ஹதீஸ்கள்
#1696
ஸஹீஹ் அல்-புகாரீ - Hajj (Pilgrimage)
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) நபி (ஸல்) அவர்களின் குர்பானி ஒட்டகங்களுக்கு நான் என் கைகளால் அடையாள மாலைகள் திரித்தேன். பிறகு அவற்றை நபி (ஸல்) அவர்கள் அந்த ஒட்டகங்களின் கழுத்தில் தொங்கவிட்டு, அவற்றுக்கு அடையாளமிட்டார்கள். (பிறகு மக்காவில்) குர்பானி கொடு(ப்பதற்காக அனுப்பிவை)த்தார்கள். ஆனால், (அதற்குமுன்) அவர்களுக்கு அனுமதிக்கப்படடிருந்த எதுவும் (அப்போது மதீனாவிலிருந்த) அவர்கள்மீது (இஹ்ராம் கட்டியவருக்குப் போன்று) தடை செய்யப்பட்டதாக ஆகவில்லை.55 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Hajj (Pilgrimage)
- Hadith Index
- #1696
- Book Index
- 174
Grades
- -