Loading...

Loading...
நூல்கள்
௨௭௩ ஹதீஸ்கள்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பின்பற்றப்படுவதற்காகவே இமாம் ஏற்படுத்தப்பட்டுள்ளார். எனவே, அவ ருக்கு நீங்கள் முரண்படாதீர்கள். அவர் குனிந்(து ருகூஉ செய்)தால், நீங்களும் குனி(ந்து ருகூஉ செய்)யுங்கள். அவர் ‘சமிஅல்லாஹு -மன் ஹமிதஹ்’ (இறைவன் தன்னைப் புகழ்வோரின் புகழுரையை ஏற்றுக்கொள்கிறான்) என்று கூறினால், நீங்கள் ‘ரப்பனா ல(க்)கல் ஹம்து’ (எங்கள் இறைவா! எல்லாப் புகழும் உனக்கே!) என்று சொல்லுங்கள். அவர் சிரவணக்கம் (சஜ்தா) செய்தால், நீங்களும் சிரவணக்கம் (சஜ்தா) செய்யுங்கள். அவர் உட்கார்ந்து தொழுதால், நீங்கள் அனைவரும் உட்கார்ந்து தொழுங்கள். தொழுகை வரிசையை ஒழுங்குபடுத்துங்கள். ஏனெனில், வரிசையை ஒழுங்குபடுத்துவது தொழுகையை அழகுறச் செய்வதில் அடங்கும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا عبد الله بن محمد، قال حدثنا عبد الرزاق، قال اخبرنا معمر، عن همام، عن ابي هريرة، عن النبي صلى الله عليه وسلم انه قال " انما جعل الامام ليوتم به فلا تختلفوا عليه، فاذا ركع فاركعوا، واذا قال سمع الله لمن حمده. فقولوا ربنا لك الحمد. واذا سجد فاسجدوا، واذا صلى جالسا فصلوا جلوسا اجمعون، واقيموا الصف في الصلاة، فان اقامة الصف من حسن الصلاة
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்கள் (தொழுகை) வரிசைகளை ஒழுங்குபடுத்துங்கள். வரிசைகளை ஒழுங்குபடுத்துவது தொழுகையை (முழு மையாக) நிறைவேற்றுவதில் அடங்கும். இதை அனஸ் (ரலி) அவர்கள் அறி விக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا ابو الوليد، قال حدثنا شعبة، عن قتادة، عن انس، عن النبي صلى الله عليه وسلم قال " سووا صفوفكم فان تسوية الصفوف من اقامة الصلاة
புஷைர் பின் யசார் அல்அன்சாரி (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் (பஸ்ராவி-ருந்து) மதீனாவுக்கு வந்தபோது அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நீங்கள் அறிந்து கொண்ட நடைமுறைக்கு மாறாக எதை நீங்கள் எங்களிடம் காண்கிறீர்கள்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அனஸ் (ரலி) அவர்கள், “நீங்கள் (தொழுகை) வரிசைகளை ஒழுங்கு படுத்துவதில்லை என்பதைத் தவிர வேறெதையும் நான் உங்களிடம் வித்தி யாசமாகக் காணவில்லை” என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் உக்பா பின் உபைத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், ‘அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் மதீனாவுக்கு எங்களிடம் வந்தபோது’ என ஹதீஸ் ஆரம்பமாகிறது. அத்தியாயம் :
حدثنا معاذ بن اسد، قال اخبرنا الفضل بن موسى، قال اخبرنا سعيد بن عبيد الطايي، عن بشير بن يسار الانصاري، عن انس بن مالك، انه قدم المدينة فقيل له ما انكرت منا منذ يوم عهدت رسول الله صلى الله عليه وسلم قال ما انكرت شييا الا انكم لا تقيمون الصفوف. وقال عقبة بن عبيد عن بشير بن يسار قدم علينا انس بن مالك المدينة بهذا
