Loading...

Loading...
நூல்கள்
௨௬௦ ஹதீஸ்கள்
நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள், தம் தந்தை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம், “நீங்கள் (இந்த ஆண்டு ஹஜ்ஜுக்குப் போகாமல்) இங்கே இருங்கள். ஏனெனில், இறையில்லம் கஅபாவை நெருங்க விடாமல் நீங்கள் தடுக்கப்படுவீர்கள் என்ற அச்சம் எனக்கு ஏற்படுகிறது” எனக் கூறினார்கள். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், “அப்படியாயின், நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்ததைப் போன்றே செய்வேன். ‘நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் உங்களுக்கு அழகிய முன்மாதிரி உள்ளது’ (33:21) என அல்லாஹ் கூறியுள்ளான். எனவே, நான் என்மீது உம்ராவைக் கடமையாக்கிக்கொண்டேன் என்பதற்கு உங்களையே நான் சாட்சி யாக்குகிறேன்” எனக் கூறிவிட்டு, உம்ராவுக்காக இஹ்ராம் கட்டினார்கள். பிறகு அங்கிருந்து புறப்பட்டு ‘பைதாஉ’ எனுமிடத்தை அடைந்தததும் ஹஜ்ஜுக் கும் உம்ராவுக்கும் சேர்த்து இஹ்ராம் கட்டி தல்பியா கூறினார்கள். அப்போது அவர்கள் “ஹஜ்ஜும் உம்ராவும் ஒரே மாதிரியானவையே” எனக் கூறிவிட்டு, ‘குதைத்’ எனுமிடத்தில் குர்பானிப் பிராணியை விலைக்கு வாங்கிக் கொண்டார்கள். பின்னர் இறையில்லம் கஅபாவுக்கு வந்து, அவ்விரண்டிற்காகவும் (ஹஜ்ஜுக் காகவும் உம்ராவிற்காகவும்) ஒரேயொரு தவாஃப் செய்தார்கள். ஹஜ்ஜையும் உம்ராவையும் நிறைவேற்றும்வரை அவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபடவில்லை.54 அத்தியாயம் :
حدثنا ابو النعمان، حدثنا حماد، عن ايوب، عن نافع، قال قال عبد الله بن عبد الله بن عمر رضى الله عنهم لابيه اقم، فاني لا امنها ان ستصد عن البيت. قال اذا افعل كما فعل رسول الله صلى الله عليه وسلم وقد قال الله {لقد كان لكم في رسول الله اسوة حسنة} فانا اشهدكم اني قد اوجبت على نفسي العمرة. فاهل بالعمرة، قال ثم خرج حتى اذا كان بالبيداء اهل بالحج والعمرة، وقال ما شان الحج والعمرة الا واحد. ثم اشترى الهدى من قديد، ثم قدم فطاف لهما طوافا واحدا، فلم يحل حتى حل منهما جميعا
மிஸ்வர் பின் மக்ரமா (ரலி), மர்வான் பின் அல்ஹகம் ஆகியோர் கூறியதாவது: ஹுதைபியா உடன்படிக்கை நடந்த ஆண்டு நபி (ஸல்) அவர்கள் ஆயிரத்துக் கும் மேற்பட்ட தோழர்களுடன் மதீனா விலிருந்து புறப்பட்டார்கள்; துல்ஹுலை ஃபாவுக்கு வந்ததும் குர்பானிப் பிராணி யின் கழுத்தில் அடையாள மாலை தொங்க விட்டு அடையாளமும் இட்டார்கள்; பின்னர் உம்ராவுக்காக இஹ்ராம் கட்டினார்கள். அத்தியாயம் :
حدثنا احمد بن محمد، اخبرنا عبد الله، اخبرنا معمر، عن الزهري، عن عروة بن الزبير، عن المسور بن مخرمة، ومروان، قالا خرج النبي صلى الله عليه وسلم من المدينة زمن الحديبية في بضع عشرة ماية من اصحابه، حتى اذا كانوا بذي الحليفة قلد النبي صلى الله عليه وسلم الهدى واشعر واحرم بالعمرة
