Loading...

Loading...
நூல்கள்
௮ ஹதீஸ்கள்
அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: எனக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அதை நான் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுசென்றேன். அப்போது அவர்கள் ‘இப்ராஹீம்’ என அக்குழந்தைக்குப் பெயர் சூட்டினார்கள். பிறகு, பேரீச்சம் பழத்தை மென்று குழந்தையின் வாயில் அதை இட்டார்கள். மேலும், அதற்காக வளம் (பரக்கத்) வேண்டிப் பிரார்த்தித்தார் கள். பிறகு என்னிடம் கொடுத்து விட்டார் கள். அக்குழந்தையே அபூமூசா (ரலி) அவர்களின் மூத்த குழந்தையாகும். அத்தியாயம் :
حدثني اسحاق بن نصر، حدثنا ابو اسامة، قال حدثني بريد، عن ابي بردة، عن ابي موسى رضى الله عنه قال ولد لي غلام، فاتيت به النبي صلى الله عليه وسلم فسماه ابراهيم، فحنكه بتمرة، ودعا له بالبركة ودفعه الى، وكان اكبر ولد ابي موسى
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடம், அவர்கள் இனிப்புப் பொருளை மென்று வாயிலிடு வதற்காக ஆண் குழந்தை ஒன்று கொண்டு வரப்பட்டது. அது அவர்கள்மீது சிறுநீர் கழித்துவிட்டது. (சிறுநீர் கழித்த) இடத்தில் நபி (ஸல்) அவர்கள் தண்ணீர் ஊற்றும்படி செய்தார்கள்.3 அத்தியாயம் :
حدثنا مسدد، حدثنا يحيى، عن هشام، عن ابيه، عن عايشة رضى الله عنها قالت اتي النبي صلى الله عليه وسلم بصبي يحنكه، فبال عليه، فاتبعه الماء
அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது: மக்காவில் (என் புதல்வர்) அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைரை நான் கருவுற்றேன். கர்ப்ப காலம் முழுமையடைந்துவிட்ட நிலையில் புறப்பட்டு நான் மதீனா சென்றேன். (வழியில்) ‘குபா’வில் தங்கினேன். குபாவிலேயே எனக்குப் பிரசவமாகிவிட்டது. பிறகு குழந்தையை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டுசென்று அவர்களுடைய மடியில் வைத்தேன். பிறகு நபி (ஸல்) அவர்கள் ஒரு பேரீச்சம்பழத்தைக் கொண்டுவரச் சொல்லி அதை மென்று குழந்தையின் வாயில் உமிழ்ந்தார்கள். அப்துல்லாஹ்வின் வயிற்றுக்குள் சென்ற முதல் (உணவுப்) பொருள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் உமிழ் நீராகத்தான் இருந்தது. பிறகு, அவர்கள் பேரீச்சம்பழத்தை மென்று அப்துல்லாஹ்வின் வாயில் அதை இட்டார்கள். பின்னர், அப்துல்லாஹ்வுக்கு வளம் (பரக்கத்) வேண்டிப் பிரார்த்தனை செய்தார்கள். (என் புதல்வர்) அப்துல்லாஹ்தான் இஸ்லாத்தில் பிறந்த முதல் குழந்தையாவார். ஆகவே, முஸ்லிம்கள் அவர் பிறந்ததற்காக மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்கள். ஏனெனில், அவர்களிடம், ‘‘யூதர்கள் உங்களுக்குச் சூனியம் வைத்துவிட்டார்கள். ஆகவே, உங்களுக்கு (இனி) குழந்தை பிறக்காது” எனக் கூறப்பட்டுவந்தது.4 அத்தியாயம் :
حدثنا اسحاق بن نصر، حدثنا ابو اسامة، حدثنا هشام بن عروة، عن ابيه، عن اسماء بنت ابي بكر رضى الله عنهما انها حملت بعبد الله بن الزبير بمكة قالت فخرجت وانا متم، فاتيت المدينة فنزلت قباء فولدت بقباء، ثم اتيت به رسول الله صلى الله عليه وسلم فوضعته في حجره، ثم دعا بتمرة فمضغها، ثم تفل في فيه فكان اول شىء دخل جوفه ريق رسول الله صلى الله عليه وسلم ثم حنكه بالتمرة، ثم دعا له فبرك عليه، وكان اول مولود ولد في الاسلام، ففرحوا به فرحا شديدا، لانهم قيل لهم ان اليهود قد سحرتكم فلا يولد لكم