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், “உங்கள் (தொழுகை) வரிசைகளை ஒழுங்குபடுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில், நான் எனது முதுகுக்குப் பின்புறமும் உங்களைக் காண் கிறேன்” என்று கூறினார்கள். (ஆகவே,) எங்களில் ஒருவர் (தொழுகையில்) தமது தோளைத் தமக்கு அருகி-ருப்பவரின் தோளுடனும், தமது பாதத்தைத் தமக்கு அருகி-ருப்பவரின் பாதத்துடனும் சேர்த்துக்கொண்டு (அந்த அளவுக்கு நெருக்கமாக) நிற்பார். அத்தியாயம் :
حدثنا عمرو بن خالد، قال حدثنا زهير، عن حميد، عن انس، عن النبي صلى الله عليه وسلم قال " اقيموا صفوفكم فاني اراكم من وراء ظهري ". وكان احدنا يلزق منكبه بمنكب صاحبه وقدمه بقدمه
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் ஓர் இரவு (என் சிறிய தாயார் மைமூனா (ரலி) அவர்களின் வீட்டில்) நபி (ஸல்) அவர்களுடன் தொழுதேன். அப்போது நான் அவர்களுக்கு இடப் பக்கத்தில் நின்றேன். உடனே என் பின்தலையைப் பிடித்து என்னைத் தமக்கு வலப் பக்கத்தில் நிறுத்தி தொழுதார்கள்; பின்னர் உறங்கினார்கள். (ஃபஜ்ர் நேரமானபோது) அவர்களிடம் தொழுகை அறிவிப்பாளர் (தொழுகைக்கு அழைக்க) வந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் எழுந்து (புதிதாக) அங்கத் தூய்மை (உளூ) செய்யாமலேயே தொழுதார்கள். அத்தியாயம் :
حدثنا قتيبة بن سعيد، قال حدثنا داود، عن عمرو بن دينار، عن كريب، مولى ابن عباس عن ابن عباس رضى الله عنهما قال صليت مع النبي صلى الله عليه وسلم ذات ليلة فقمت عن يساره، فاخذ رسول الله صلى الله عليه وسلم براسي من ورايي، فجعلني عن يمينه، فصلى ورقد فجاءه الموذن، فقام وصلى ولم يتوضا
அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது: எங்களது வீட்டில் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (அவர்களைப் பின்பற்றி) நானும் ஓர் அநாதைச் சிறுவரும் தொழுதோம். என் தாயார் -உம்மு சுலைம் (ரலி)- (எங்கள் வரிசையில் சேராமல்) எங்களுக்குப் பின்னால் (நின்று தொழுது கொண்டு) இருந்தார்கள். அத்தியாயம் :
حدثنا عبد الله بن محمد، قال حدثنا سفيان، عن اسحاق، عن انس بن مالك، قال صليت انا ويتيم، في بيتنا خلف النبي صلى الله عليه وسلم وامي ام سليم خلفنا
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (என் சிறிய தாயார் மைமூனா (ரலி) அவர்களின் வீட்டில்) ஓர் இரவில் தொழுவதற்காக நபி (ஸல்) அவர்களுக்கு இடப் புறமாக நின்றேன். உடனே நபி (ஸல்) அவர்கள் ‘எனது கையை’ அல்லது ‘எனது புஜத்தை’ப் பிடித்து (அப்படியே என்னை நகர்த்தி) தமக்கு வலப் பக்கத்தில் என்னை நிறுத்தினார்கள். அப்போது என்னைத் தமது கரத்தால் பிடித்து தமக்குப் பின்பக்கமாகவே கொண்டுசென்றார்கள். அத்தியாயம் :
