Loading...

Loading...
நூல்கள்
௬௫ ஹதீஸ்கள்
நஸ்ஸால் பின் சப்ரா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அலீ (ரலி) அவர்கள் (கூஃபா நகர் பள்ளிவாசலின்) விசாலமான முற்றத்தின் வாசலில் இருந்தபோது அவர்களிடம் தண்ணீர் கொண்டுவரப்பட்டது. (அதை) அவர்கள் நின்றுகொண்டே அருந்தி னார்கள். பிறகு ‘‘மக்களில் சிலர் நின்றுகொண்டு அருந்துவதை வெறுக்கிறார்கள். ஆனால், (இப்போது) நான் செய்ததை நீங்கள் பார்த்ததைப் போன்றே நபி (ஸல்) அவர்கள் செய்ததை நான் பார்த்தேன்” என்று சொன்னார்கள். அத்தியாயம் :
حدثنا ابو نعيم، حدثنا مسعر، عن عبد الملك بن ميسرة، عن النزال، قال اتى علي رضى الله عنه على باب الرحبة، فشرب قايما فقال ان ناسا يكره احدهم ان يشرب وهو قايم، واني رايت النبي صلى الله عليه وسلم فعل كما رايتموني فعلت
நஸ்ஸால் பின் சப்ரா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (ஒருமுறை) அலீ (ரலி) அவர்கள் தமது (ஆட்சியின்போது) லுஹ்ர் தொழுகையைத் தொழுதுவிட்டு கூஃபா நகர(ப் பள்ளிவாசல்) முற்றத்தில் மக்களின் தேவைகளைக் கவனிப்பதற்காக அமர்ந்தார்கள். அதற்குள் அஸ்ர் தொழுகை வந்துவிட்டது. பிறகு தண்ணீர் கொண்டுவரப்பட்டபோது அவர்கள் (அதை) அருந்திவிட்டுத் தமது முகத்தையும் தம் இரு கைகளையும் கழுவினார்கள். -அறிவிப்பாளர் ஆதம் பின் அபீஇயாஸ் (ரஹ்) அவர்கள், தலை மற்றும் கால்களையும் குறிப்பிட்டார்கள்.- பிறகு எழுந்து அதன் மீதியை நின்று கொண்டு பருகினார்கள். பிறகு, ‘‘மக்கள் சிலர் நின்றுகொண்டு (நீர்) அருந்துவதை வெறுக்கிறார்கள். நபி (ஸல்) அவர்களோ நான் செய்ததைப் போன்று செய்தார்கள்” என்று சொன்னார் கள். அத்தியாயம் :
حدثنا ادم، حدثنا شعبة، حدثنا عبد الملك بن ميسرة، سمعت النزال بن سبرة، يحدث عن علي رضى الله عنه انه صلى الظهر ثم قعد في حوايج الناس في رحبة الكوفة حتى حضرت صلاة العصر، ثم اتي بماء فشرب وغسل وجهه ويديه وذكر راسه ورجليه، ثم قام فشرب فضله وهو قايم ثم قال ان ناسا يكرهون الشرب قايما وان النبي صلى الله عليه وسلم صنع مثل ما صنعت
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் நின்றுகொண்டு ‘ஸம்ஸம்’ கிணற்றிலிருந்து (நீர்) பருகினார்கள். அத்தியாயம் :
حدثنا ابو نعيم، حدثنا سفيان، عن عاصم الاحول، عن الشعبي، عن ابن عباس، قال شرب النبي صلى الله عليه وسلم قايما من زمزم
உம்முல் ஃபள்ல் பின்த் அல் ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (அரஃபா தினமான துல்ஹிஜ்ஜா ஒன்பதாம் நாளன்று) நான் நபி (ஸல்) அவர்களுக்குப் பால் கிண்ணம் ஒன்றை அனுப்பினேன். அவர்கள் அரஃபா நாளின் அந்த மாலை நேரத்தில் (அரஃபா பெருவெளியில்) நின்றுகொண்டி ருந்தார்கள். அவர்கள் தமது கரத்தால் (அக்கிண்ணத்தை) எடுத்து அதைப் பருகினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் மாலிக் (ரஹ்) அவர்கள் அபுந்நள்ர் சாலிம் (ரஹ்) அவர்களிடமிருந்து அறிவிக்கும் தமது அறிவிப்பில் ‘‘ஒட்டகத்தின் மீது இருந்தபடி (பருகினார்கள்)” என்று கூடுதலாகக் குறிப்பிட்டுள்ளார்கள்.39 அத்தியாயம் :
