ஹதீஸ்கள்
#4972
ஸஹீஹ் அல்-புகாரீ - Prophetic Commentary on the Qur'an
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (மக்காவின்) பள்ளத்தாக்கு நோக்கிக் கிளம்பிச் சென்று (அங்குள்ள ‘ஸஃபா’ எனும்) அந்த மலைமீதேறி, ‘‘யா ஸபாஹா! (இதோ, அதிகாலை ஆபத்து! உதவி! உதவி!) என்று கூவியழைத்தார்கள். உடனே அவர்களிடம் குறைஷியர் குழுமினர். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘நான் உங்களிடம் ‘காலையிலோ மாலையிலோ (உங்களைத் தாக்குவதற்காக) உங்களை நோக்கிப் பகைவர்கள் வருகிறார்கள்’ என்று தகவல் சொன்னால் என்னை நீங்கள் நம்பியிருப்பீர்களா?, கூறுங்கள்!” என்று கேட்டார்கள். (குழுமியிருந்த மக்கா) மக்கள், ‘‘ஆம் (நம்பவே செய்வோம்)” என்று பதிலளித்தனர். நபி (ஸல்) அவர்கள், ‘‘அப்படியானால், கடும் வேதனையொன்று எதிர்நோக்கி யுள்ளது என உங்களுக்கு எச்சரிக்கை செய்கின்றேன்” என்று சொன்னார்கள். (இதைக் கேட்ட) உடன் அபூலஹப், ‘‘உனக்கு அழிவுண்டாகட்டும்; இதற்காகத்தான் எங்களை ஒன்றுதிரட்டினாயா?” என்று கேட்டான். அப்போது வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், ‘‘அழியட்டும் அபூலஹபின் இரு கரங்கள்” என்று தொடங்கும் (111ஆவது) அத்தியாயத்தை அருளினான். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prophetic Commentary on the Qur'an
- Hadith Index
- #4972
- Book Index
- 494
Grades
- -