Loading...

Loading...
நூல்கள்
௫௦௪ ஹதீஸ்கள்
ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் மஃக்ரிப் தொழுகையில் ‘அத்தூர்’ எனும் (52ஆவது) அத்தியாயத்தை ஓதக் கேட்டேன். ‘‘(படைப்பாளன்) யாருமின்றி தாமாகவே இவர்கள் பிறந்துவிட்டார்களா? அல்லது இவர்கள் தங்களுக்குத் தாங்களே படைப்பாளர்களாய் இருக்கின்றார்களா? அல்லது வானங்களையும் பூமியையும் இவர்கள் படைத்துள்ளார்களா? இல்லை; (உண்மை என்னவெனில்,) இவர்கள் உறுதியான நம்பிக்கை கொள்வதில்லை. உங்கள் இறைவனின் கருவூலங்கள் இவர்களிடம் உள்ளனவா? அல்லது (அவற்றின் மீது) இவர்கள்தான் ஆதிக்கம் செலுத்துபவர்களா?” எனும் இந்த (52:35-37ஆகிய) வசனங்களை நபி (ஸல்) அவர்கள் ஓதியபோது, என் இதயம் பறந்துவிடுமளவுக்குப் போய்விட்டது. இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ‘‘மஃக்ரிப் தொழுகையில் நபி (ஸல்) அவர்கள் ‘அத்தூர்’ அத்தியாயத்தை ஓதி னார்கள்” என்று முஹம்மத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் தம் தந்தை (ஜுபைர் பின் முத்இம்) இடமிருந்து அறிவித்தார்கள்” என்பதை மட்டுமே ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் எனக்கு அறிவித்தார்கள். என் நண்பர்கள் எனக்கு அறிவித்த (மீதமுள்ள) கூடுதல் தகவலை நான் ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களிடமிருந்து செவியுறவில்லை. அத்தியாயம் :
حدثنا الحميدي، حدثنا سفيان، قال حدثوني عن الزهري، عن محمد بن جبير بن مطعم، عن ابيه رضى الله عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقرا في المغرب بالطور فلما بلغ هذه الاية {ام خلقوا من غير شىء ام هم الخالقون * ام خلقوا السموات والارض بل لا يوقنون * ام عندهم خزاين ربك ام هم المسيطرون} كاد قلبي ان يطير. قال سفيان فاما انا فانما سمعت الزهري يحدث عن محمد بن جبير بن مطعم عن ابيه سمعت النبي صلى الله عليه وسلم يقرا في المغرب بالطور. لم اسمعه زاد الذي قالوا لي
மஸ்ரூக் பின் அல்அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், ‘‘அன்னையே! முஹம்மத் (ஸல்) அவர்கள் தம் இறைவனை (விண்ணுலகப் பயணத்தின்போது நேரில்) பார்த்தார்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘நீங்கள் சொன்னதைக் கேட்டு என் ரோமம் சிலிர்த்துவிட்டது. மூன்று விஷயங்கள் (பற்றிய உண்மைகள்) உங்களுக்கு எப்படித் தெரியாமல் போயின? அவற்றை உங்களிடம் யார் தெரிவிக்கிறாரோ அவர் பொய்யுரைத்துவிட்டார். முஹம்மத் (ஸல்) அவர்கள் தம் இறைவனை (நேரில்) பார்த்தார்கள் என்று உங்களிடம் யார் கூறுகிறாரோ அவர் பொய் சொல்லிவிட்டார்” என்று கூறிவிட்டு, பிறகு (தமது கருத்திற்குச் சான்றாக,) ‘‘கண் பார்வைகள் அவனை எட்ட முடியாது; அவனோ அனைத்தையும் பார்க்கின்றான். அவன் நுட்பமானவனும் நன்கறிந்தவனும் ஆவான்” எனும் (6:103ஆவது) வசனத்தையும், ‘‘எந்த மனிதருடனும் அல்லாஹ் நேருக்கு நேர் பேசுவதில்லை. ஆயினும் வஹீயின் (வேதஅறிவிப்பின்) மூலமோ, திரைக்கு அப்பாலிருந்தோ, ஒரு தூதரை அனுப்பி வைத்துத் தன் அனுமதியின் பேரில் தான் நாடுகின்றவற்றை அறிவிக்கச் செய்தோ அல்லாமல் நேரடியாகப் பேசுவதில்லை” எனும் (42:51ஆவது) வசனத்தையும் ஓதினார்கள். மேலும், ‘‘எவர் உங்களிடம் முஹம்மத் (ஸல்) அவர்கள் நாளை நடப்பவற்றையும் அறிவார்கள்” என்று சொல்கிறாரோ, அவரும் பொய்யே சொன்னார்” என்று கூறிவிட்டு, பிறகு (தமது கருத்திற்குச் சான்றாக,) ‘‘எந்த மனிதனும் நாளை என்ன சம்பாதிக்கப்போகிறான் என்பதை அறிவதில்லை” எனும் (31:34ஆவது) வசனத்தை ஓதினார்கள். மேலும், ‘‘எவர் உங்களிடம் முஹம்மத் (ஸல்) அவர்கள் (மக்களுக்கு எடுத்துரைத்து விடுமாறு பணிக்கப்பட்ட ஒன்றை) மறைத்துவிட்டார்கள்” என்று சொன்னாரோ, அவரும் பொய்யே சொன்னார் என்று கூறிவிட்டு, பிறகு (தமது கருத்திற்குச் சான்றாக,) ‘‘தூதரே! உம்முடைய இறைவனிடமிருந்து உம்மீது இறக்கி வைக்கப்பட்டவற்றை (மக்களுக்கு) எடுத்துரைத்துவிடுவீராக!...” எனும் (5:67ஆவது) வசனத்தை ஓதினார்கள். ‘‘மாறாக, முஹம்மத் (ஸல்) அவர்கள் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்களையே அவரது (நிஜத்) தோற்றத்தில் இரண்டு முறை கண்டார்கள்” என்று சொன்னார்கள்.4 அத்தியாயம் :
حدثنا يحيى، حدثنا وكيع، عن اسماعيل بن ابي خالد، عن عامر، عن مسروق، قال قلت لعايشة رضى الله عنها يا امتاه هل راى محمد صلى الله عليه وسلم ربه فقالت لقد قف شعري مما قلت، اين انت من ثلاث من حدثكهن فقد كذب، من حدثك ان محمدا صلى الله عليه وسلم راى ربه فقد كذب. ثم قرات {لا تدركه الابصار وهو يدرك الابصار وهو اللطيف الخبير} {وما كان لبشر ان يكلمه الله الا وحيا او من وراء حجاب} ومن حدثك انه يعلم ما في غد فقد كذب ثم قرات {وما تدري نفس ماذا تكسب غدا} ومن حدثك انه كتم فقد كذب ثم قرات {يا ايها الرسول بلغ ما انزل اليك من ربك} الاية، ولكنه راى جبريل عليه السلام في صورته مرتين
ஸிர்ரு பின் ஹுபைஷ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ‘‘(வளைந்த) வில்லின் இரு முனை களுக்கிடையிலான நெருக்கத்தைப்போல், அல்லது அதைவிடச் சமீபமாக (வானவர் ஜிப்ரீலுக்கும் நபிக்கும் இடையிலான நெருக்கம்) இருந்தது. பிறகு, அல்லாஹ் அவருக்கு (ஜிப்ரீலுக்கு) அறிவித்ததையெல்லாம் அவர் அவனுடைய அடியாருக்கு அறிவித்தார்” எனும் (53:9, 10) வசனங்களைக் குறித்து இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் எங்களுக்குப் பின்வருமாறு தெரிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்கள், (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்களுக்கு அறுநூறு இறக்கைகள் இருக்க (அவரது நிஜத் தோற்றத்தில்) அவரைப் பார்த்தார்கள்.5 அத்தியாயம் :
حدثنا ابو النعمان، حدثنا عبد الواحد، حدثنا الشيباني، قال سمعت زرا، عن عبد الله، {فكان قاب قوسين او ادنى * فاوحى الى عبده ما اوحى} قال حدثنا ابن مسعود انه راى جبريل له ستماية جناح