حدثنا مالك بن اسماعيل، حدثنا عبد العزيز بن ابي سلمة، اخبرنا ابو النضر، عن عمير، مولى ابن عباس عن ام الفضل بنت الحارث، انها ارسلت الى النبي صلى الله عليه وسلم بقدح لبن، وهو واقف عشية عرفة، فاخذ بيده فشربه. زاد مالك عن ابي النضر على بعيره
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தண்ணீர் கலந்த பால் கொண்டு வரப்பட்டது. அப்போது அவர்களுக்கு வலப் பக்கம் கிராமவாசி ஒருவரும் இடப் பக்கம் அபூபக்ர் (ரலி) அவர்களும் இருந்தனர். நபி (ஸல்) அவர்கள் (அந்தப் பாலை) பருகிவிட்டுப் பிறகு (மிச்சத்தை) அந்தக் கிராமவாசிக்குக் கொடுத்துவிட் டார்கள். மேலும், ‘‘வலப் பக்கம் இருப்பவருக்கும், அடுத்து (அவருக்கு) வலப் பக்கத்தில் இருப்பவருக்கும் (கொடுங்கள்)” என்று சொன்னார்கள்.40 அத்தியாயம் :
حدثنا اسماعيل، قال حدثني مالك، عن ابن شهاب، عن انس بن مالك رضى الله عنه ان رسول الله صلى الله عليه وسلم اتي بلبن قد شيب بماء، وعن يمينه اعرابي وعن شماله ابو بكر، فشرب، ثم اعطى الاعرابي، وقال " الايمن الايمن
சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களி டம் பானமொன்று கொண்டுவரப்பட்டது. அவர்கள் அதை அருந்தினார்கள். அப்போது அவர்களின் வலப் பக்கம் சிறுவர் ஒருவரும், இடப் பக்கம் முதியவர் களும் அமர்ந்திருந்தனர். ஆகவே, நபி (ஸல்) அவர்கள் அந்தச் சிறுவரிடம், ‘‘(இந்தப் பானத்தை முதியவர்களான) இவர்களுக்கு அளிக்க எனக்கு நீ அனுமதியளிப்பாயா?” என்று கேட்டார்கள். அதற்கு அச்சிறுவர், ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதரே! தங்களிடமிருந்து எனக்குக் கிடைக்கும் இந்தப் பேற்றை (வேறு) எவருக்காகவும் நான் விட்டுத்தரமாட்டேன்” என்று பதில் சொன்னார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதை அச்சிறுவரின் கையில் வைத்துவிட்டார்கள்.41 அத்தியாயம் :
حدثنا اسماعيل، قال حدثني مالك، عن ابي حازم بن دينار، عن سهل بن سعد رضى الله عنه ان رسول الله صلى الله عليه وسلم اتي بشراب فشرب منه، وعن يمينه غلام وعن يساره الاشياخ. فقال للغلام " اتاذن لي ان اعطي هولاء ". فقال الغلام والله يا رسول الله لا اوثر بنصيبي منك احدا. قال فتله رسول الله صلى الله عليه وسلم في يده
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் தம் தோழர் ஒருவர் (அபூபக்ர்) உடன் அன்சாரி ஒருவரிடம் (அவரது தோட்டத்திற்குச்) சென்றார்கள். நபி (ஸல்) அவர்களும் அவர்கள் தம் தோழரும் (அந்த அன்சாரிக்கு) ‘சலாம்’ (முகமன்) கூறினர். அந்த அன்சாரி பதில் சலாம் சொல்லிவிட்டு, ‘‘அல்லாஹ்வின் தூதரே! என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும். இது வெப்பமான வேளை!” என்றார். அப்போது அவர் தமது தோட்டத்தில் நீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார். நபி (ஸல்) அவர்கள், ‘‘இரவில் தோல்பையில் (ஊற்றி) வைத்த தண்ணீர் உம்மிடம் இருந்தால் (எங்களுக்குத் தாருங்கள்). இல்லாவிட்டால் நாங்கள் (இரைத்து ஊற்றப்பட்டுள்ள இந்த நீரைத் தொட்டியில்) வாய்வைத்துக் குடித்துக்கொள்கிறோம்” என்று