மிஸ்வர் பின் மக்ரமா (ரலி), மர்வான் பின் அல்ஹகம் ஆகியோர் கூறியதாவது: ஹுதைபியா உடன்படிக்கை நடந்த ஆண்டு நபி (ஸல்) அவர்கள் ஆயிரத்துக் கும் மேற்பட்ட தோழர்களுடன் மதீனா விலிருந்து புறப்பட்டார்கள்; துல்ஹுலை ஃபாவுக்கு வந்ததும் குர்பானிப் பிராணி யின் கழுத்தில் அடையாள மாலை தொங்க விட்டு அடையாளமும் இட்டார்கள்; பின்னர் உம்ராவுக்காக இஹ்ராம் கட்டினார்கள். அத்தியாயம் :
حدثنا احمد بن محمد، اخبرنا عبد الله، اخبرنا معمر، عن الزهري، عن عروة بن الزبير، عن المسور بن مخرمة، ومروان، قالا خرج النبي صلى الله عليه وسلم من المدينة زمن الحديبية في بضع عشرة ماية من اصحابه، حتى اذا كانوا بذي الحليفة قلد النبي صلى الله عليه وسلم الهدى واشعر واحرم بالعمرة
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) நபி (ஸல்) அவர்களின் குர்பானி ஒட்டகங்களுக்கு நான் என் கைகளால் அடையாள மாலைகள் திரித்தேன். பிறகு அவற்றை நபி (ஸல்) அவர்கள் அந்த ஒட்டகங்களின் கழுத்தில் தொங்கவிட்டு, அவற்றுக்கு அடையாளமிட்டார்கள். (பிறகு மக்காவில்) குர்பானி கொடு(ப்பதற்காக அனுப்பிவை)த்தார்கள். ஆனால், (அதற்குமுன்) அவர்களுக்கு அனுமதிக்கப்படடிருந்த எதுவும் (அப்போது மதீனாவிலிருந்த) அவர்கள்மீது (இஹ்ராம் கட்டியவருக்குப் போன்று) தடை செய்யப்பட்டதாக ஆகவில்லை.55 அத்தியாயம் :
حدثنا ابو نعيم، حدثنا افلح، عن القاسم، عن عايشة رضى الله عنها قالت فتلت قلايد بدن النبي صلى الله عليه وسلم بيدى، ثم قلدها واشعرها واهداها، فما حرم عليه شىء كان احل له
ஹஃப்ஸா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (நபி (ஸல்) அவர்களிடம்), “அல்லாஹ்வின் தூதரே! மக்களுக்கென்ன நேர்ந்தது? அவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டுவிட்டார்களே! ஆனால், நீங்கள் இஹ்ராவிலிருந்து விடுபடவில்லையே!?” எனக் கேட்டேன். அதற்கு அவர்கள் “நான் தலைமுடி யில் களிம்பு தடவிப் படியவைத்து விட்டேன்; எனது குர்பானிப் பிராணியின் கழுத்தில் அடையாள மாலை தொங்க விட்டுள்ளேன்; எனவே, நான் ஹஜ்ஜை நிறைவேற்றாத வரை இஹ்ராமிலிருந்து விடுபடமாட்டேன்” எனக் கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا مسدد، حدثنا يحيى، عن عبيد الله، قال اخبرني نافع، عن ابن عمر، عن حفصة، رضى الله عنهم قالت قلت يا رسول الله ما شان الناس حلوا ولم تحلل انت قال " اني لبدت راسي، وقلدت هديي، فلا احل حتى احل من الحج
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவிலிருந்து குர்பானிப் பிராணியை அனுப்பிவைப்பவர்களாக இருந்தார்கள். எனவே, நான் அவர்களது குர்பானி பிராணியின் கழுத்தில் தொங்கவிடப்படும் மாலையைத் திரிப்பேன். (குர்பானி பிராணியை அனுப்பிய) பிறகு அவர்கள், இஹ்ராம் கட்டியவர் தவிர்த்துக்கொள்ளும் எதையும் தவிர்த்துக்கொள்ளமாட்டார்கள். அத்தியாயம் :
حدثنا عبد الله بن يوسف، حدثنا الليث، حدثنا ابن شهاب، عن عروة، وعن عمرة بنت عبد الرحمن، ان عايشة رضى الله عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يهدي من المدينة، فافتل قلايد هديه، ثم لا يجتنب شييا مما يجتنبه المحرم