حدثنا موسى، حدثنا ثابت بن يزيد، حدثنا عاصم، عن الشعبي، عن ابن عباس رضى الله عنهما قال قمت ليلة اصلي عن يسار النبي صلى الله عليه وسلم فاخذ بيدي او بعضدي حتى اقامني عن يمينه، وقال بيده من ورايي
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவில் தமது அறையில் தொழுபவர் களாக இருந்தார்கள். அந்த அறையின் சுவர் உயரம் குறைவானதாக இருந்தது. ஆகவே, நபி (ஸல்) அவர்களின் உருவத்தை மக்களால் பார்க்க முடிந்தது. அப்போது மக்களில் சிலர் நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றி (சுவருக்கு அப்பால் நின்று) தொழலாயினர். (மறு நாள்) காலையில் இது பற்றி அவர்கள் பேசிக்கெண்டனர். இரண்டாம் நாளில் நபி (ஸல்) அவர்கள் (இரவுத் தொழுகைக்காக) எழுந்தபோது அப் போதும் சிலர் அவர்களுடன் எழுந்து அவர்களைப் பின்பற்றித் தொழலாயினர். இவ்வாறு இரண்டு அல்லது மூன்று இரவுகள் செய்தனர். அதன் பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அந்த இடத்திற்குத் தொழ) வராமல் (வீட்டிலேயே) அமர்ந்துவிட்டார்கள். காலையில் மக்கள் இது பற்றி (நபியவர்களிடம்) பேசியபோது, “இரவுத் தொழுகை உங்கள்மீது கடமையாக்கப்பட்டுவிடுமோ என நான் அஞ்சினேன் (அதனால்தான் நான் வரவில்லை)” என்று கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا محمد، قال اخبرنا عبدة، عن يحيى بن سعيد الانصاري، عن عمرة، عن عايشة، قالت كان رسول الله صلى الله عليه وسلم يصلي من الليل في حجرته، وجدار الحجرة قصير، فراى الناس شخص النبي صلى الله عليه وسلم فقام اناس يصلون بصلاته، فاصبحوا فتحدثوا بذلك، فقام ليلة الثانية، فقام معه اناس يصلون بصلاته، صنعوا ذلك ليلتين او ثلاثة، حتى اذا كان بعد ذلك جلس رسول الله صلى الله عليه وسلم فلم يخرج، فلما اصبح ذكر ذلك الناس فقال " اني خشيت ان تكتب عليكم صلاة الليل
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடம் பாய் ஒன்று இருந்தது; பக-ல் அதை விரித்துக் கொள்வார்கள். இரவில் அதையே (தடுப்பு) அறை போன்று அமைத்துக்கொள்வார்கள். (அதற்குள் நின்று அவர்கள் தொழும் போது) மக்களில் சிலர் அவர்களிடம் திரண்டு (வந்து) அவர்களுக்குப் பின்னால் (நின்று அவர்களைப் பின்பற்றித்) தொழுவார்கள். அத்தியாயம் :
حدثنا ابراهيم بن المنذر، قال حدثنا ابن ابي فديك، قال حدثنا ابن ابي ذيب، عن المقبري، عن ابي سلمة بن عبد الرحمن، عن عايشة رضى الله عنها ان النبي صلى الله عليه وسلم كان له حصير يبسطه بالنهار، ويحتجره بالليل، فثاب اليه ناس، فصلوا وراءه
ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தில் -பாயால்- ஒரு சிறிய அறையை அமைத்துக்கொண்டார்கள். சில இரவுகள் (அதைத் தடுப்பாக வைத்துக் கொண்டு) அதனுள் தொழுதார்கள். அப்போது அவர்களுடைய தோழர்களில் சிலர் அவர்களைப் பின்பற்றித் தொழு தனர். தோழர்கள் (தம்மைப் பின்பற்றித் தொடர்ந்து தொழுவது) பற்றி நபி (ஸல்) அவர்கள் அறிந்தபோது, (அந்த இடத் திற்கு வராமல் தமது இல்லத்திலேயே) அமர்ந்துகொள்ள ஆரம்பித்தார்கள். பின்பு (மக்களை நோக்கி) அவர்கள் புறப்பட்டு வந்து, “உங்களது நடவடிக்கையை நான் கண்டறிந்தேன். மக்களே! (கூடுதலான தொழுகைகளை) உங்கள் வீடுகளிலேயே தொழுதுகொள்ளுங்கள். ஒரு மனிதர் தமது வீட்டில் தொழும் தொழுகையே தொழுகைகளில் சிறந்ததாகும். ஆனால், கடமையாக்கப்பட்ட தொழுகையைத் தவிர!” என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا عبد الاعلى بن حماد، قال حدثنا وهيب، قال حدثنا موسى بن عقبة، عن سالم ابي النضر، عن بسر بن سعيد، عن زيد بن ثابت، ان رسول الله صلى الله عليه وسلم اتخذ حجرة قال حسبت انه قال من حصير في رمضان فصلى فيها ليالي، فصلى بصلاته ناس من اصحابه، فلما علم بهم جعل يقعد، فخرج اليهم فقال " قد عرفت الذي رايت من صنيعكم، فصلوا ايها الناس في بيوتكم، فان افضل الصلاة صلاة المرء في بيته الا المكتوبة ". قال عفان حدثنا وهيب، حدثنا موسى، سمعت ابا النضر، عن بسر، عن زيد، عن النبي صلى الله عليه وسلم
அனஸ் பின் மா-க் அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குதிரையில் பயணம் செய்தபோது (கீழே விழுந்து) அவர்களது வலப் பக்க விலாவில் சிராய்ப்பு ஏற்பட்டு விட்டது. அன்றைய தினம் அவர்கள் (கடமையான) தொழுகைகளில் ஒரு தொழுகையை உட்கார்ந்தபடியே தொழு வித்தார்கள். நாங்களும் அவர்களுக்குப் பின்னால் உட்கார்ந்தபடியே தொழுதோம். பிறகு அவர்கள் ‘சலாம்’ கொடுத்(து முடித்)தபோது (பின்வருமாறு) கூறினார்கள்: இமாம் பின்பற்றப்படுவதற்காகவே ஏற்படுத்தப்பட்டுள்ளார். ஆகவே, அவர் நின்று தொழுதால் நீங்களும் நின்று தொழுங்கள்; அவர் குனிந்தால் நீங்களும் குனி(ந்து ருகூஉ செய்)யுங்கள்; அவர் (தலையை) உயர்த்தினால் நீங்களும் (தலையை) உயர்த்துங்கள். அவர் சஜ்தா (சிரவணக்கம்) செய்தால் நீங்களும் சஜ்தா செய்யுங்கள்; அவர் (குனிந்து நிமிரும்போது) ‘சமிஅல்லாஹு -மன் ஹமிதஹ்’ (தன்னைப் புகழ்ந்தோரின் புகழுரையை இறைவன் ஏற்றுக்கொள்கிறான்) என்று கூறினால், நீங்கள் ‘ரப்பனா வல(க்)கல் ஹம்து’ (எங்கள் இறைவா! உனக்கே புகழ் அனைத்தும்) என்று சொல்லுங்கள். அத்தியாயம் :
حدثنا ابو اليمان، قال اخبرنا شعيب، عن الزهري، قال اخبرني انس بن مالك الانصاري، ان رسول الله صلى الله عليه وسلم ركب فرسا، فجحش شقه الايمن، قال انس رضى الله عنه فصلى لنا يوميذ صلاة من الصلوات وهو قاعد، فصلينا وراءه قعودا، ثم قال لما سلم " انما جعل الامام ليوتم به، فاذا صلى قايما فصلوا قياما، واذا ركع فاركعوا، واذا رفع فارفعوا، واذا سجد فاسجدوا واذا قال سمع الله لمن حمده. فقولوا ربنا ولك الحمد
அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குதிரையி-ருந்து விழுந்ததால் அவர்களுக்கு (வலப் புற விலாவில்) சிராய்ப்பு ஏற்பட்டுவிட்டது. (அன்றைய தினம்) அவர்கள் எங்களுக்கு உட்கார்ந்தபடியே தொழுகை நடத்தினார்கள். நாங்களும் உட்கார்ந்தபடியே (அவர்களுக்குப் பின் னால்) தொழுதோம். தொழுது முடித்ததும் அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: பின்பற்றப்படுவதற்காகவே ‘இமாம் ஏற்படுத்தப்பட்டுள்ளார்’ அல்லது ‘(பின்பற் றப்படுவதற்காகவே) இமாம் இருக்கிறார்’. அவர் தக்பீர் (‘அல்லாஹ்ý அக்பர்’ என்று) சொன்னால் நீங்களும் தக்பீர் (அல்லாஹ்ý அக்பர் என்று) சொல்லுங்கள்; அவர் குனிந்தால் நீங்களும் குனி(ந்து ருகூஉ செய்)யுங்கள்; அவர் (தலையை) உயர்த் தினால் நீங்களும் (தலையை) உயர்த் துங்கள்; அவர் (ருகூஉவி-ருந்து நிமிரும்போது) ‘சமிஅல்லாஹு -மன் ஹமிதஹ்’ என்று கூறினால், நீங்கள் ‘ரப்பனா ல(க்)கல் ஹம்து’ என்று கூறுங்கள்; அவர் சஜ்தா (சிரவணக்கம்) செய்தால் நீங்களும் சஜ்தா செய்யுங்கள். அத்தியாயம் :
حدثنا قتيبة بن سعيد، قال حدثنا ليث، عن ابن شهاب، عن انس بن مالك، انه قال خر رسول الله صلى الله عليه وسلم عن فرس فجحش فصلى لنا قاعدا فصلينا معه قعودا، ثم انصرف فقال " انما الامام او انما جعل الامام ليوتم به، فاذا كبر فكبروا، واذا ركع فاركعوا، واذا رفع فارفعوا، واذا قال سمع الله لمن حمده. فقولوا ربنا لك الحمد. واذا سجد فاسجدوا
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பின்பற்றப்படுவதற்காகவே இமாம் ஏற்படுத்தப்பட்டுள்ளார். ஆகவே, அவர் தக்பீர் சொன்னால் நீங்களும் தக்பீர் சொல்லுங்கள்; அவர் குனிந்தால் நீங்களும் குனி(ந்து ருகூஊ செய்)யுங்கள்; அவர் ‘சமிஅல்லாஹு -மன் ஹமிதஹ்’ என்று சொன்னால் நீங்கள் ‘ரப்பனா வல(க்)கல் ஹம்து’ என்று சொல்லுங்கள்; அவர் சஜ்தா (சிரவணக்கம்) செய்தால் நீங்களும் சஜ்தா செய்யுங்கள்; அவர் உட்கார்ந்து தொழும்போது நீங்கள் அனைவரும் உட்கார்ந்தே தொழுங்கள்.36 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا ابو اليمان، قال اخبرنا شعيب، قال حدثني ابو الزناد، عن الاعرج، عن ابي هريرة، قال قال النبي صلى الله عليه وسلم " انما جعل الامام ليوتم به، فاذا كبر فكبروا، واذا ركع فاركعوا، واذا قال سمع الله لمن حمده. فقولوا ربنا ولك الحمد. واذا سجد فاسجدوا، واذا صلى جالسا فصلوا جلوسا اجمعون
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையைத் துவக்கும்போது தம் தோள்களுக்கு நேராகத் கைகளை உயர்த்துவார்கள். ருகூஉவிற்காக ‘தக்பீர்’ கூறும்போதும் ருகூவி-ருந்து தலையை உயர்த்தும்போதும் அவ்வாறே (தோள்களுக்கு நேராக) இரு கைகளையும் மீண்டும் உயர்த்துவார்கள். மேலும் (ருகூவி-ருந்து எழும்போது) ‘சமிஅல்லாஹு -மன் ஹமிதஹ், ரப்பனா வல(க்)கல் ஹம்து’ என்று கூறுவார்கள். சஜ்தாவில் (குனியும்போதோ சஜ்தாவிலிருந்து எழும்போதோ) இவ்வாறு செய்ய மாட்டார்கள் (கைகளை உயர்த்த மாட்டார்கள்). அத்தியாயம் :
