ஹதீஸ்கள்
#722
ஸஹீஹ் அல்-புகாரீ - Call to Prayers (Adhaan)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பின்பற்றப்படுவதற்காகவே இமாம் ஏற்படுத்தப்பட்டுள்ளார். எனவே, அவ ருக்கு நீங்கள் முரண்படாதீர்கள். அவர் குனிந்(து ருகூஉ செய்)தால், நீங்களும் குனி(ந்து ருகூஉ செய்)யுங்கள். அவர் ‘சமிஅல்லாஹு -மன் ஹமிதஹ்’ (இறைவன் தன்னைப் புகழ்வோரின் புகழுரையை ஏற்றுக்கொள்கிறான்) என்று கூறினால், நீங்கள் ‘ரப்பனா ல(க்)கல் ஹம்து’ (எங்கள் இறைவா! எல்லாப் புகழும் உனக்கே!) என்று சொல்லுங்கள். அவர் சிரவணக்கம் (சஜ்தா) செய்தால், நீங்களும் சிரவணக்கம் (சஜ்தா) செய்யுங்கள். அவர் உட்கார்ந்து தொழுதால், நீங்கள் அனைவரும் உட்கார்ந்து தொழுங்கள். தொழுகை வரிசையை ஒழுங்குபடுத்துங்கள். ஏனெனில், வரிசையை ஒழுங்குபடுத்துவது தொழுகையை அழகுறச் செய்வதில் அடங்கும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا عبد الله بن محمد، قال حدثنا عبد الرزاق، قال اخبرنا معمر، عن همام، عن ابي هريرة، عن النبي صلى الله عليه وسلم انه قال " انما جعل الامام ليوتم به فلا تختلفوا عليه، فاذا ركع فاركعوا، واذا قال سمع الله لمن حمده. فقولوا ربنا لك الحمد. واذا سجد فاسجدوا، واذا صلى جالسا فصلوا جلوسا اجمعون، واقيموا الصف في الصلاة، فان اقامة الصف من حسن الصلاة
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Call to Prayers (Adhaan)
- Hadith Index
- #722
- Book Index
- 116
Grades
- -