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களின் குர்பானி பிராணிக்கு நான் அடையாள மாலைகள் திரித்தேன். பிறகு அவர்கள் அதற்கு அடையாளமிட்டு மாலைகளைத் தொங்க விட்டார்கள் -அல்லது நான் தொங்க விட்டேன். பிறகு அதை இறையில்லம் கஅபா வுக்கு அனுப்பி வைத்துவிட்டு, மதீனாவில் தங்கியிருந்தார்கள். அப்போது அவர்களுக்கு அனுமதிக்கப்பட்ட எதுவும் விலக்கப்பட்டதாக ஆகவில்லை. அத்தியாயம் :
حدثنا عبد الله بن مسلمة، حدثنا افلح بن حميد، عن القاسم، عن عايشة رضى الله عنها قالت فتلت قلايد هدى النبي صلى الله عليه وسلم ثم اشعرها وقلدها او قلدتها ثم بعث بها الى البيت، واقام بالمدينة، فما حرم عليه شىء كان له حل
அம்ரா பின்த் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஸியாத் பின் அபீசுஃப்யான் அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களுக்குக் கடிதம் எழுதி, “(மக்காவுக்கு) குர்பானி பிராணியை அனுப்பிவைப்பவருக்கும், அப்பிராணி அறுக்கப்படும்வரை ஹாஜிகளுக்குத் தடை செய்யப்படும் அனைத்தும் தடை செய்யப் படும்” என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறாரே! (இது சரியா?) எனக் கேட்டார். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், “இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் சொல்வது போலில்லை; நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் குர்பானி பிராணிக்கான அடையாள மாலைகளை எனது கையாலேயே திரித்திருக்கிறேன்; பிறகு அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் அம்மாலைகளைத் தம் கரங்களால் அதன் கழுத்தில் தொங்கவிட்டார்கள்; பிறகு, பிராணியை என் தந்தையுடன் (மக்காவுக்கு) அனுப்பிவைத் தார்கள்; ஆனால், அந்த குர்பானிப் பிராணி பலியிடப்படும்வரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் அனுமதித்த எதுவும் தடை செய்யப்பட வில்லை” எனக் கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا عبد الله بن يوسف، اخبرنا مالك، عن عبد الله بن ابي بكر بن عمرو بن حزم، عن عمرة بنت عبد الرحمن، انها اخبرته ان زياد بن ابي سفيان كتب الى عايشة رضى الله عنها ان عبد الله بن عباس رضى الله عنهما قال من اهدى هديا حرم عليه ما يحرم على الحاج حتى ينحر هديه. قالت عمرة فقالت عايشة رضى الله عنها ليس كما قال ابن عباس، انا فتلت قلايد هدى رسول الله صلى الله عليه وسلم بيدى، ثم قلدها رسول الله صلى الله عليه وسلم بيديه، ثم بعث بها مع ابي فلم يحرم على رسول الله صلى الله عليه وسلم شىء احله الله حتى نحر الهدى
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஒரு முறை ஆட்டை குர்பானி கொடுத்தார்கள். அத்தியாயம் :
حدثنا ابو نعيم، حدثنا الاعمش، عن ابراهيم، عن الاسود، عن عايشة رضى الله عنها قالت اهدى النبي صلى الله عليه وسلم مرة غنما
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களுக்காக குர்பானி பிராணிகளின் அடையாள மாலைகளைத் திரிப்பேன். நபி (ஸல்) அவர்கள் ஆட்டுக்கு அவற்றைத் தொங்க விடுவார்கள். (பிராணியை மக்காவுக்கு அனுப்பிவிட்டுத்) தம் குடும்பத்தாருடன் இஹ்ராம் கட்டாத நிலையில் (மதீனாவில்) தங்குவார்கள். அத்தியாயம் :
حدثنا ابو النعمان، حدثنا عبد الواحد، حدثنا الاعمش، حدثنا ابراهيم، عن الاسود، عن عايشة رضى الله عنها قالت كنت افتل القلايد للنبي صلى الله عليه وسلم فيقلد الغنم، ويقيم في اهله حلالا
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களுக்காக (குர்பானி) ஆடுகளின் அடையாள மாலை களைத் தொடுப்பேன். நபி (ஸல்) அவர்கள் அந்த ஆடுகளை (மக்காவுக்கு) அனுப்பி விட்டு, அவர்கள் இஹ்ராமில்லாத நிலை யில் (தமது வீட்டில்) தங்குவார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا ابو النعمان، حدثنا حماد، حدثنا منصور بن المعتمر،. وحدثنا محمد بن كثير، اخبرنا سفيان، عن منصور، عن ابراهيم، عن الاسود، عن عايشة رضى الله عنها قالت كنت افتل قلايد الغنم للنبي صلى الله عليه وسلم فيبعث بها، ثم يمكث حلالا
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டுவதற்கு முன்பாக, அவர்களின் குர்பானிப் பிராணிக்கு -அடையான மாலைகளை- நான் தொடுத்தேன். அத்தியாயம் :
حدثنا ابو نعيم، حدثنا زكرياء، عن عامر، عن مسروق، عن عايشة رضى الله عنها قالت فتلت لهدى النبي صلى الله عليه وسلم تعني القلايد قبل ان يحرم
இறைநம்பிக்கையாளர்களின் அன்னை (ஆயிஷா (ரலி) அவர்கள்) கூறியதாவது: நான் குர்பானி பிராணிகளின் அடையாள மாலைகளை என்னிடமிருந்த கம்பளியால் திரித்தேன். அத்தியாயம் :
حدثنا عمرو بن علي، حدثنا معاذ بن معاذ، حدثنا ابن عون، عن القاسم، عن ام المومنين رضى الله عنها قالت فتلت قلايدها من عهن كان عندي
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: குர்பானி பிராணியை இழுத்துக் கொண்டு (நடந்து) சென்ற ஒருவரைப் பார்த்த நபி (ஸல்) அவர்கள், “அதில் ஏறிக்கொள்ளும்” என்றார்கள். அதற்கு அவர், “இது குர்பானி பிராணி” என்றதும், “அதில் ஏறுவீராக!” என்று மீண்டும் கூறினார்கள். பிறகு அவர் அதில் ஏறிச் சென்றதை நான் பார்த்தேன். அவர் நபி (ஸல்) அவர்களுடன் பயணித்துக்கொண்டிருந் தார். அப்போது அந்த ஒட்டகத்தின் கழுத்தில் காலணி கிடந்தது. இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا محمد، اخبرنا عبد الاعلى بن عبد الاعلى، عن معمر، عن يحيى بن ابي كثير، عن عكرمة، عن ابي هريرة رضى الله عنه ان نبي الله صلى الله عليه وسلم راى رجلا يسوق بدنة، قال " اركبها ". قال انها بدنة. قال " اركبها ". قال فلقد رايته راكبها يساير النبي صلى الله عليه وسلم والنعل في عنقها. تابعه محمد بن بشار حدثنا عثمان بن عمر، اخبرنا علي بن المبارك، عن يحيى، عن عكرمة، عن ابي هريرة رضى الله عنه عن النبي صلى الله عليه وسلم
அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அறுக்கும் குர்பானி பிராணியின் சேணத்தையும் அதன் தோலையும் தர்மம் செய்துவிட வேண்டுமென நபி (ஸல்) அவர்கள் எனக்குக் கட்டளையிட்டார்கள். அத்தியாயம் :
