Loading...

Loading...
நூல்கள்
௫௦௪ ஹதீஸ்கள்
கத்தாதா பின் திஆமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ‘‘(நபியே!) நாம் உமக்கு வெளிப்படை யான வெற்றியை அளித்துள்ளோம்” எனும் (48:1ஆவது) இறைவசனம் ஹுதைபியா உடன்படிக்கையையே குறிக்கிறது” என்று அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.3 அத்தியாயம் :
حدثنا محمد بن بشار، حدثنا غندر، حدثنا شعبة، سمعت قتادة، عن انس رضى الله عنه {انا فتحنا لك فتحا مبينا} قال الحديبية
அப்துல்லாஹ் பின் முகஃப்பல் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி தினத்தில் (தமது ஒட்டகத்தின் மீதமர்ந்தபடி) ‘அல்ஃபத்ஹ்’ எனும் (48ஆவது) அத்தியாயத்தைத் ‘தர்ஜீஉ’ செய்து (ஓசை நயத்துடன்) ஓதிக்கொண்டிருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் ஓதியதைப் போன்று உங்களிடம் நான் ஓதிக்காட்ட நினைத்தால் (அவ்வாறு) நான் செய்திருப்பேன்.4 அத்தியாயம் :
حدثنا مسلم بن ابراهيم، حدثنا شعبة، حدثنا معاوية بن قرة، عن عبد الله بن مغفل، قال قرا النبي صلى الله عليه وسلم يوم فتح مكة سورة الفتح فرجع فيها. قال معاوية لو شيت ان احكي لكم قراءة النبي صلى الله عليه وسلم لفعلت
முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் தம் பாதங்கள் வீங்கும் அளவுக்கு நின்று (அல்லாஹ்வைத்) தொழுதார்கள். அப்போது அவர்களிடம் ‘‘தங்களின் முந்தைய பிந்தைய தவறுகளை அல்லாஹ் மன்னித்துவிட்டானே! (பிறகு ஏன் நீங்கள் இந்த அளவுக்கு சிரமம் எடுத்துக்கொள்ள வேண்டும்?)” என்று கேட்கப்பட்டது. (அதற்கு அவர்கள்,) ‘‘நான் நன்றியுள்ள அடியானாக இருக்க வேண்டாமா?” என்று கேட்டார்கள்.5 அத்தியாயம் :
حدثنا صدقة بن الفضل، اخبرنا ابن عيينة، حدثنا زياد، انه سمع المغيرة، يقول قام النبي صلى الله عليه وسلم حتى تورمت قدماه فقيل له غفر الله لك ما تقدم من ذنبك وما تاخر قال " افلا اكون عبدا شكورا
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் இரவு நேரத்தில் தம் பாதங்கள் வீங்கும் அளவுக்கு நின்று வழிபடுவார்கள். ஆகவே நான், ‘‘ஏன் இப்படிச் செய்கிறீர்கள், அல்லாஹ்வின் தூதரே! தங்களின் முந்தைய பிந்தைய தவறுகளை அல்லாஹ் மன்னித்து விட்டானே?” என்று கேட்டேன். அவர்கள், ‘‘நான் நன்றியுள்ள அடியானாக இருக்க விரும்ப வேண்டாமா?” என்று கேட்டார்கள். (தம் வாழ்நாளின் கடைசிக் காலத்தில்) நபி (ஸல்) அவர்களின் உடல் சதை போட்டபோது அமர்ந்து தொழுதார்கள். ‘ருகூஉ’ செய்ய நினைக்கும்போது, எழுந்து (சிறிது நேரம்) ஓதுவார்கள். பிறகு, ‘ருகூஉ’ செய்வார்கள்.6 அத்தியாயம் :
حدثنا الحسن بن عبد العزيز، حدثنا عبد الله بن يحيى، اخبرنا حيوة، عن ابي الاسود، سمع عروة، عن عايشة رضى الله عنها ان نبي الله صلى الله عليه وسلم كان يقوم من الليل حتى تتفطر قدماه فقالت عايشة لم تصنع هذا يا رسول الله وقد غفر الله لك ما تقدم من ذنبك وما تاخر قال " افلا احب ان اكون عبدا شكورا ". فلما كثر لحمه صلى جالسا فاذا اراد ان يركع قام، فقرا ثم ركع
அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘‘(நபியே!) நிச்சயமாக நாம் உம்மை (விசுவாசிகளின் விசுவாசம் குறித்து) சான்று பகர்பவராகவும், (அவர்களுக்கு) நற்செய்தி அறிவிப்பவராகவும், (பாவிகளுக்கு அச்சமூட்டி) எச்சரிக்கை செய்பவராகவும் அனுப்பியிருக்கிறோம்” எனும் இந்த (48:8ஆவது) குர்ஆன் வசனத்தையே ‘தவ்ராத்’ வேதத்தில் (இறைவன்) பின்வருமாறு கூறினான்: ‘‘நபியே! நிச்சயமாக நாம் உம்மை சான்று பகர்பவராகவும், நற்செய்தி அறிவிப்பவராகவும், எச்சரிக்கை செய்பவராகவும், எழுத வாசிக்கத் தெரியாத பாமரர்களின் பாதுகாவலராகவும் நாம் அனுப்பியிருக்கிறோம். நீர் என் அடியாரும் என் தூதருமாவீர். தம் காரியங்கள் அனைத்திலும் அல்லாஹ் வையே சார்ந்திருப்பவர் (‘முத்தவக்கில்’) என்று உமக்கு நான் பெயரிட்டுள்ளேன் (என அவரிடம் கூறுவோம்). (என் தூதரான) அவர் கடின சித்தமுடையவராகவோ, முரட்டுத்தனம் கொண்டவராகவோ, கடைவீதியில் கூச்சலிட்டுச் சச்சரவு செய்பவராகவோ இருக்கமாட்டார். ஒரு தீமைக்கு இன்னொரு தீமையால் தீர்வு காணமாட்டார். மாறாக, மன்னித்து விட்டுவிடுவார். வளைந்த சமுதாயத்தை அவர் மூலம் நிமிர்த்தும்வரை அல்லாஹ் அவரது உயிரைக் கைப்பற்றமாட்டான். மக்கள் ‘அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை’ என்று கூறுவார்கள். (ஓரிறைக் கோட்பாடான) அதன் மூலம் அவர் குருட்டுக் கண்களையும், செவிட்டுக் காதுகளையும், திரையிடப்பட்ட உள்ளங்களையும் திறப்பார்.7 அத்தியாயம் :
حدثنا عبد الله، حدثنا عبد العزيز بن ابي سلمة، عن هلال بن ابي هلال، عن عطاء بن يسار، عن عبد الله بن عمرو بن العاص رضى الله عنهما ان هذه، الاية التي في القران {يا ايها النبي انا ارسلناك شاهدا ومبشرا ونذيرا} قال في التوراة يا ايها النبي انا ارسلناك شاهدا ومبشرا وحرزا للاميين، انت عبدي ورسولي سميتك المتوكل ليس بفظ ولا غليظ ولا سخاب بالاسواق ولا يدفع السيية بالسيية ولكن يعفو ويصفح ولن يقبضه الله حتى يقيم به الملة العوجاء بان يقولوا لا اله الا الله فيفتح بها اعينا عميا واذانا صما وقلوبا غلفا
பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபித்தோழர்களில் ஒருவர் (குர்ஆன்) ஓதிக்கொண்டிருந்தார். அவரது குதிரை அவர் வீட்டில் கட்டப்பட்டிருந்தது. அப்போது அது மிரளத் தொடங்கியது. அவர் வெளியே வந்து பார்த்தபோது, ஒன்றையும் அவர் காணவில்லை. (அப்போதும்) அது மிரண்டுகொண்டி ருந்தது. விடிந்தவுடன் அவர் நபி (ஸல்) அவர்களிடம் அந்த விஷயத்தைத் தெரிவித்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘‘குர்ஆன் ஓதிய காரணத்தால் இறங்கிய அமைதிதான் அது” என்று கூறினர்கள்.8 அத்தியாயம் :
حدثنا عبيد الله بن موسى، عن اسراييل، عن ابي اسحاق، عن البراء رضى الله عنه قال بينما رجل من اصحاب النبي صلى الله عليه وسلم يقرا، وفرس له مربوط في الدار، فجعل ينفر، فخرج الرجل فنظر فلم ير شييا، وجعل ينفر، فلما اصبح ذكر ذلك للنبي صلى الله عليه وسلم فقال " تلك السكينة تنزلت بالقران
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஹுதைபியா நாளன்று நாங்கள் ஆயிரத்து நானூறு பேர் இருந்தோம்.9 அத்தியாயம் :
