ஹதீஸ்கள்
#1708
ஸஹீஹ் அல்-புகாரீ - Hajj (Pilgrimage)
நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களின் காலத்தில் ‘ஹரூரிய்யா’க்கள் (காரிஜிய்யா) ஹஜ் செய்த ஆண்டில் இப்னு உமர் (ரலி) அவர்களும் ஹஜ் செய்ய விரும்பினார்கள்.56 அப்போது அவர்களிடம், “மக்களிடையே போர் மூண்டுள்ளது; எனவே, உங்களை ஹஜ் செய்ய விடாமல் அவர்கள் தடுப்பார் கள் என நாங்கள் அஞ்சுகின்றோம்” எனக் கூறப்பட்டது. உடனே அவர்கள், “அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன்மாதிரி உள்ளது. எனவே, அந்த நேரத்தில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்ததைப் போன்று நானும் செய்வேன். நான் உம்ராவுக்காக இஹ்ராம் கட்டிவிட்டேன் என்பதற்கு உங்களையே சாட்சியாக்கு கின்றேன்” என்றார்கள். பிறகு புறப்பட்டு ‘அல்பைதாஉ’ எனுமிடத்திற்கு வந்ததும் “ஹஜ்ஜின் நிலையும் உம்ராவின் நிலையும் ஒன்றே தான்; (எனவே) நான் உம்ராவுடன் ஹஜ்ஜுக்கும் சேர்த்தே இஹ்ராம் கட்டியுள்ளேன் என்பதற்கு நீங்களே சாட்சியாக இருங்கள்” எனக் கூறினார்கள். மேலும், அடையாள மாலையிடப்பட்ட குர்பானி பிராணியை விலைக்கு வாங்கிக் கொண்டுசென்றார்கள். மக்கா வந்து கஅபாவை தவாஃப் செய்துவிட்டு, ஸஃபா-மர்வாவுக்கிடையே ஓடி ‘சயீ’ செய்தார்கள். இதைவிட வேறெதுவும் அதிகமாகச் செய்யவில்லை. துல்ஹஜ் பத்தாம் நாளில்தான் குர்பானி பிராணியைப் பலியிட்டுவிட்டுத் தலைமுடியை மழித்தார்கள். அதுவரை, இஹ்ராம் கட்டிய நிலையில் விலக்கப்பட்ட எதையும் செய்யவில்லை. முதலில் தாம் நிறைவேற்றிவிட்ட தவாஃபே ஹஜ் மற்றும் உம்ரா ஆகிய இரண்டிற்கும் போதும் என்றும் கருதினார்கள். மேலும், “இப்படித்தான் நபி (ஸல்) அவர்கள் செய்தார்கள்” என்றும் இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Hajj (Pilgrimage)
- Hadith Index
- #1708
- Book Index
- 186
Grades
- -