அபூஇஸ்ஹாக் அஷ்ஷைபானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் ஸிர்ரு பின் ஹுபைஷ் (ரஹ்) அவர்களிடம், ‘‘(வளைந்த) வில்லின் இரு முனைகளுக்கிடையிலான நெருக்கத் தைப்போல், அல்லது அதைவிடச் சமீபமாக (வானவர் ஜிப்ரீலுக்கும் நபிக்கும் இடையிலான நெருக்கம்) இருந்தது. பிறகு, அல்லாஹ் அவருக்கு (ஜிப்ரீலுக்கு) அறிவித்ததையெல்லாம் அவர் அவனுடைய அடியாருக்கு அறிவித்தார்” எனும் (53:9,10) வசனங்கள் குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘ஜிப்ரீல் (அலை) அவர்களை அறுநூறு இறக்கைகள் இருக்க (அவரது நிஜத்தோற்றத்தில்) முஹம்மத் (ஸல்) அவர்கள் கண்டார்கள்” என்பதே இவ்வசனத்தின் கருத்தாகும் என அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் எங்களிடம் தெரிவித்தார்கள் என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :
حدثنا طلق بن غنام، حدثنا زايدة، عن الشيباني، قال سالت زرا عن قوله تعالى {فكان قاب قوسين او ادنى * فاوحى الى عبده ما اوحى} قال اخبرنا عبد الله ان محمدا صلى الله عليه وسلم راى جبريل له ستماية جناح
அல்கமா பின் கைஸ் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ‘‘ ‘உறுதியாக அவர் தம் இறைவனின் சான்றுகளில் மிகப் பெரியதைக் கண்டார்’ எனும் (53:18ஆவது) வசனத்தின் கருத்தாவது: அடிவானத்தை அடைத்துக்கொண்டுவிட்டிருந்த பச்சை விரிப்பு ஒன்றை நபி (ஸல்) அவர்கள் கண்டார்கள்” என அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள்.6 அத்தியாயம் :
حدثنا قبيصة، حدثنا سفيان، عن الاعمش، عن ابراهيم، عن علقمة، عن عبد الله رضى الله عنه – {لقد راى من ايات ربه الكبرى} قال راى رفرفا اخضر قد سد الافق
அபுல் ஜவ்ஸா அவ்ஸ் பின் அப்தில்லாஹ் அர்ரப்ஈ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ‘‘லாத், உஸ்ஸா...” எனும் (53:19ஆவது) வசனத்திலுள்ள ‘லாத்’ என்பது, ஹாஜி களுக்காக மாவு பிசைந்து தந்துகொண்டிருந்த ஒரு மனிதராவார் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.7 அத்தியாயம் :
حدثنا مسلم، حدثنا ابو الاشهب، حدثنا ابو الجوزاء، عن ابن عباس، رضى الله عنهما في قوله {اللات والعزى} كان اللات رجلا يلت سويق الحاج
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் சத்தியம் செய்யும்போது ‘லாத்தின் மீது சத்தியமாக! உஸ்ஸாவின்மீது சத்தியமாக!’ என்று கூறிவிட்டாரோ, அவர் (அதற்குப் பரிகாரமாக) ‘லா இலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை) என்று சொல்லட்டும்! எவர் தம் நண்பரிடம், ‘‘வா சூது விளையாடுவோம்” என்று கூறுவாரோ அவர் (எதையேனும்) தர்மம் செய்யட்டும்.8 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا عبد الله بن محمد، اخبرنا هشام بن يوسف، اخبرنا معمر، عن الزهري، عن حميد بن عبد الرحمن، عن ابي هريرة رضى الله عنه قال رسول الله صلى الله عليه وسلم " من حلف فقال في حلفه واللات والعزى. فليقل لا اله الا الله. ومن قال لصاحبه تعال اقامرك. فليتصدق
உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் (‘‘ஹஜ்ஜில் ஸஃபா - மர்வாவுக்கிடையே சுற்றிவராவிட்டாலும் குற்றமில்லைதானே? அப்படித்தானே 2:158ஆவது இறைவசனம் தெரிவிக்கிறது. தங்கள் கருத்து என்ன?” என்று) கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘முஷல்லல் எனும் குன்றில் இருந்த ‘மனாத்’ எனும் சிலைக்காக ‘இஹ்ராம்’ கட்டியவர்கள் (ஹஜ்ஜில்) ஸஃபாவுக்கும் மர்வாவுக்குமிடையில் சுற்றிவராமலிருந்தார்கள். அப்போதுதான் ‘‘நிச்சயமாக ‘ஸஃபா’, ‘மர்வா’ (எனும் இரு குன்றுகள்) அல்லாஹ் வின் அடையாளச் சின்னங்களில் உள்ளவையாகும்...” எனும் (2:158 ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளினான். எனவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் முஸ்லிம்களும் சுற்றிவந்தனர்” என்று சொன்னார்கள். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள், ‘‘மனாத் என்பது, (மக்காவிலிருந்து மதீனா செல்லும் சாலையில்) ‘குதைத்’ எனும் இடத்தில் ‘முஷல்லல்’ எனும் குன்றிலிருந்த சிலையாகும்” என்று கூறினார்கள். ஆயிஷா (ரலி) அவர்களின் இன்னோர் அறிவிப்பில், ‘‘இந்த (2:158ஆவது) இறைவசனம் அன்சாரிகள் குறித்து அருளப்பட்டது; அன்சாரிகளும் ‘ஃகஸ்ஸான்’ குலத்தாரும் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும்முன் ‘மனாத்’ சிலைக்காக, இஹ்ராம் கட்டிவந்தனர்” என்று தொடங்கி, முந்தைய ஹதீஸில் உள்ளதைப் போன்றே காணப்படுகிறது. ஆயிஷா (ரலி) அவர்களின் மற்றோர் அறிவிப்பில், ‘‘மக்காவிற்கும் மதீனாவிற்கும் இடையிலிருந்த ‘மனாத்’ எனும் சிலைக்காக ‘இஹ்ராம்’ கட்டிவந்தவர்களில் சில அன்சாரிகளும் இருந்தனர். அவர்கள் ‘அல்லாஹ்வின் தூதரே! மனாத்திற்கு மரியாதை செய்யும் முகமாக நாங்கள் ஸஃபாவுக்கும் மர்வாவுக்குமிடையே சுற்றி வராமலிருந்தோம்...’ என்று கூறினர்” எனத் தொடங்கி, முந்தைய ஹதீஸில் உள்ளதைப் போன்றே காணப்படுகிறது.9 இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا الحميدي، حدثنا سفيان، حدثنا الزهري، سمعت عروة، قلت لعايشة رضى الله عنها فقالت انما كان من اهل بمناة الطاغية التي بالمشلل لا يطوفون بين الصفا والمروة، فانزل الله تعالى {ان الصفا والمروة من شعاير الله} فطاف رسول الله صلى الله عليه وسلم والمسلمون. قال سفيان مناة بالمشلل من قديد. وقال عبد الرحمن بن خالد عن ابن شهاب قال عروة قالت عايشة نزلت في الانصار كانوا هم وغسان قبل ان يسلموا يهلون لمناة. مثله. وقال معمر عن الزهري عن عروة عن عايشة كان رجال من الانصار ممن كان يهل لمناة ومناة صنم بين مكة والمدينة قالوا يا نبي الله كنا لا نطوف بين الصفا والمروة تعظيما لمناة. نحوه
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (53ஆவது அத்தியாயமான) ‘அந்நஜ்ம்’ அத்தியாயத்தை ஓதி (ஓதலுக்கான) சிரவணக்கம் (சஜ்தா) செய்தார்கள். அவர்களுடன் இருந்த முஸ்லிம்களும், இணைவைப்பாளர்களும், ஏனைய மக்களும், ஜின்களும் சஜ்தா செய்தனர். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.10 இப்னு உலய்யா (ரஹ்) அவர்கள் தமது அறிவிப்பில் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களை (அவர்கள் அறிவித்ததாக)க் குறிப்பிடவில்லை.11 அத்தியாயம் :
حدثنا ابو معمر، حدثنا عبد الوارث، حدثنا ايوب، عن عكرمة، عن ابن عباس رضى الله عنهما قال سجد النبي صلى الله عليه وسلم بالنجم وسجد معه المسلمون والمشركون والجن والانس. تابعه ابن طهمان عن ايوب. ولم يذكر ابن علية ابن عباس