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: (என் தாயார் உம்மு சுலைம் அவர்களின் இரண்டாவது கணவரான) அபூதல்ஹா (ரலி) அவர்களின் புதல்வர் ஒருவர் நோய்வாய்ப்பட்டு இருந்தார். (ஒருமுறை) அபூதல்ஹா (ரலி) அவர்கள் வெளியே செல்ல அப்போது அந்தப் பையன்இறந்துவிட்டான். அபூதல்ஹா (ரலி) அவர்கள் திரும்பி வந்தபோது ‘‘என் மகன் என்ன ஆனான்?” என்று கேட்டார்கள். (அவருடைய துணைவியார்) உம்மு சுலைம் (துக்கத்தை வெளிக்காட்டாமல்), ‘‘அவன் முன்பைவிட நிம்மதியாக இருக்கிறான்” என்று பதிலளித்துவிட்டு, அவர்களுக்கு முன்னால் இரவு உணவை வைத்தார். அபூதல்ஹா (ரலி) அவர்கள் இரவு உணவை அருந்தினார்கள். பிறகு உம்மு சுலைம் அவர்களுடன் (அன்றிரவு) தாம்பத்திய உறவு கொண்டார்கள். உறவு கொண்டு முடித்தபோது, உம்மு சுலைம் அவர்கள் (தம் கணவரிடம் மகன் இறந்த விவரத்தைக் கூறி) ‘‘பையனை அடக்கம் செய்(ய ஏற்பாடு செய்)யுங்கள்” என்று கூறினார்கள். விடிந்ததும் அபூதல்ஹா (ரலி) அவர்கள் அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று (நடந்ததைத்) தெரிவித்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘இன்றிரவு தாம்பத்திய உறவுகொண்டீர்களா?” எனக் கேட்டார்கள். அபூதல்ஹா (ரலி) அவர்கள், ‘‘ஆம்” என்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘இறைவா! அவர்களின் இரவில் அவர்கள் இருவருக்கும் வளம் வழங்குவாயாக” என்று பிரார்த்தித் தார்கள்.5 பின்னர் உம்மு சுலைம் (ரலி) அவர்கள் ஆண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்தார்கள். என்னிடம் அபூதல்ஹா (ரலி) அவர்கள், ‘‘குழந்தையை நபி (ஸல்) அவர்களிடம் பத்திரமாகக் கொண்டுசெல்” என்று கூறினார்கள். அவ்வாறே நான் குழந்தையை நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுசென்றேன். என்னிடம் உம்மு சுலைம் (ரலி) அவர்கள் பேரீச்சம்பழங்கள் சிலவற்றைக் கொடுத்தனுப்பி யிருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் குழந்தையை வாங்கிக்கொண்டு, ‘‘இக்குழந்தையுடன் ஏதேனும் (இனிப்புப்) பொருள் உள்ளதா?” என்று கேட்டார்கள். (அங்கிருந்த) மக்கள் ‘‘ஆம்; பேரீச்சம்பழங்கள் உள்ளன” என்று பதிலளித்தார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் அதை வாங்கி (தம் வாயால்) மென்று பிறகு தமது வாயிலிருந்து அதை எடுத்துக் குழந்தையின் வாயில் வைத்து அதைத் தடவினார்கள். குழந்தைக்கு ‘அப்துல்லாஹ்’ எனப் பெயர் சூட்டினார் கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا مطر بن الفضل، حدثنا يزيد بن هارون، اخبرنا عبد الله بن عون، عن انس بن سيرين، عن انس بن مالك رضى الله عنه قال كان ابن لابي طلحة يشتكي، فخرج ابو طلحة، فقبض الصبي فلما رجع ابو طلحة قال ما فعل ابني قالت ام سليم هو اسكن ما كان. فقربت اليه العشاء فتعشى، ثم اصاب منها، فلما فرغ قالت وار الصبي. فلما اصبح ابو طلحة اتى رسول الله صلى الله عليه وسلم فاخبره فقال " اعرستم الليلة ". قال نعم. قال " اللهم بارك لهما ". فولدت غلاما قال لي ابو طلحة احفظه حتى تاتي به النبي صلى الله عليه وسلم فاتى به النبي صلى الله عليه وسلم وارسلت معه بتمرات، فاخذه النبي صلى الله عليه وسلم فقال " امعه شىء ". قالوا نعم تمرات. فاخذها النبي صلى الله عليه وسلم فمضغها، ثم اخذ من فيه فجعلها في في الصبي، وحنكه به، وسماه عبد الله
حدثنا محمد بن المثنى، حدثنا ابن ابي عدي، عن ابن عون، عن محمد، عن انس، وساق الحديث،