حدثنا قتيبة بن سعيد، حدثنا سفيان، عن عمرو، عن جابر، قال كنا يوم الحديبية الفا واربعماية
அந்த மரத்தின்கீழ் நடைபெற்ற (‘பைஅத்துர் ரிள்வான்’ எனும்) சத்தியப் பிரமாணத்தில் கலந்துகொண்டவர்களில் ஒருவரான அப்துல்லாஹ்பின் முகஃப்பல் அல்முஸ்னீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (பொடிக்கற்களை இரு விரல்களால் எறிந்து விளையாடும்) ‘கத்ஃப்’ எனும் கல் சுண்டு விளையாட்டிற்குத் தடை விதித்தார்கள்.10 அத்தியாயம் :
حدثنا علي بن عبد الله، حدثنا شبابة، حدثنا شعبة، عن قتادة، قال سمعت عقبة بن صهبان، عن عبد الله بن مغفل المزني، اني ممن شهد الشجرة، نهى النبي صلى الله عليه وسلم عن الخذف
உக்பா பின் ஸுஹ்பான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: குளியலறையில் சிறுநீர் கழிப்பது தொடர்பாக அப்துல்லாஹ் பின் முகஃப்பல் (ரலி) அவர்கள் கூற நான் கேட்டேன். (நபி (ஸல்) அவர்கள் அதற்குத் தடை விதித்ததாக அன்னார் தெரிவித்தார்கள்.)11 அத்தியாயம் :
وعن عقبة بن صهبان، قال سمعت عبد الله بن المغفل المزني، في البول في المغتسل
அபூகிலாபா அப்துல்லாஹ் பின் ஸைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அந்த மரத்(தின்கீழ் சத்தியப் பிரமாணம் செய்)தவர்களில் ஒருவரான ஸாபித் பின் அள்ளஹ்ஹாக் (ரலி) அவர்கள் (கூறினார்கள்:)12 அத்தியாயம் :
حدثني محمد بن الوليد، حدثنا محمد بن جعفر، حدثنا شعبة، عن خالد، عن ابي قلابة، عن ثابت بن الضحاك رضى الله عنه وكان من اصحاب الشجرة
ஹுபைப் பின் அபீஸாபித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அபூவாயில் ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்களிடம் (‘காரிஜிய்யா’ எனும் கிளர்ச்சியாளர்கள் குறித்து) கேட்பதற்காகச் சென்றேன். அப்போது அவர்கள் பின் வருமாறு கூறினார்கள்: நாங்கள் ‘ஸிஃப்பீன்’ எனுமிடத்தில் இருந்தோம். அப்போது (‘அப்துல்லாஹ் பின் அல்கவ்வா’ என்றழைக்கப்படும்) ஒரு மனிதர், ‘‘அல்லாஹ்வின் வேதத்தின்பால் (தீர்ப்புக்காக) அழைக்கப்படுகின்றவர்களை நீங்கள் காணவில்லையா?” என்று கேட்டார். அதற்கு அலீ (ரலி) அவர்கள், ‘‘ஆம். (அல்லாஹ்வின் வேதம் கூறுகின்ற தீர்ப்புப்படி செயல்பட அழைப்பு விடுக்கப் பெற்றால் அதை நான் ஏற்றுக்கொள்வேன்”) என்று கூறினார்கள். அப்போது சஹ்ல் பின் ஹுனைஃப் (ரலி) அவர்கள் கூறினார்கள்: (இப்போரில் கலந்துகொள்ளாததற்காக யார்மீதும் குற்றம் சாட்டாதீர்கள். மாறாக,) உங்களையே குற்றம் சாட்டிக்கொள்ளுங்கள். நபி (ஸல்) அவர்களுக்கும் இணைவைப்பாளர்களுக்கும் இடையே சமாதான உடன்படிக்கை நடைபெற்ற ஹுதைபியா நாளில் எங்களை நான் பார்த்திருக்கிறேன். அன்று, நாங்கள் போர் புரிவது உசிதமென்று கருதியிருந்தால் போர் புரிந்திருப்போம். (ஆனால், போர் புரியாமல் இணைவைப்பாளர்கள் விதித்த பாதகமான நிபந்தனைகளைக்கூட ஏற்றுக்கொண்டோம்). அப்போது உமர் (ரலி) அவர்கள் வந்து, ‘‘(அல்லாஹ்வின் தூதரே!) நாம் சத்தியத்திலும் எதிரிகள் அசத்தியத்திலும் இல்லையா? (சத்தியத்திற்காகப் போராடி) போரில் கொலையுண்டுவிடும்போது நம் வீரர்கள் சொர்க்கத்திலும் எதிரிகளுடைய வீரர்கள் நரகத்திலும் இருப்பார்கள் இல்லையா?