ஹதீஸ்கள்
#3215
ஸஹீஹ் அல்-புகாரீ - Beginning of Creation
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஹாரிஸ் பின் ஹிஷாம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், ‘‘தங்களுக்கு வேத அறிவிப்பு (வஹீ) எப்படி வருகிறது?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘அவையெல்லாம் (இப்படித்தான்:) சில வேளைகளில் வானவர் (ஜிப்ரீல்) என்னிடம் மணியோசையைப் போன்று (சத்தம் எழுப்பிய நிலையில்) வருவார். அவர் கூறியதை நான் நினைவில் (பாதுகாத்து) வைத்துக்கொண்ட நிலையில் அவர் என்னைவிட்டுப் பிரிந்துவிடுவார். இவ்வாறு வருவது எனக்கு மிகவும் கடினமானதாக இருக்கும். சில வேளைகளில் அந்த வானவர் ஒரு மனிதரைப் போன்று என் முன் தோன்றி காட்சியளித்து என்னுடன் பேசுவார். அப்போது அவர் கூறுவதை நான் நினைவிலிருத்திக்கொள்வேன்” என்று பதிலளித்தார்கள்.27 அத்தியாயம் :
حدثنا فروة، حدثنا علي بن مسهر، عن هشام بن عروة، عن ابيه، عن عايشة رضى الله عنها ان الحارث بن هشام، سال النبي صلى الله عليه وسلم كيف ياتيك الوحى قال " كل ذاك ياتي الملك احيانا في مثل صلصلة الجرس، فيفصم عني وقد وعيت ما قال، وهو اشده على، ويتمثل لي الملك احيانا رجلا، فيكلمني فاعي ما يقول
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Beginning of Creation
- Hadith Index
- #3215
- Book Index
- 26
Grades
- -