சொன் னார்கள். (தமது) தோட்டத்திற்கு நீர் பாய்ச்சிக் கொண்டிருந்த அந்த அன்சாரி, ‘‘அல்லாஹ் வின் தூதரே! இரவில் தோல்பையில் (ஊற்றி) வைக்கப்பட்ட தண்ணீர் என்னிடம் உள்ளது” என்று கூறியபடி பந்தலை நோக்கி நடந்தார். பின்னர் அவர் கிண்ணமொன்றில் தண்ணீர் ஊற்றிப் பிறகு அதன் மீது தமது வளர்ப்பு ஆட்டிலிருந்து பால் கறந்து (அதில் கலந்து)விட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் (அதைப்) பருகினார்கள். பிறகு மறுபடியும் அவர் கொண்டுவந்தார். (அதை) நபி (ஸல்) அவர்களுடன் வந்திருந்த மனிதர் பருகினார்.42 அத்தியாயம் :
حدثنا يحيى بن صالح، حدثنا فليح بن سليمان، عن سعيد بن الحارث، عن جابر بن عبد الله رضى الله عنهما ان النبي صلى الله عليه وسلم دخل على رجل من الانصار ومعه صاحب له، فسلم النبي صلى الله عليه وسلم وصاحبه، فرد الرجل فقال يا رسول الله بابي انت وامي. وهى ساعة حارة، وهو يحول في حايط له يعني الماء فقال النبي صلى الله عليه وسلم " ان كان عندك ماء بات في شنة والا كرعنا ". والرجل يحول الماء في حايط فقال الرجل يا رسول الله عندي ماء بات في شنة. فانطلق الى العريش فسكب في قدح ماء، ثم حلب عليه من داجن له، فشرب النبي صلى الله عليه وسلم ثم اعاد، فشرب الرجل الذي جاء معه
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (எங்கள் உறவினர்) குடும்பத்தாரி டையே நின்று என் தந்தையின் சகோதரர்களுக்கு நிறம் மாறிய பேரீச்சங் காய்களால் ஆன மதுவை ஊற்றிக் கொண்டிருந்தேன். நான் அவர்களில் (வயதில்) சிறியவனாக இருந்தேன். அப்போது ‘‘மது தடை செய்யப்பட்டு விட்டது” என்று சொல்லப்பட்டது. உடனே (என் உறவினார்கள்) ‘‘அதைக் கவிழ்த்து (கொட்டி)விடு” என்று சொன்னார்கள். அவ்வாறே நாங்கள் கவிழ்த்து(க் கொட்டி) விட்டோம். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுலைமான் பின் தர்கான் அல்பளி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் அனஸ் (ரலி) அவர்களிடம், ‘‘அவர்களுடைய மது எத்தகையது?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘பேரீச்சச் செங்காயிலிருந்தும் நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங்காயிலிருந்தும் தயாரிக்கப்பட்டதாகும்” என்று சொன்னார்கள். அப்போது அபூபக்ர் பின் அனஸ் (ரஹ்) அவர்கள், ‘‘(அதாவது) அதுவே அவர்களின் மதுபானமாக இருந்தது” என்று கூறினார்கள். அனஸ் (ரலி) அவர்கள் அதை மறுக்கவில்லை. என் தோழர்களில் ஒருவர் கூறினார்: அனஸ் (ரலி) அவர்கள், ‘‘அதுதான் அவர்களின் அன்றைய மதுபானமாக இருந்தது” என்று சொல்ல நான் கேட்டிருக்கிறேன்.43 அத்தியாயம் :
حدثنا مسدد، حدثنا معتمر، عن ابيه، قال سمعت انسا رضى الله عنه قال كنت قايما على الحى اسقيهم عمومتي وانا اصغرهم الفضيخ، فقيل حرمت الخمر. فقال اكفيها. فكفانا. قلت لانس ما شرابهم قال رطب وبسر. فقال ابو بكر بن انس وكانت خمرهم. فلم ينكر انس. وحدثني بعض اصحابي انه سمع انسا يقول كانت خمرهم يوميذ