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் ‘‘ஆம்” என்று பதிலளித்தார்கள். உமர் (ரலி) அவர்கள், ‘‘அப்படியிருக்க, நாம் நமது மார்க்கத்தின் விஷயத்தில் எதற்காகத் தாழ்ந்து போக வேண்டும்? அல்லாஹ் நமக்கும் அவர்களுக்கும் இடையில் தீர்ப்பளிக்காமல் இருக்கும் நிலையில் நாம் ஏன் திரும்பிச் செல்ல வேண்டும்?” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘‘கத்தாபின் புதல்வரே! நான் அல்லாஹ்வுடைய தூதராவேன். என்னை அல்லாஹ் ஒருபோதும் வீணாக்கமாட்டான்” என்று கூறினார்கள். (முஸ்லிம்களை இழிவுக்குள்ளாக்க நினைக்கும் இணைவைப்பாளர்கள்மீது) உமர் (ரலி) அவர்கள் கோபம் கொண்ட நிலையில் திரும்பிச் சென்றார்கள். தாங்கிக்கொள்ள முடியாமல் அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் வந்து ‘‘அபூபக்ர் அவர்களே! நாம் சத்தியத்திலும் எதிரிகள் அசத்தியத்திலும் இல்லையா?” என்று (நபி (ஸல்) அவர்களிடம் கேட்டதைப் போன்றே) கேட்டார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் ‘‘கத்தாபின் புதல்வரே! நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராவார்கள். அவர்களை அல்லாஹ் ஒருபோதும் வீணாக்கமாட்டான்” என்று கூறினார்கள். அப்போது ‘அல்ஃபத்ஹ்’ எனும் (48ஆவது) அத்தியாயம் இறங்கிற்று.13 அத்தியாயம் :
حدثنا احمد بن اسحاق السلمي، حدثنا يعلى، حدثنا عبد العزيز بن سياه، عن حبيب بن ابي ثابت، قال اتيت ابا وايل اساله فقال كنا بصفين فقال رجل الم تر الى الذين يدعون الى كتاب الله. فقال علي نعم. فقال سهل بن حنيف اتهموا انفسكم فلقد رايتنا يوم الحديبية يعني الصلح الذي كان بين النبي صلى الله عليه وسلم والمشركين ولو نرى قتالا لقاتلنا، فجاء عمر فقال السنا على الحق وهم على الباطل اليس قتلانا في الجنة وقتلاهم في النار قال " بلى ". قال ففيم اعطي الدنية في ديننا، ونرجع ولما يحكم الله بيننا. فقال " يا ابن الخطاب اني رسول الله ولن يضيعني الله ابدا ". فرجع متغيظا، فلم يصبر حتى جاء ابا بكر فقال يا ابا بكر السنا على الحق وهم على الباطل قال يا ابن الخطاب انه رسول الله صلى الله عليه وسلم ولن يضيعه الله ابدا. فنزلت سورة الفتح
இப்னு அபீமுளைக்கா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (ஒருமுறை) நல்லவர்களான அபூபக்ர் (ரலி) அவர்களும் உமர் (ரலி) அவர்களும் அழிவில் சிக்கிக்கொள்ள இருந்தார்கள். பனூ தமீம் குலத்தைச் சேர்ந்த பயணக் குழுவினர் நபி (ஸல்) அவர்களிடம் (தங்களுக்கு ஒரு தலைவரை நியமிக்கும்படி கோரியவர்களாக) வந்தபோது நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் அவர்கள் இருவரும் குரலை உயர்த்திப் பேசினார்கள். அந்த இருவரில் ஒருவர் (உமர்), பனூ முஜாஷிஉ குலத்தாரான அக்ரஃ பின் ஹாபிஸ் அவர்களை நோக்கி (அவரைத் தலைவராக நியமிக்கும்படி) சைகை செய்தார். மற்றொருவர் (அபூபக்ர்), இன்னொருவரை (கஅகாஉ பின் மஅபத்) நோக்கி, (அவரைத் தலைவராக நியமிக்கும்படி) சைகை செய்தார். -”அந்த இன்னொரு வருடைய பெயர் எனக்குத் தெரியாது” என்று அறிவிப்பாளர்களில் ஒருவரான நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.- அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களிடம், ‘‘எனக்கு மாறுசெய்யவே நீங்கள் விரும்புகிறீர்கள்” என்று கூறினார்கள். உமர் (ரலி) அவர்கள், ‘‘தங்களுக்கு மாறுசெய்வது என் விருப்பமன்று” என்று சொன்னார்கள். இந்த விவகாரத்தில் அவர்கள் இருவரின் குரல்களும் உயர்ந்தன. அப்போது, ‘‘இறைநம்பிக்கையாளர்களே! உங்கள் குரலை நபியின் குரலுக்குமேல் உயர்த்தாதீர்கள்!” எனும் (49:2ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளினான்.2 இப்னு ஸுபைர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: இந்த வசனம் அருளப்பெற்றபின் உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் இந்த அளவுக்கு மெதுவாகப் பேசுவார்கள்; (அவர் என்ன கூறினார் என்பதை) நபி (ஸல்) அவர்கள் அவரிடம் (திரும்ப) விசாரித்தே தெரிந்துகொள்வார்கள். இப்னு ஸுபைர் (ரலி) அவர்கள் இந்த ஹதீஸில் தம் பாட்டனார் அபூபக்ர் (ரலி) அவர்களின் பெயரைக் குறிப்பிடவில்லை. அத்தியாயம் :
حدثنا يسرة بن صفوان بن جميل اللخمي، حدثنا نافع بن عمر، عن ابن ابي مليكة، قال كاد الخيران ان يهلكا ابا بكر وعمر رضى الله عنهما رفعا اصواتهما عند النبي صلى الله عليه وسلم حين قدم عليه ركب بني تميم، فاشار احدهما بالاقرع بن حابس اخي بني مجاشع، واشار الاخر برجل اخر قال نافع لا احفظ اسمه فقال ابو بكر لعمر ما اردت الا خلافي. قال ما اردت خلافك. فارتفعت اصواتهما في ذلك، فانزل الله {يا ايها الذين امنوا لا ترفعوا اصواتكم} الاية. قال ابن الزبير فما كان عمر يسمع رسول الله صلى الله عليه وسلم بعد هذه الاية حتى يستفهمه. ولم يذكر ذلك عن ابيه، يعني ابا بكر
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: (49:2ஆவது வசனம் அருளப்பெற்ற நாளிலிருந்து) நபி (ஸல்) அவர்கள் ஸாபித் பின் கைஸ் (ரலி) அவர்களைக் காணவில்லை என்று தேடினார்கள். அப்போது ஒரு மனிதர், ‘‘அவரைக் குறித்த செய்தியைத் தங்களுக்காக நான் அறிந்து வருகிறேன், அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறினார். அவரிடம் அந்த மனிதர் சென்றார். அப்போது அவர் தமது தலையைக் கவிழ்த்தபடி (கவலையோடு) தமது வீட்டில் அமர்ந்துகொண்டிருக்கக் கண்டார். அந்த மனிதர் ஸாபித் பின் கைஸ் (ரலி) அவர்களிடம், ‘‘உங்களுக்கு என்ன ஆயிற்று?” என்று கேட்டார். அதற்கு ஸாபித் (ரலி) அவர்கள், ‘‘(எனது நிலை) மோசம்தான். நான் நபி (ஸல்) அவர்களின் குரலுக்குமேல் எனது குரலை உயர்த்தி(ப் பேசி)வந்தேன். என் (நற்)செயல்கள் அழிந்துவிட்டன; நான் நரகவாசிகளில் ஒருவன்தான்” என்று கூறினார். (செய்தியறிந்த) அந்த மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘‘ஸாபித் பின் கைஸ் இப்படி இப்படிச் சொன்னார்” என்று தெரிவித்தார். அறிவிப்பாளர்களில் ஒருவரான மூசா பின் அனஸ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அந்த மனிதர் ஸாபித் பின் கைஸ் (ரலி) அவர்களிடம், (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து,) மகத்தான நற்செய்தியை வாங்கிக்கொண்டு மீண்டும் ஒருமுறை சென்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘‘ஸாபித் பின் கைஸ் அவர்களிடம் சென்று ‘நிச்சயம் நீர் நரகவாசிகளில் ஒருவரல்லர். சொர்க்கவாசிகளில் ஒருவரே’ என்று சொல்!” என்று கூறினார்கள்.3 அத்தியாயம் :
