ஹதீஸ்கள்
#1700
ஸஹீஹ் அல்-புகாரீ - Hajj (Pilgrimage)
அம்ரா பின்த் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஸியாத் பின் அபீசுஃப்யான் அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களுக்குக் கடிதம் எழுதி, “(மக்காவுக்கு) குர்பானி பிராணியை அனுப்பிவைப்பவருக்கும், அப்பிராணி அறுக்கப்படும்வரை ஹாஜிகளுக்குத் தடை செய்யப்படும் அனைத்தும் தடை செய்யப் படும்” என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறாரே! (இது சரியா?) எனக் கேட்டார். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், “இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் சொல்வது போலில்லை; நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் குர்பானி பிராணிக்கான அடையாள மாலைகளை எனது கையாலேயே திரித்திருக்கிறேன்; பிறகு அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் அம்மாலைகளைத் தம் கரங்களால் அதன் கழுத்தில் தொங்கவிட்டார்கள்; பிறகு, பிராணியை என் தந்தையுடன் (மக்காவுக்கு) அனுப்பிவைத் தார்கள்; ஆனால், அந்த குர்பானிப் பிராணி பலியிடப்படும்வரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் அனுமதித்த எதுவும் தடை செய்யப்பட வில்லை” எனக் கூறினார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Hajj (Pilgrimage)
- Hadith Index
- #1700
- Book Index
- 178
Grades
- -