத்தொடங்கியது. நான், ‘‘நாங்கள் என்ன (தவறு) செய்துவிட்டோம்? அல்லாஹ்வின் தூதரே!” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘இந்தத் தலையணையின் நிலை என்ன?” என்று (கோபமாகக்) கேட்டார்கள். நான், ‘‘இது, நீங்கள் (தலைவைத்துப்) படுத்துக்கொள்வதற்காக தங்களுக்கென நான் தயாரித்த தலையணை” என்று சொன்னேன். அதற்கு அவர்கள், ‘‘உருவப் படம் உள்ள வீட்டினுள் (அருள்) வானவர்கள் நுழையமாட்டார்கள் என்பதும், உருவப் படத்தைச் செய்தவன் மறுமை நாளில் வேதனை செய்யப்படுவான் என்பதும் அப்போது அல்லாஹ் (உருவப் படத்தைச் செய்தவர்களை நோக்கி), ‘நீங்கள் படைத்தவற்றுக்கு உயிர் கொடுங்கள்’ என்று சொல்வான் என்பதும் உனக்குத் தெரியாதா?” என்று கேட்டார்கள்.37 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Beginning of Creation
- Hadith Index
- #3224
- Book Index
- 35
Grades
- -