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘இரவின் இருள் படரத் தொடங்கி விட்டால்’ அல்லது ‘அந்திப் பொழுதாகி விட்டால்’ உங்கள் குழந்தைகளை (வெளியே திரிய விடாமல்) தடுத்து விடுங்கள். ஏனெனில், ஷைத்தான்கள் அப்போதுதான் (பூமியெங்கும்) பரவுகின்றன. இரவு வேளையில் சிறிது நேரம் கழிந்துவிட்டால் அவர்களை (வெளியே செல்ல) விட்டுவிடுங்கள். மேலும், (இரவு நேரத்தில்) கதவுகளைத் தாழிட்டுவிடுங்கள். (அப்போது) அல்லாஹ் வின் பெயரைச் சொல்லுங்கள். ஏனெனில், ஷைத்தான் மூடப்பட்ட எந்தக் கதவையும் திறப்பதில்லை. உங்கள் தண்ணீர் பையி(ன் வாயி)னைச் சுருக்கிட்டு மூடிவிடுங்கள். (அப்போதும்) அல்லாஹ்வின் பெயரைச் சொல்லுங்கள். உங்களுடைய பாத்திரங்களை மூடி வையுங்கள். (அப்போதும்) அல்லாஹ்வின் பெயரைச் சொல்லுங்கள். (அவற்றை முழுவதும் மூட இயலாவிட்டாலும்) அவற்றின்மீது எதையாவது குறுக்காக வைத்தேனும் மூடிவிடுங்கள். உங்கள் விளக்குகளை அணைத்துவிடுங்கள். இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.44 அத்தியாயம் :
حدثنا اسحاق بن منصور، اخبرنا روح بن عبادة، اخبرنا ابن جريج، قال اخبرني عطاء، انه سمع جابر بن عبد الله رضى الله عنهما يقول قال رسول الله صلى الله عليه وسلم " اذا كان جنح الليل او امسيتم فكفوا صبيانكم، فان الشياطين تنتشر حينيذ، فاذا ذهب ساعة من الليل فحلوهم، فاغلقوا الابواب واذكروا اسم الله، فان الشيطان لا يفتح بابا مغلقا، واوكوا قربكم واذكروا اسم الله، وخمروا انيتكم واذكروا اسم الله، ولو ان تعرضوا عليها شييا واطفيوا، مصابيحكم
ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘நீங்கள் உறங்(கப் போ)கும்போது விளக்குகளை அணைத்துவிடுங்கள். கதவுகளைத் தாழிட்டுவிடுங்கள். தண்ணீர் பைகளைச் சுருக்கிட்டு மூடிவிடுங்கள். உணவையும் பானத்தையும் மூடிவையுங்கள்” என்று சொன்னார்கள். அதன் மீது ஒரு குச்சியை குறுக்காக வைத்தாவது (மூடி வையுங்கள்) என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக நான் எண்ணுகிறேன். அத்தியாயம் :
حدثنا موسى بن اسماعيل، حدثنا همام، عن عطاء، عن جابر، ان رسول الله صلى الله عليه وسلم قال " اطفيوا المصابيح اذا رقدتم، وغلقوا الابواب، واوكوا الاسقية، وخمروا الطعام والشراب واحسبه قال ولو بعود تعرضه عليه
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தண்ணீர் தோல்பைகளை ‘இக்தினாஸ்’ செய்ய வேண்டாமெனத் தடை விதித்தார் கள். அதாவது அவற்றின் வாய்ப் பகுதியை வெளிப்பக்கமாகச் சுருட்டிவிட்டு அதிலிருந்து நீர் பருகுவதைத் தடை செய்தார்கள். அத்தியாயம் :
حدثنا ادم، حدثنا ابن ابي ذيب، عن الزهري، عن عبيد الله بن عبد الله بن عتبة، عن ابي سعيد الخدري رضى الله عنه قال نهى رسول الله صلى الله عليه وسلم عن اختناث الاسقية. يعني ان تكسر افواهها فيشرب منها
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தண்ணீர் தோல்பைகளை ‘இக்தினாஸ்’ செய்ய வேண்டாமெனத் தடை விதிப்பதை நான் கேட்டுள்ளேன். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அப்துல்லாஹ் பின் அல்முபாரக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ‘இக்தினாஸ்’ என்றால், தோல்பைகளின் வாய்ப் பகுதியி(னை வெளிப்பக்கமாகச் சுருட்டிவிட்டு அதி)லிருந்து பருகுவதாகும் என மஅமர் (ரஹ்) அவர்களோ மற்றவர் களோ அறிவித்தார்கள். அத்தியாயம் :