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஓதலுக்குரிய) ‘சஜ்தா’ அருளப்பெற்ற முதல் அத்தியாயம் ‘அந்நஜ்ம்’ ஆகும். அதை ஓதியபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் சிரவணக்கம் (சஜ்தா) செய்தார்கள். அவர்களுக்குப் பின்னால் இருந்த அனைவரும் (அவர்களுடன் சேர்ந்து) ‘சஜ்தா’ செய்தார்கள். ஒரேயொரு மனிதனைத் தவிர! அம்மனிதன் ஒரு பிடி மண்ணை எடுத்து (தன் நெற்றிக்குக் கொண்டுசென்று) அதன் மீது சஜ்தாச் செய்ததை நான் கண்டேன். பின்னர் அவன் (பத்ர் போரின்போது) இறைமறுப்பாளனாகக் கொல்லப்பட்டதை நான் கண்டேன். அவன்தான் உமய்யா பின் கலஃப் ஆவான்.12 அத்தியாயம் :
حدثنا نصر بن علي، اخبرني ابو احمد، حدثنا اسراييل، عن ابي اسحاق، عن الاسود بن يزيد، عن عبد الله رضى الله عنه قال اول سورة انزلت فيها سجدة {والنجم}. قال فسجد رسول الله صلى الله عليه وسلم وسجد من خلفه، الا رجلا رايته اخذ كفا من تراب فسجد عليه، فرايته بعد ذلك قتل كافرا، وهو امية بن خلف
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் சந்திரன் இரண்டு துண்டுகளாகப் பிளந்தது. (பிளவுண்ட சந்திரனின்) ஒரு துண்டு மலைக்கு மேலேயும் மற்றொரு துண்டு மலைக்குக் கீழேயும் சென்றது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நீங்கள் சாட்சியாக இருங்கள். என்று சொன்னார்கள்.2 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا مسدد، حدثنا يحيى، عن شعبة، وسفيان، عن الاعمش، عن ابراهيم، عن ابي معمر، عن ابن مسعود، قال انشق القمر على عهد رسول الله صلى الله عليه وسلم فرقتين، فرقة فوق الجبل وفرقة دونه فقال رسول الله صلى الله عليه وسلم " اشهدوا
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் நபி ஸல்) அவர்களுடன் (மினாவில்) இருந்துகொண்டிருந்தபோது சந்திரன் பிளவுபட்டு இரண்டு துண்டுகளாக மாறிற்று. அப்போது நபி (ஸல்) அவர்கள் எங்களிடம், ‘‘நீங்கள் சாட்சியாக இருங்கள். நீங்கள் சாட்சியாக இருங்கள்” என்று (இரு முறை) கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا علي، حدثنا سفيان، اخبرنا ابن ابي نجيح، عن مجاهد، عن ابي معمر، عن عبد الله، قال انشق القمر ونحن مع النبي صلى الله عليه وسلم فصار فرقتين، فقال لنا " اشهدوا، اشهدوا
அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களின் காலத்தில் சந்திரன் (இரண்டாகப்) பிளவுபட்டது.3 அத்தியாயம் :
حدثنا يحيى بن بكير، قال حدثني بكر، عن جعفر، عن عراك بن مالك، عن عبيد الله بن عبد الله بن عتبة بن مسعود، عن ابن عباس رضى الله عنهما قال انشق القمر في زمان النبي صلى الله عليه وسلم
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: மக்காவாசிகள் (நபி (ஸல்) அவர்களி டம்) ஓர் அற்புதச் சான்றைக் காட்டும்படி கேட்டார்கள். எனவே, சந்திரன் (இரண்டாகப்) பிளவுண்ட நிகழ்ச்சியை (தம் உண்மைக்குச் சான்றாக) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் காட்டினார்கள்.4 அத்தியாயம் :
حدثنا عبد الله بن محمد، حدثنا يونس بن محمد، حدثنا شيبان، عن قتادة، عن انس رضى الله عنه قال سال اهل مكة ان يريهم اية فاراهم انشقاق القمر
