ஹதீஸ்கள்
#4851
ஸஹீஹ் அல்-புகாரீ - Prophetic Commentary on the Qur'an
ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஓர் இரவில் நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் அமர்ந்துகொண்டிருந்தோம். அப்போது அவர்கள் பதினான்காம் இரவின் முழுநிலவைக் கூர்ந்து நோக்கியபடி, ‘‘இந்த நிலவை நீங்கள் நெருக்கடியின்றிக் காண்பதுபோல் உங்கள் இறைவனையும் காண்பீர்கள். எனவே, சூரியன் உதிக்கும் முன்னரும் சூரியன் மறையும் முன்னரும் தொழும் விஷயத்தில் (தூக்கம் போன்றவற்றால்) நீங்கள் மிகைக்கப்படாதிருக்க இயலு மானால் அதைச் செய்யுங்கள்” என்று கூறினார்கள். பிறகு, ‘‘சூரியன் உதயமாகும் முன்னரும், மறையும் முன்னரும் உம்முடைய இறைவனைப் புகழ்ந்து துதிப்பீராக!” எனும் (50:39ஆவது) வசனத்தை ஓதினார்கள்.3 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prophetic Commentary on the Qur'an
- Hadith Index
- #4851
- Book Index
- 372
Grades
- -