Loading...

Loading...
நூல்கள்
௫௦௪ ஹதீஸ்கள்
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (மக்காவின்) பள்ளத்தாக்கு நோக்கிக் கிளம்பிச் சென்று (அங்குள்ள ‘ஸஃபா’ எனும்) அந்த மலைமீதேறி, ‘‘யா ஸபாஹா! (இதோ, அதிகாலை ஆபத்து! உதவி! உதவி!) என்று கூவியழைத்தார்கள். உடனே அவர்களிடம் குறைஷியர் குழுமினர். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘நான் உங்களிடம் ‘காலையிலோ மாலையிலோ (உங்களைத் தாக்குவதற்காக) உங்களை நோக்கிப் பகைவர்கள் வருகிறார்கள்’ என்று தகவல் சொன்னால் என்னை நீங்கள் நம்பியிருப்பீர்களா?, கூறுங்கள்!” என்று கேட்டார்கள். (குழுமியிருந்த மக்கா) மக்கள், ‘‘ஆம் (நம்பவே செய்வோம்)” என்று பதிலளித்தனர். நபி (ஸல்) அவர்கள், ‘‘அப்படியானால், கடும் வேதனையொன்று எதிர்நோக்கி யுள்ளது என உங்களுக்கு எச்சரிக்கை செய்கின்றேன்” என்று சொன்னார்கள். (இதைக் கேட்ட) உடன் அபூலஹப், ‘‘உனக்கு அழிவுண்டாகட்டும்; இதற்காகத்தான் எங்களை ஒன்றுதிரட்டினாயா?” என்று கேட்டான். அப்போது வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், ‘‘அழியட்டும் அபூலஹபின் இரு கரங்கள்” என்று தொடங்கும் (111ஆவது) அத்தியாயத்தை அருளினான். அத்தியாயம் :
حدثنا محمد بن سلام، اخبرنا ابو معاوية، حدثنا الاعمش، عن عمرو بن مرة، عن سعيد بن جبير، عن ابن عباس، ان النبي صلى الله عليه وسلم خرج الى البطحاء فصعد الى الجبل فنادى " يا صباحاه ". فاجتمعت اليه قريش فقال " ارايتم ان حدثتكم ان العدو مصبحكم او ممسيكم، اكنتم تصدقوني ". قالوا نعم. قال " فاني نذير لكم بين يدى عذاب شديد ". فقال ابو لهب الهذا جمعتنا تبا لك. فانزل الله عز وجل {تبت يدا ابي لهب} الى اخرها
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘உமக்கு அழிவுண்டாகட்டும்; இதற்காகவா எங்களை நீ ஒன்றுகூட்டினாய்!” என்று (நபி (ஸல்) அவர்களைப் பார்த்து) அபூலஹப் கேட்டான். அப்போது, ‘‘அழியட்டும், அபூலஹபின் இரு கரங்கள்...” எனும் (111ஆவது) அத்தியாயம் அருளப்பெற்றது. அத்தியாயம் :
حدثنا عمر بن حفص، حدثنا ابي، حدثنا الاعمش، حدثني عمرو بن مرة، عن سعيد بن جبير، عن ابن عباس رضى الله عنهما قال ابو لهب تبا لك الهذا جمعتنا فنزلت {تبت يدا ابي لهب}
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் கூறினான்: ஆதமின் மகன் என்னை நம்ப மறுக்கின்றான்; ஆனால், அவனுக்கு அது (தகுதி) இல்லை. அவன் என்னை ஏசுகின்றான்; ஆனால், அவனுக்கு அது (தகுதி) இல்லை. நான், (மனிதனான) அவனை முதலில் படைத்தது போன்றே மீண்டும் அவனை நான் படைக்கமாட்டேன் என்று அவன் கூறுவதே அவன் என்னை நம்ப மறுப்பதாகும். (உண்மையில், மனிதன் இறந்த பிறகு) அவனுக்கு மீண்டும் உயிர் கொடுத்து எழுப்புவதைவிட, அவனை ஆரம்பமாகப் படைத்தது சுலபமன்று. (அதையே செய்துவிட்ட எனக்கு மீண்டும் உயிர் கொடுப்பது கடினமன்று.) ‘அல்லாஹ் (தனக்குக்) குழந்தையை ஏற்படுத்திக்கொண்டான்’ என்று அவன் கூறுவதே அவன் என்னை ஏசுவதாகும். ஆனால், நானோ ஏகன்; (எவரிடமும்) எந்தத் தேவையுமற்றவன்; நான் யாரையும் பெற்றவனுமல்லன்; யாருக்கும் பிறந்தவனுமல்லன். எனக்கு நிகராக யாருமில்லை.2 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا ابو اليمان، حدثنا شعيب، حدثنا ابو الزناد، عن الاعرج، عن ابي هريرة رضى الله عنه عن النبي صلى الله عليه وسلم قال " قال الله كذبني ابن ادم ولم يكن له ذلك، وشتمني ولم يكن له ذلك، فاما تكذيبه اياى فقوله لن يعيدني كما بداني، وليس اول الخلق باهون على من اعادته، واما شتمه اياى فقوله اتخذ الله ولدا، وانا الاحد الصمد لم الد ولم اولد ولم يكن لي كفا احد