حدثنا محمد بن مقاتل، اخبرنا عبد الله، اخبرنا يونس، عن الزهري، قال حدثني عبيد الله بن عبد الله، انه سمع ابا سعيد الخدري، يقول سمعت رسول الله صلى الله عليه وسلم ينهى عن اختناث الاسقية. قال عبد الله قال معمر او غيره هو الشرب من افواهها
அய்யூப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இக்ரிமா (ரஹ்) அவர்கள் எங்களிடம் ‘‘அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்த சிறுசிறு விஷயங்களை உங்களுக்கு நான் தெரிவிக்கட்டுமா?” (என்று கேட்டுவிட்டு) ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தோலால் ஆன தண்ணீர்ப் பையின் வாயிலிருந்து தண்ணீர் குடிக்க வேண்டாம் என்றும், ஒருவர் தம் அண்டைவீட்டார் தமது வீட்டுச் சுவரில் (உத்திரம் உள்ளிட்ட) மரக்கட்டையைப் பதிப்பதைத் தடுக்க வேண்டாம் என்றும் தடை விதித்தார்கள்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا علي بن عبد الله، حدثنا سفيان، حدثنا ايوب، قال لنا عكرمة الا اخبركم باشياء، قصار حدثنا بها ابو هريرة، نهى رسول الله صلى الله عليه وسلم عن الشرب من فم القربة او السقاء، وان يمنع جاره ان يغرز خشبه في داره
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் தண்ணீர் தோல் பையின் வாய்ப் பகுதியிலிருந்து (தண்ணீர்) அருந்த வேண்டாமெனத் தடை விதித்தார்கள். அத்தியாயம் :
حدثنا مسدد، حدثنا اسماعيل، اخبرنا ايوب، عن عكرمة، عن ابي هريرة رضى الله عنه نهى النبي صلى الله عليه وسلم ان يشرب من في السقاء
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் தண்ணீர் தோல் பையின் வாயிலிருந்து (தண்ணீர்) குடிக்க வேண்டாமெனத் தடை விதித்தார்கள். அத்தியாயம் :
حدثنا مسدد، حدثنا يزيد بن زريع، حدثنا خالد، عن عكرمة، عن ابن عباس رضى الله عنهما قال نهى النبي صلى الله عليه وسلم عن الشرب من في السقاء
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் (ஏதேனும்) பருகும்போது பாத்திரத்தில் மூச்சுவிட வேண்டாம். நீங்கள் சிறுநீர் கழிக்கும்போது உங்கள் பிறவி உறுப்பை வலக் கையால் தொட வேண்டாம். நீங்கள் சுத்தம் செய்யும்போது வலக் கையால் சுத்தம் செய்ய வேண்டாம். இதை அபூகத்தாதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.48 அத்தியாயம் :
حدثنا ابو نعيم، حدثنا شيبان، عن يحيى، عن عبد الله بن ابي قتادة، عن ابيه، قال قال رسول الله صلى الله عليه وسلم " اذا شرب احدكم فلا يتنفس في الاناء، واذا بال احدكم فلا يمسح ذكره بيمينه، واذا تمسح احدكم فلا يتمسح بيمينه
ஸுமாமா பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (என் பாட்டனார்) அனஸ் (ரலி) அவர்கள் பாத்திரத்தில் (பருகும்போது) இரண்டு அல்லது மூன்று முறை மூச்சு விட்டு(ப் பருகி)வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் மூன்று முறை மூச்சு விட்டு(ப் பருகி)வந்ததாகச் சொன்னார்கள்.49 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا ابو عاصم، وابو نعيم قالا حدثنا عزرة بن ثابت، قال اخبرني ثمامة بن عبد الله، قال كان انس يتنفس في الاناء مرتين او ثلاثا، وزعم ان النبي صلى الله عليه وسلم كان يتنفس ثلاثا