حدثنا علي بن عبد الله، حدثنا ازهر بن سعد، اخبرنا ابن عون، قال انباني موسى بن انس، عن انس بن مالك رضى الله عنه ان النبي صلى الله عليه وسلم افتقد ثابت بن قيس فقال رجل يا رسول الله انا اعلم لك علمه. فاتاه فوجده جالسا في بيته منكسا راسه فقال له ما شانك. فقال شر. كان يرفع صوته فوق صوت النبي صلى الله عليه وسلم فقد حبط عمله، وهو من اهل النار. فاتى الرجل النبي صلى الله عليه وسلم فاخبره انه قال كذا وكذا فقال موسى فرجع اليه المرة الاخرة ببشارة عظيمة فقال " اذهب اليه فقل له انك لست من اهل النار، ولكنك من اهل الجنة
அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடம் பனூ தமீம் குலத்தைச் சேர்ந்த ஒரு பயணக் குழுவினர் வந்தனர். (தமக்கு ஒரு தலைவரை நியமிக்கும்படி கோரினர்.) அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள், ‘‘(அல்லாஹ்வின் தூதரே!) ‘கஅகாஉ பின் மஅபத்’ அவர்களை (பனூ தமீம்) குலத்தாருக்குத் தலைவராக நியமனம் செய்யுங்கள்” என்று (யோசனை) கூறினார்கள். உமர் (ரலி) அவர்கள், ‘‘அக்ரஉ பின் ஹாபிஸ் அவர்களைத் தலைவராக நியமனம் செய்யுங்கள்!” என்று (யோசனை) கூறினார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களை நோக்கி, ‘எனக்கு மாறு செய்வதை’ அல்லது ‘எனக்கு எதிராக மாறு செய்வதையே’ நீங்கள் விரும்பினீர்கள் என்று கூறினார்கள். அதற்கு உமர் (ரலி) அவர்கள், ‘‘உங்களுக்கு எதிராகப் பேசுவது எனது நோக்கமன்று” என்று கூறினார்கள். (இது விஷயமாக) அவ்விருவரும் பேசித் தர்க்கித்துக்கொண்டபோது அவர்கள் இருவரின் குரல்களும் உயர்ந்துவிட்டன. இது தொடர்பாகவே, ‘‘இறைநம்பிக்கையாளர்களே! அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதருக்கு முன்பாக (பேசுவதற்கு) நீங்கள் முந்தாதீர்கள். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக, அல்லாஹ் அனைத்தையும் செவியுறுவோனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றான்” எனும் (49:1ஆவது) இறைவசனம் முழுவதும் அருளப்பெற்றது.4 அத்தியாயம் :
حدثنا الحسن بن محمد، حدثنا حجاج، عن ابن جريج، قال اخبرني ابن ابي مليكة، ان عبد الله بن الزبير، اخبرهم انه، قدم ركب من بني تميم على النبي صلى الله عليه وسلم فقال ابو بكر امر القعقاع بن معبد. وقال عمر بل امر الاقرع بن حابس. فقال ابو بكر ما اردت الى او الا خلافي. فقال عمر ما اردت خلافك. فتماريا حتى ارتفعت اصواتهما، فنزل في ذلك {يا ايها الذين امنوا لا تقدموا بين يدى الله ورسوله} حتى انقضت الاية