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் கூறினான்: ஆதமின் மகன் என்னை நம்ப மறுக்கின்றான்; ஆனால், அவனுக்கு அது (தகுதி) இல்லை. அவன் என்னை ஏசுகின்றான்; ஆனால், அவனுக்கு அது (தகுதி) இல்லை. நான், (மனிதனான) அவனை ஆரம்பத்தில் படைத்ததைப் போன்றே மீண்டும் அவனை நான் படைக்கமாட்டேன் என்று அவன் கூறுவதே அவன் என்னை நம்ப மறுப்பதாகும். ‘அல்லாஹ் (தனக்குக்) குழந்தையை ஏற்படுத்திக்கொண்டான்’ என்று அவன் கூறுவதே அவன் என்னை ஏசுவதாகும். ஆனால், நானோ (எவரிடமும்) எந்தத் தேவையுமற்றவன்; நான் யாரையும் பெற்றவனுமல்லன்; யாருக்கும் பிறந்தவனுமல்லன். எனக்கு நிகராக யாருமில்லை. (அல்லாஹ் கூறுகின்றான்:) ‘‘அவன் (எவரையும்) பெற்றவனுமல்லன்; (யாருக்கும்) பிறந்தவனுமல்லன். (ஆகவே, அவனுக்குப் பெற்றோருமில்லை; பிள்ளைகளுமில்லை). தவிர, அவனுக்கு நிகராகவும் யாருமில்லை” (112:3,4) (112:4ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘குஃப்வ்’ எனும் சொல்லும், கஃபீஃ, கிஃபாஉ ஆகிய சொற்களும் (‘நிகரானவன்’ என்ற) ஒரே பொருள் கொண்டவையாகும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا اسحاق بن منصور، قال وحدثنا عبد الرزاق، اخبرنا معمر، عن همام، عن ابي هريرة، قال قال رسول الله صلى الله عليه وسلم " قال الله كذبني ابن ادم ولم يكن له ذلك، وشتمني ولم يكن له ذلك، اما تكذيبه اياى ان يقول اني لن اعيده كما بداته، واما شتمه اياى ان يقول اتخذ الله ولدا، وانا الصمد الذي لم الد ولم اولد ولم يكن لي كفوا احد ". {لم يلد ولم يولد * ولم يكن له كفوا احد} كفوا وكفييا وكفاء واحد
ஸிர்ரு பின் ஹுபைஷ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் உபை பின் கஅப் (ரலி) அவர்களி டம் ‘முஅவ்விதத்தைனி’ (பாதுகாப்புக் கோரும் பிரார்த்தனைகளான 113, 114ஆவது அத்தியாயங்கள் குர்ஆனில் கட்டுப்பட்டவையா என்பது) பற்றிக் கேட்டேன் அதற்கு அவர்கள் (பின் வருமாறு) கூறினார்கள்: இது குறித்து நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘என்னிடம் (நபியே! கூறுக: நான் பாதுகாப்புக் கோருகிறேன் என்று) கூறப்பட்டது. நானும் கூறினேன்” என்று சொன்னார்கள். (அறிவிப்பாளர் ஸிர்ரு பின் ஹுபைஷ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:) ஆகவே, நாங்களும் (நானும் உபை பின் கஅபும்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னதைப் போன்றே சொல்வோம்.2 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا قتيبة بن سعيد، حدثنا سفيان، عن عاصم، وعبدة، عن زر بن حبيش، قال سالت ابى بن كعب عن المعوذتين، فقال سالت رسول الله صلى الله عليه وسلم فقال قيل لي فقلت فنحن نقول كما قال رسول الله صلى الله عليه وسلم
ஸிர்ரு பின் ஹுபைஷ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் உபை பின் கஅப் (ரலி) அவர்களிடம், ‘‘அபூமுன்ஃதிரே! தங்கள் சகோதரர் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் இப்படி இப்படிச் சொல்கிறாரே?” என்று கேட்டேன்.2 அதற்கு உபை (ரலி) அவர்கள், ‘‘நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (இது குறித்துக்) கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘என்னிடம் (இவ்விரு அத்தியாயங்களிலும், ‘நபியே! கூறுக: நான் பாதுகாப்புக் கோருகிறேன்’ என்று) கூறப்பட்டது. (அதற்கேற்ப) நானும் கூறினேன்” என்று சொன்னார்கள். (அறிவிப்பாளர் ஸிர்ரு கூறுகிறார்கள்:) ஆகவே, நாங்கள் (நானும் உபை அவர்களும்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னதைப் போன்றே சொல்வோம்.3 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا علي بن عبد الله، حدثنا سفيان، حدثنا عبدة بن ابي لبابة، عن زر بن حبيش، وحدثنا عاصم، عن زر، قال سالت ابى بن كعب قلت يا ابا المنذر ان اخاك ابن مسعود يقول كذا وكذا. فقال ابى سالت رسول الله صلى الله عليه وسلم فقال لي قيل لي. فقلت، قال فنحن نقول كما قال رسول الله صلى الله عليه وسلم