حدثنا عبد الله بن مسلمة، عن مالك، عن ابن شهاب، عن سالم بن عبد الله، عن ابيه، ان رسول الله صلى الله عليه وسلم كان يرفع يديه حذو منكبيه اذا افتتح الصلاة، واذا كبر للركوع، واذا رفع راسه من الركوع رفعهما كذلك ايضا وقال " سمع الله لمن حمده، ربنا ولك الحمد ". وكان لا يفعل ذلك في السجود
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுவதற்காக நின்றால் தம் தோள் களுக்கு நேராக இருக்கும்படி தம் கைகளை உயர்த்துவதை நான் பார்த்திருக் கிறேன். ருகூஉவிற்காக ‘தக்பீர்’ கூறும் போதும் இவ்வாறு அவர்கள் செய்வார்கள். ருகூஉவி-ருந்து தலையை உயர்த்தும் போதும் இவ்வாறு செய்வார்கள். ருகூவி-ருந்து (எழும்போது) ‘சமி அல்லாஹு -மன் ஹமிதஹ்’ என்று கூறுவார்கள். சஜ்தாவில் (குனியும்போதோ சஜ்தாவி-ருந்து எழும்போதோ) இவ்வாறு செய்யமாட்டார்கள். அத்தியாயம் :
حدثنا محمد بن مقاتل، قال اخبرنا عبد الله، قال اخبرنا يونس، عن الزهري، اخبرني سالم بن عبد الله، عن عبد الله بن عمر، رضى الله عنهما قال رايت رسول الله صلى الله عليه وسلم اذا قام في الصلاة رفع يديه حتى يكونا حذو منكبيه، وكان يفعل ذلك حين يكبر للركوع، ويفعل ذلك اذا رفع راسه من الركوع ويقول " سمع الله لمن حمده ". ولا يفعل ذلك في السجود
அபூகிலாபா அப்துல்லாஹ் பின் ஸைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: மா-க் பின் அல்ஹுவைரிஸ் (ரலி) அவர்கள் தொழும்போது, (முத-ல்) தக்பீர் கூறித் தம் கைகளை உயர்த்துவதை நான் பார்த்திருக்கிறேன். அவர்கள் ருகூஉவிற்குச் செல்ல நாடியபோதும் தம் கைகளை உயர்த்தினார்கள். ருகூவி-ருந்து தலையை உயர்த்தும்போதும் தம் கைகளை உயர்த்தினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறே செய்தார்கள் என்றும் தெரிவித்தார்கள். அத்தியாயம் :
حدثنا اسحاق الواسطي، قال حدثنا خالد بن عبد الله، عن خالد، عن ابي قلابة، انه راى مالك بن الحويرث اذا صلى كبر ورفع يديه، واذا اراد ان يركع رفع يديه، واذا رفع راسه من الركوع رفع يديه، وحدث ان رسول الله صلى الله عليه وسلم صنع هكذا
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ‘தக்பீர்’ கூறி தொழுகையைத் துவக்கியதை நான் கண்டேன். தக்பீர் கூறும்போதே தம் கைகளை உயர்த்தி தோள்களுக்கு நேராக ஆக்கினார்கள். ருகூஉவிற்காக அவர்கள் தக்பீர் கூறியபோதும் அதைப் போன்றே செய்தார்கள். ‘சமிஅல்லாஹு -மன் ஹமிதஹ்’ என்று கூறியபோதும் அதைப் போன்றே செய்தார்கள். ‘ரப்பனா வல(க்)கல் ஹம்து’ என்றும் கூறினார்கள். சஜ்தா (சிரவணக்கம்) செய்யும்போது அவ்வாறு செய்யமாட்டார்கள்; சஜ்தாவி-ருந்து தமது தலையை உயர்த்தும்போதும் (அவ்வாறு) செய்யமாட்டார்கள். அத்தியாயம் :
حدثنا ابو اليمان، قال اخبرنا شعيب، عن الزهري، قال اخبرنا سالم بن عبد الله، ان عبد الله بن عمر رضى الله عنهما قال رايت النبي صلى الله عليه وسلم افتتح التكبير في الصلاة، فرفع يديه حين يكبر حتى يجعلهما حذو منكبيه، واذا كبر للركوع فعل مثله، واذا قال سمع الله لمن حمده. فعل مثله وقال " ربنا ولك الحمد ". ولا يفعل ذلك حين يسجد ولا حين يرفع راسه من السجود