அனஸ் (பின் மாலிக் -ரலி) அவர்கள் கூறியதாவது: (நபி (ஸல்) அவர்களது காலத்தில்) சந்திரன் இரண்டு துண்டுகளாகப் பிளந்தது. அத்தியாயம் :
حدثنا مسدد، حدثنا يحيى، عن شعبة، عن قتادة، عن انس، قال انشق القمر فرقتين
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: (குர்ஆனின் 54ஆவது அத்தியாயத்தில் இடம்பெற்றுள்ள ‘ஃபஹல் மின்(ம்) முத்தகிர்’ எனும் தொடரைப் பிரபலமான முறைப்படி) ‘ஃபஹல் மின்(ம்) முத்தகிர் (நல்லுணர்வு பெறுவோர் எவரும் உண்டா?) என்றே நபி (ஸல்) அவர்கள் ஓதிவந்தார்கள். (‘முஸ்தகிர்’ என்றோ, ‘முஸ்ஸகிர் என்றோ ஓதவில்லை.)6 அத்தியாயம் :
حدثنا حفص بن عمر، حدثنا شعبة، عن ابي اسحاق، عن الاسود، عن عبد الله، قال كان النبي صلى الله عليه وسلم يقرا {فهل من مدكر}
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: (குர்ஆனின் 54ஆவது அத்தியாயத்தில் இடம்பெற்றுள்ள ‘ஃபஹல் மின்(ம்) முத்தகிர்’ எனும் தொடரைப் பிரபலமான முறைப்படி) ‘ஃஹல் மின்(ம்) முத்தகிர்’ (நல்லுணர்வு பெறுவோர் எவரும் உண்டா?) என்றே நபி (ஸல்) அவர்கள் ஓதிவந்தார்கள். (‘முஸ்தகிர்’ என்றோ, ‘முஸ்ஸகிர்’ என்றோ ஓதவில்லை.) அத்தியாயம் :
حدثنا مسدد، عن يحيى، عن شعبة، عن ابي اسحاق، عن الاسود، عن عبد الله رضى الله عنه عن النبي صلى الله عليه وسلم. انه كان يقرا {فهل من مدكر}
அபூஇஸ்ஹாக் அஸ்ஸபீஈ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் அஸ்வத் பின் யஸீத் (ரஹ்) அவர்களிடம் (54ஆவது அத்தியாயத்தின் மூலத்திலுள்ள இத்தொடரை) ‘ஃபஹல் மின் (ம்) முத்தகிர்’ என்று ஓத வேண்டுமா? அல்லது ‘முஃதக்கிர்’ என்று ஓத வேண்டுமா? என்று கேட்டார். அதற்கு அவர்கள், ‘ஃபஹல் மின் முத்தகிர்’ என்றே அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் ஓதக் கேட்டேன். மேலும், ‘‘நபி (ஸல்) அவர்கள், ‘ஃபஹல் மின்(ம்) முத்தகிர்’ என ‘தால்’ (எனும் எழுத்து)கொண்டே ஓதியதை நான் கேட்டேன் என அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள்” என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :
حدثنا ابو نعيم، حدثنا زهير، عن ابي اسحاق، انه سمع رجلا، سال الاسود فهل من مدكر او مذكر فقال سمعت عبد الله يقروها {فهل من مدكر} قال وسمعت النبي صلى الله عليه وسلم يقروها {فهل من مدكر} دالا
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: (54ஆவது அத்தியாயத்தின் மூலத்தி லுள்ள இத்தொடரை) நபி (ஸல்) அவர்கள் ‘ஃபஹல் மின்(ம்) முத்தகிர்’ என்றே ஓதினார்கள். அத்தியாயம் :
حدثنا عبدان، اخبرنا ابي، عن شعبة، عن ابي اسحاق، عن الاسود، عن عبد الله رضى الله عنه عن النبي صلى الله عليه وسلم قرا {فهل من مدكر} الاية
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (54ஆவது அத்தியாயத்தின் மூலத்திலுள்ள இத்தொடரை) ‘ஃபஹல் மின்(ம்) முத்தக்கிர்’ என்றே ஓதினார்கள். அத்தியாயம் :
حدثنا محمد، حدثنا غندر، حدثنا شعبة، عن ابي اسحاق، عن الاسود، عن عبد الله، عن النبي صلى الله عليه وسلم قرا {فهل من مدكر، ولقد اهلكنا اشياعكم فهل من مدكر}