ஹதீஸ்கள்
#732
ஸஹீஹ் அல்-புகாரீ - Call to Prayers (Adhaan)
அனஸ் பின் மா-க் அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குதிரையில் பயணம் செய்தபோது (கீழே விழுந்து) அவர்களது வலப் பக்க விலாவில் சிராய்ப்பு ஏற்பட்டு விட்டது. அன்றைய தினம் அவர்கள் (கடமையான) தொழுகைகளில் ஒரு தொழுகையை உட்கார்ந்தபடியே தொழு வித்தார்கள். நாங்களும் அவர்களுக்குப் பின்னால் உட்கார்ந்தபடியே தொழுதோம். பிறகு அவர்கள் ‘சலாம்’ கொடுத்(து முடித்)தபோது (பின்வருமாறு) கூறினார்கள்: இமாம் பின்பற்றப்படுவதற்காகவே ஏற்படுத்தப்பட்டுள்ளார். ஆகவே, அவர் நின்று தொழுதால் நீங்களும் நின்று தொழுங்கள்; அவர் குனிந்தால் நீங்களும் குனி(ந்து ருகூஉ செய்)யுங்கள்; அவர் (தலையை) உயர்த்தினால் நீங்களும் (தலையை) உயர்த்துங்கள். அவர் சஜ்தா (சிரவணக்கம்) செய்தால் நீங்களும் சஜ்தா செய்யுங்கள்; அவர் (குனிந்து நிமிரும்போது) ‘சமிஅல்லாஹு -மன் ஹமிதஹ்’ (தன்னைப் புகழ்ந்தோரின் புகழுரையை இறைவன் ஏற்றுக்கொள்கிறான்) என்று கூறினால், நீங்கள் ‘ரப்பனா வல(க்)கல் ஹம்து’ (எங்கள் இறைவா! உனக்கே புகழ் அனைத்தும்) என்று சொல்லுங்கள். அத்தியாயம் :
حدثنا ابو اليمان، قال اخبرنا شعيب، عن الزهري، قال اخبرني انس بن مالك الانصاري، ان رسول الله صلى الله عليه وسلم ركب فرسا، فجحش شقه الايمن، قال انس رضى الله عنه فصلى لنا يوميذ صلاة من الصلوات وهو قاعد، فصلينا وراءه قعودا، ثم قال لما سلم " انما جعل الامام ليوتم به، فاذا صلى قايما فصلوا قياما، واذا ركع فاركعوا، واذا رفع فارفعوا، واذا سجد فاسجدوا واذا قال سمع الله لمن حمده. فقولوا ربنا ولك الحمد
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Call to Prayers (Adhaan)
- Hadith Index
- #732
- Book Index
- 126
Grades
- -