حدثنا قبيصة، حدثنا سفيان، عن ابن ابي نجيح، عن مجاهد، عن عبد الرحمن بن ابي ليلى، عن علي رضى الله عنه قال امرني رسول الله صلى الله عليه وسلم ان اتصدق بجلال البدن التي نحرت وبجلودها
நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களின் காலத்தில் ‘ஹரூரிய்யா’க்கள் (காரிஜிய்யா) ஹஜ் செய்த ஆண்டில் இப்னு உமர் (ரலி) அவர்களும் ஹஜ் செய்ய விரும்பினார்கள்.56 அப்போது அவர்களிடம், “மக்களிடையே போர் மூண்டுள்ளது; எனவே, உங்களை ஹஜ் செய்ய விடாமல் அவர்கள் தடுப்பார் கள் என நாங்கள் அஞ்சுகின்றோம்” எனக் கூறப்பட்டது. உடனே அவர்கள், “அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன்மாதிரி உள்ளது. எனவே, அந்த நேரத்தில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்ததைப் போன்று நானும் செய்வேன். நான் உம்ராவுக்காக இஹ்ராம் கட்டிவிட்டேன் என்பதற்கு உங்களையே சாட்சியாக்கு கின்றேன்” என்றார்கள். பிறகு புறப்பட்டு ‘அல்பைதாஉ’ எனுமிடத்திற்கு வந்ததும் “ஹஜ்ஜின் நிலையும் உம்ராவின் நிலையும் ஒன்றே தான்; (எனவே) நான் உம்ராவுடன் ஹஜ்ஜுக்கும் சேர்த்தே இஹ்ராம் கட்டியுள்ளேன் என்பதற்கு நீங்களே சாட்சியாக இருங்கள்” எனக் கூறினார்கள். மேலும், அடையாள மாலையிடப்பட்ட குர்பானி பிராணியை விலைக்கு வாங்கிக் கொண்டுசென்றார்கள். மக்கா வந்து கஅபாவை தவாஃப் செய்துவிட்டு, ஸஃபா-மர்வாவுக்கிடையே ஓடி ‘சயீ’ செய்தார்கள். இதைவிட வேறெதுவும் அதிகமாகச் செய்யவில்லை. துல்ஹஜ் பத்தாம் நாளில்தான் குர்பானி பிராணியைப் பலியிட்டுவிட்டுத் தலைமுடியை மழித்தார்கள். அதுவரை, இஹ்ராம் கட்டிய நிலையில் விலக்கப்பட்ட எதையும் செய்யவில்லை. முதலில் தாம் நிறைவேற்றிவிட்ட தவாஃபே ஹஜ் மற்றும் உம்ரா ஆகிய இரண்டிற்கும் போதும் என்றும் கருதினார்கள். மேலும், “இப்படித்தான் நபி (ஸல்) அவர்கள் செய்தார்கள்” என்றும் இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا ابراهيم بن المنذر، حدثنا ابو ضمرة، حدثنا موسى بن عقبة، عن نافع، قال اراد ابن عمر رضى الله عنهما الحج عام حجة الحرورية في عهد ابن الزبير رضى الله عنهما فقيل له ان الناس كاين بينهم قتال، ونخاف ان يصدوك. فقال {لقد كان لكم في رسول الله اسوة حسنة} اذا اصنع كما صنع، اشهدكم اني اوجبت عمرة. حتى كان بظاهر البيداء قال ما شان الحج والعمرة الا واحد، اشهدكم اني جمعت حجة مع عمرة. واهدى هديا مقلدا اشتراه حتى قدم، فطاف بالبيت وبالصفا، ولم يزد على ذلك، ولم يحلل من شىء حرم منه حتى يوم النحر، فحلق ونحر وراى ان قد قضى طوافه الحج والعمرة بطوافه الاول، ثم قال كذلك صنع النبي صلى الله عليه وسلم