இப்னு உமர் (ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அவர்களின் முன்னாள் அடிமையான) நாபிஃஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு உமர் (ரலி) அவர்கள், தொழ ஆரம்பிக்கும்போது ‘தக்பீர்’ கூறித் தம் கைகளை (தோள்களுக்கு நேராக) உயர்த்து வார்கள். ருகூஉவுக்குச் செல்லும்போதும் கைகளை உயர்த்துவார்கள். ‘சமி அல்லாஹு -மன் ஹமிதஹ்’ எனக் கூறும்போதும் தம் கைகளை உயர்த்து வார்கள். இரண்டாவது ரக்அத்தி-ருந்து எழும்போதும் கைகளை உயர்த்துவார்கள். இவ்வாறே நபி (ஸல்) அவர்கள் செய்த தாகவும் அவர்கள் குறிப்பிட்டார்கள். இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் அய்யூப் பின் அபீதமீமா (ரஹ்), மூசா பின் உக்பா (ரஹ்) ஆகி யோரின் அறிவிப்பில் சுருக்கமாக இது இடம்பெற்றுள்ளது.. அத்தியாயம் :
حدثنا عياش، قال حدثنا عبد الاعلى، قال حدثنا عبيد الله، عن نافع، ان ابن عمر، كان اذا دخل في الصلاة كبر ورفع يديه، واذا ركع رفع يديه، واذا قال سمع الله لمن حمده. رفع يديه، واذا قام من الركعتين رفع يديه. ورفع ذلك ابن عمر الى نبي الله صلى الله عليه وسلم. رواه حماد بن سلمة عن ايوب عن نافع عن ابن عمر عن النبي صلى الله عليه وسلم. ورواه ابن طهمان عن ايوب وموسى بن عقبة مختصرا
சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது: தொழுகையில் (நிற்கும்போது) ஒருவர் தமது வலக் கையை (மணிக்கட்டுக்கும் முழங்கைக்கும் இடையிலுள்ள) இடது முன்கையின் மீது வைக்க வேண்டுமென மக்களுக்குக் கட்டளையிடப்பட்டிருந்தது. (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அபூஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இது நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டது (மர்ஃபூஉ) என்றே நான் அறிகிறேன். அத்தியாயம் :
حدثنا عبد الله بن مسلمة، عن مالك، عن ابي حازم، عن سهل بن سعد، قال كان الناس يومرون ان يضع الرجل اليد اليمنى على ذراعه اليسرى في الصلاة. قال ابو حازم لا اعلمه الا ينمي ذلك الى النبي صلى الله عليه وسلم. قال اسماعيل ينمى ذلك. ولم يقل ينمي
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் முன்னோக்கும் திசை இதுதான் (என்பதால் எனக்குப் பின்னால் தொழும் உங்களை நான் கவனிக்கவில்லை) என்று நினைத்துக்கொண்டிருக்கிறீர்களா? அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களது குனிதலும் (ருகூவும்) உங்களது பணிவும் எனக்குத் தெரியாமல்போவதில்லை. என் முதுகுக்கு அப்பாலும் நிச்சயமாக உங்களை நான் காண்கிறேன். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا اسماعيل، قال حدثني مالك، عن ابي الزناد، عن الاعرج، عن ابي هريرة، ان رسول الله صلى الله عليه وسلم قال " هل ترون قبلتي ها هنا والله ما يخفى على ركوعكم ولا خشوعكم، واني لاراكم وراء ظهري