அப்துர் ரஹ்மான் பின் அபீலைலா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் (இராக்கில் உள்ள) ‘அல்மதாயின்’ (தைஃபூன்) நகரத்தில் இருந்தார்கள். அப்போது பருகுவதற்குத் தண்ணீர் கேட்டார்கள். உடனே (அக்னி ஆராதனை யாளரான) ஊர்த் தலைவர் வெள்ளிப் பாத்திரம் (ஒன்றில் தண்ணீர்) கொண்டு வந்தார். ஹுதைஃபா (ரலி) அவர்கள் அதை அவர்மீது வீசியெறிந்துவிட்டு, (அங்கிருந்தவர்களிடம்) ‘‘நான் இவரை(ப் பலமுறை) தடுத்தும் இவர் (வெள்ளிப் பாத்திரத்தைத்) தவிர்த்துக்கொள்ளாததால் தான் நான் இதை அவர்மீது வீசியெறிந் தேன். நபி (ஸல்) அவர்கள் சாதாரணப் பட்டையோ அலங்காரப் பட்டையோ அணியக் கூடாதென்றும் தங்கம் மற்றும் வெள்ளிப் பாத்திரங்களில் பருக வேண்டாமென்றும் தடை விதித்தார்கள். மேலும் அவர்கள், ‘‘அவை இம்மையில் (இறைமறுப்பாளர்களான) அவர்களுக்கும், மறுமையில் (இறைநம்பிக்கையாளர்களான) உங்களுக்கும் உரியவையாகும்” என்று கூறினார்கள் எனத் தெரிவித்தார்கள்.51 அத்தியாயம் :
حدثنا حفص بن عمر، حدثنا شعبة، عن الحكم، عن ابن ابي ليلى، قال كان حذيفة بالمداين فاستسقى، فاتاه دهقان بقدح فضة، فرماه به فقال اني لم ارمه الا اني نهيته فلم ينته، وان النبي صلى الله عليه وسلم نهانا عن الحرير والديباج والشرب في انية الذهب والفضة وقال " هن لهم في الدنيا وهى لكم في الاخرة
இப்னு அபீலைலா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நாங்கள் ஹுதைஃபா (ரலி) அவர்களு டன் புறப்பட்டோம். அவர்கள், ‘‘தங்கம் மற்றும் வெள்ளிப் பாத்திரங்களில் பருகாதீர்கள். (ஆண்கள்) சாதாரணப் பட்டையும் அலங்காரப் பட்டையும் அணியாதீர்கள். ஏனெனில், அவை இம்மையில் (இறைமறுப்பாளர்களான) அவர்களுக்கும், மறுமையில் (இறை நம்பிக்கையாளர்களான) உங்களுக்கும் உரியவையாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாகச் சொன்னார்கள்.52 அத்தியாயம் :
حدثنا محمد بن المثنى، حدثنا ابن ابي عدي، عن ابن عون، عن مجاهد، عن ابن ابي ليلى، قال خرجنا مع حذيفة وذكر النبي صلى الله عليه وسلم قال " لا تشربوا في انية الذهب والفضة، ولا تلبسوا الحرير والديباج، فانها لهم في الدنيا ولكم في الاخرة
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வெள்ளி (அல்லது தங்க)ப் பாத்திரத்தில் அருந்துகின்றவன் தனது வயிற்றில் மிடறுமிடறாக நரக நெருப்பையே விழுங்குகின்றான். இதை நபி (ஸல்) அவர்களின் துணைவியார் உம்மு சலமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا اسماعيل، قال حدثني مالك بن انس، عن نافع، عن زيد بن عبد الله بن عمر، عن عبد الله بن عبد الرحمن بن ابي بكر الصديق، عن ام سلمة، زوج النبي صلى الله عليه وسلم ان رسول الله صلى الله عليه وسلم قال " الذي يشرب في اناء الفضة انما يجرجر في بطنه نار جهنم