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஹஜ்ஜை மட்டுமே நிறைவேற்றும் எண்ணத்தில் துல்கஅதா மாதத்தின் இருபத்தைந்தாம் நாள், நாங்கள் அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களுடன் புறப் பட்டோம். மக்காவை நாங்கள் நெருங்கிய தும், “குர்பானிப் பிராணியைக் கொண்டு வராதவர்கள் தவாஃப் செய்துவிட்டு, ஸஃபா-மர்வாவுக்கிடையே ஓடி முடித்த வுடன், இஹ்ராமைக் களைந்துவிட வேண்டும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். பிறகு துல்ஹஜ் பத்தாம் நாள் மாட்டி றைச்சி எங்களிடம் கொண்டுவரப்பட்டது. “இது என்ன?” என நான் கேட்டேன். “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் துணைவியர் சார்பாக குர்பானி கொடுத்தார் கள்” என்று (வந்தவர்) சொன்னார். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான யஹ்யா பின் சயீத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் இந்த ஹதீஸை, காசிம் பின் முஹம்மத் (ரஹ்) அவர்களிடம் கூறினேன். அப்போது அவர்கள், “உமக்கு இந்த ஹதீஸை அம்ரா பின்த் அப்திர் ரஹ்மான் (ரஹ்) சரியாகவே அறிவித்துள்ளார்” என்றார்கள். அத்தியாயம் :
حدثنا عبد الله بن يوسف، اخبرنا مالك، عن يحيى بن سعيد، عن عمرة بنت عبد الرحمن، قالت سمعت عايشة رضى الله عنها تقول خرجنا مع رسول الله صلى الله عليه وسلم لخمس بقين من ذي القعدة، لا نرى الا الحج، فلما دنونا من مكة امر رسول الله صلى الله عليه وسلم من لم يكن معه هدى، اذا طاف وسعى بين الصفا والمروة ان يحل، قالت فدخل علينا يوم النحر بلحم بقر. فقلت ما هذا قال نحر رسول الله صلى الله عليه وسلم عن ازواجه. قال يحيى فذكرته للقاسم، فقال اتتك بالحديث على وجهه
நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் வழக்கமாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குர்பானி கொடுத்த இடத்திலேயே குர்பானி கொடுப்பார்கள். அத்தியாயம் :
حدثنا اسحاق بن ابراهيم، سمع خالد بن الحارث، حدثنا عبيد الله بن عمر، عن نافع، ان عبد الله رضى الله عنه كان ينحر في المنحر. قال عبيد الله منحر رسول الله صلى الله عليه وسلم
நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு உமர் (ரலி) அவர்கள் முஸ்தலி ஃபாவிலிருந்து இரவின் கடைசிப் பகுதி யில் தமது குர்பானிப் பிராணியை ஹாஜிகளுடன் அனுப்புவார்கள். நபி (ஸல்) அவர்கள் பலியிட்ட இடத்தில் சேர்ப்பதற் காக இவ்வாறு அனுப்புவார்கள். அந்த ஹாஜிகளில் அடிமைகளும் சுதந்திர மானவர்களும் இருந்தனர்.57 அத்தியாயம் :
حدثنا ابراهيم بن المنذر، حدثنا انس بن عياض، حدثنا موسى بن عقبة، عن نافع، ان ابن عمر رضى الله عنهما كان يبعث بهديه من جمع من اخر الليل، حتى يدخل به منحر النبي صلى الله عليه وسلم مع حجاج فيهم الحر والمملوك
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (ஹஜ்ஜின்போது) ஏழு ஒட்டகங்களை நிற்கவைத்துத் தமது கையாலேயே அறுத்தார்கள், மேலும், அவர்கள் மதீனாவில், பெரிய கொம்புகளை உடைய, கறுப்பு நிறம் கலந்த வெள்ளை நிற செம்மறி ஆடுகள் இரண்டையும் குர்பானி கொடுத்தார்கள். அத்தியாயம் :
حدثنا سهل بن بكار، حدثنا وهيب، عن ايوب، عن ابي قلابة، عن انس وذكر الحديث قال ونحر النبي صلى الله عليه وسلم بيده سبع بدن قياما، وضحى بالمدينة كبشين املحين اقرنين. مختصرا