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (நரகவாசிகள்) நரகத்தில் போடப்படுவார் கள். நரகம், (வயிறு நிரம்பாத காரணத்தால்) ‘‘இன்னும் அதிகம் இருக்கிறதா?” என்று கேட்கும். இறுதியில் அல்லாஹ் தனது பாதத்தை (அதில்) வைப்பான். அப்போது அது, ‘‘போதும்! போதும்!” என்று கூறும்.2 இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக் கிறார்கள். அத்தியாயம் :
حدثنا عبد الله بن ابي الاسود، حدثنا حرمي، حدثنا شعبة، عن قتادة، عن انس رضى الله عنه عن النبي صلى الله عليه وسلم قال " يلقى في النار وتقول هل من مزيد. حتى يضع قدمه فتقول قط قط
முஹம்மத் பின் சீரின் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நரகத்திடம் ‘‘உனக்கு வயிறு நிரம்பி விட்டதா?” என்று கேட்கப்படும். அது, ‘‘இன்னும் அதிகம் இருக்கிறதா?” என்று கேட்கும். அப்போது அருள்வளமிக்க வனும் உயர்ந்தோனுமான அல்லாஹ் தனது பாதத்தை அதன்மீது வைப்பான். உடனே அது ‘‘போதும்! போதும்!” என்று கூறும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவிக்கிறார்கள். (ஆனால், இதன்) அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூசுஃப்யான் அல்ஹிம்யரீ (ரஹ்) அவர்கள் பெரும்பாலும் ‘‘அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்” என்றே (மவ்கூஃபாக) அறிவிப்பார்கள். அத்தியாயம் :
حدثنا محمد بن موسى القطان، حدثنا ابو سفيان الحميري، سعيد بن يحيى بن مهدي حدثنا عوف، عن محمد، عن ابي هريرة، رفعه واكثر ما كان يوقفه ابو سفيان " يقال لجهنم هل امتلات وتقول هل من مزيد فيضع الرب تبارك وتعالى قدمه عليها فتقول قط قط
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கமும் நரகமும் வாக்குவாதம் செய்துகொண்டன. அப்போது நரகம், ‘‘பெருமையடிப்பவர்களுக்காகவும்அக்கிரமக்காரர்களுக்காகவும் நான் சொந்த மாக்கப்பட்டுள்ளேன்” என்று சொன்னது. சொர்க்கம், ‘‘எனக்கு என்ன நேர்ந்ததோ! மக்களில் பலவீனர்களும் அவர்களில் கீழ்நிலையினருமே (அதிகமாக) என்னுள் நுழைவார்கள்” என்று கூறியது. அல்லாஹ் சொர்க்கத்திடம், ‘‘நீ எனது அருள். உன் மூலமே என் அடியார்களில் நான் நாடிய சிலருக்கு அருள் புரிகின்றேன்” என்று கூறினான். நரகத்திடம் ‘‘நீ வேதனை(க்காகத்)தான். உன் மூலமே என் அடியார்களில் நான் நாடிய சிலருக்கு வேதனை கொடுக்கிறேன்” என்று கூறினான். அந்த இரண்டில் ஒவ்வொன்றுக்கும் வயிறு நிரம்பத் தரப்படும். ஆனால், நரகமோ இறைவன் தனது காலை அதன் மீது வைக்கும்வரை வயிறு நிரம்பாது. இறைவன் காலை வைக்கும்போது நரகம் ‘‘போதும்! போதும்!” என்று கூறும். அப்போதுதான் அதற்கு வயிறு நிரம்பும். மேலும், (நரகத்திற்கெனப் புதிதாக யாரையும் அல்லாஹ் படைப்பதில்லை; மாறாக,) அதில் ஒரு பகுதி மற்றொரு பகுதியுடன் இணைக்கப்படும். அல்லாஹ் தன்னுடைய படைப்புகளில் யாருக்கும் அநியாயம் செய்யமாட்டான். ஆனால், வல்லமையும் மாண்புமிக்க அல்லாஹ், சொர்க்கத்திற்கென்றே (புதிதாகச்) சிலரைப் படை(த்து அதை நிறை)ப்பான். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا عبد الله بن محمد، حدثنا عبد الرزاق، اخبرنا معمر، عن همام، عن ابي هريرة، رضى الله عنه قال قال النبي صلى الله عليه وسلم " تحاجت الجنة والنار فقالت النار اوثرت بالمتكبرين والمتجبرين. وقالت الجنة ما لي لا يدخلني الا ضعفاء الناس وسقطهم. قال الله تبارك وتعالى للجنة انت رحمتي ارحم بك من اشاء من عبادي. وقال للنار انما انت عذاب اعذب بك من اشاء من عبادي. ولكل واحدة منهما ملوها، فاما النار فلا تمتلي حتى يضع رجله فتقول قط قط قط. فهنالك تمتلي ويزوى بعضها الى بعض، ولا يظلم الله عز وجل من خلقه احدا، واما الجنة فان الله عز وجل ينشي لها خلقا
ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஓர் இரவில் நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் அமர்ந்துகொண்டிருந்தோம். அப்போது அவர்கள் பதினான்காம் இரவின் முழுநிலவைக் கூர்ந்து நோக்கியபடி, ‘‘இந்த நிலவை நீங்கள் நெருக்கடியின்றிக் காண்பதுபோல் உங்கள் இறைவனையும் காண்பீர்கள். எனவே, சூரியன் உதிக்கும் முன்னரும் சூரியன் மறையும் முன்னரும் தொழும் விஷயத்தில் (தூக்கம் போன்றவற்றால்) நீங்கள் மிகைக்கப்படாதிருக்க இயலு மானால் அதைச் செய்யுங்கள்” என்று கூறினார்கள். பிறகு, ‘‘சூரியன் உதயமாகும் முன்னரும், மறையும் முன்னரும் உம்முடைய இறைவனைப் புகழ்ந்து துதிப்பீராக!” எனும் (50:39ஆவது) வசனத்தை ஓதினார்கள்.3 அத்தியாயம் :
حدثنا اسحاق بن ابراهيم، عن جرير، عن اسماعيل، عن قيس بن ابي حازم، عن جرير بن عبد الله، قال كنا جلوسا ليلة مع النبي صلى الله عليه وسلم فنظر الى القمر ليلة اربع عشرة فقال " انكم سترون ربكم كما ترون هذا، لا تضامون في رويته، فان استطعتم ان لا تغلبوا على صلاة قبل طلوع الشمس وقبل غروبها فافعلوا ". ثم قرا {وسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل الغروب}
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: எல்லாத் தொழுகைகளுக்குப் பின்பும் (தன்னைத்) துதிக்கும்படி நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் கட்டளையிட்டான். இதுவே, ‘‘சுஜூத் செய்து வணங்கி முடித்த பின்பும்...” எனும் (50:40ஆவது) இறைவசனத்தின் கருத்தாகும். அத்தியாயம் :
حدثنا ادم، حدثنا ورقاء، عن ابن ابي نجيح، عن مجاهد، قال ابن عباس امره ان يسبح، في ادبار الصلوات كلها. يعني قوله {وادبار السجود}
உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘‘நான் நோயுற்றுள்ளேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (ஹஜ்ஜின்போது) நான் முறையிட்டேன். அதற்கு அவர்கள், ‘‘நீ மக்களுக்கு அப்பாலிருந்து வாகனத்தில் அமர்ந்து (கஅபாவைச்) சுற்றி வருவாயாக!” என்று சொன்னார்கள். அவ்வாறே நான் சுற்றிவந்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘அத்தூர்’ எனும் (52ஆவது) அத்தியாயத்தை ஓதியவாறு கஅபாவின் ஒரு பகுதியில் தொழுதுகொண்டிருந்தார்கள்.2 அத்தியாயம் :
حدثنا عبد الله بن يوسف، اخبرنا مالك، عن محمد بن عبد الرحمن بن نوفل، عن عروة، عن زينب ابنة ابي سلمة، عن ام سلمة، قالت شكوت الى رسول الله صلى الله عليه وسلم اني اشتكي فقال " طوفي من وراء الناس، وانت راكبة ". فطفت ورسول الله صلى الله عليه وسلم يصلي الى جنب البيت يقرا بالطور وكتاب مسطور