சல்மான் பின் ஆமிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: பையன் (பிறந்த) உடன் ‘அகீகா’ (கொடுக்கப்படல்) உண்டு. இது குறித்து நபி (ஸல்) அவர்களிட மிருந்து சல்மான் பின் ஆமிர் (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸை ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் அறிவிக்கிறார்கள். இப்னு சீரீன் (ரஹ்) அவர்கள் வழியாக வரும் சல்மான் (ரலி) அவர்களின் இந்த ஹதீஸை யஸீத் பின் இப்ராஹீம் (ரஹ்) அவர்களும் அறிவித்துள்ளார்கள். ஆக மொத்தம் இந்த ஹதீஸ் எட்டு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا ابو النعمان، حدثنا حماد بن زيد، عن ايوب، عن محمد، عن سلمان بن عامر، قال مع الغلام عقيقة. وقال حجاج حدثنا حماد اخبرنا ايوب وقتادة وهشام وحبيب عن ابن سيرين عن سلمان عن النبي صلى الله عليه وسلم
சல்மான் பின் ஆமிர் அள்ளப்பீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘பையன் (பிறந்த) உடன் ‘அகீகா’ (கொடுக்கப்படல்) உண்டு. ஆகவே, அவனுக்காக (ஆடு அறுத்து) ‘குர்பானி’ கொடுங்கள். அவன் (தலைமுடி களைந்து) பாரத்தை இறக்கிடுங்கள்” என்று சொல்ல நான் கேட்டிருக்கிறேன். ஹபீப் பின் அஷ்ஷஹீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஹசன் அல்பளி (ரஹ்) அவர்களிடம், ‘‘அவர்கள் யாரிடமிருந்து அகீகா பற்றிய ஹதீஸைக் கேட்டார்கள்” என்று வினவும் படி என்னை இப்னு சீரீன் (ரஹ்) அவர்கள் பணித்தார்கள். அவ்வாறே நான் அவர்களிடம் கேட்டேன். அவர்கள், ‘‘சமுரா பின் ஜுன்தப் (ரலி) அவர்களிட மிருந்து நான் (அகீகா பற்றிய ஹதீஸைச்) செவியுற்றேன்” என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :
وقال غير واحد عن عاصم، وهشام، عن حفصة بنت سيرين، عن الرباب، عن سلمان، عن النبي صلى الله عليه وسلم. ورواه يزيد بن ابراهيم عن ابن سيرين عن سلمان قوله. وقال اصبغ اخبرني ابن وهب عن جرير بن حازم عن ايوب السختياني عن محمد بن سيرين حدثنا سلمان بن عامر الضبي قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول " مع الغلام عقيقة، فاهريقوا عنه دما واميطوا عنه الاذى ". حدثني عبد الله بن ابي الاسود، حدثنا قريش بن انس، عن حبيب بن الشهيد، قال امرني ابن سيرين ان اسال الحسن، ممن سمع حديث العقيقة، فسالته فقال من سمرة بن جندب
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (இனி,) தலைக் குட்டி(யைப் பலியிடும் அறியாமைக் காலச் செய்கை)யும் இல்லை. (ரஜப் மாதத்தின் முதல் பத்து நாட்களில்) பிராணிகளைப் பலியிடுவதும் இல்லை. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஆடு மற்றும் ஒட்டகம் ஆகியவை ஈனும்) முதலாவது குட்டி ‘ஃபரஉ’ ஆகும்; அதை (அறியாமைக் கால) மக்கள் தம் தெய்வச் சிலைகளுக்காகப் பயிட்டு வந்தனர். ரஜப் மாதத்தி(ன் முதல் பத்து நாட்களி)ல் பலியிடப்படும் பிராணி ‘அத்தீரா’ ஆகும். அத்தியாயம் :
حدثنا عبدان، حدثنا عبد الله، اخبرنا معمر، اخبرنا الزهري، عن ابن المسيب، عن ابي هريرة رضى الله عنه عن النبي صلى الله عليه وسلم قال " لا فرع ولا عتيرة ". والفرع اول النتاج، كانوا يذبحونه لطواغيتهم، والعتيرة في رجب
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (இனி,) தலைக் குட்டி(யைப் பலியிடும் அறியாமைக் காலச் செய்கை)யும் இல்லை. ரஜப் மாதத்தி(ன் முதல் பத்து நாட்களி)ல் பிராணிகளைப் பலியிடுவதும் இல்லை. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (அறியாமைக் கால) மக்களுடைய (ஆடு ஒட்டகம் ஆகியவை ஈனும்) முதலாவது குட்டியே ‘ஃபரஉ’ ஆகும்; அதை அம்மக்கள் தம் தெய்வச் சிலை களுக்காகப் பயிட்டுவந்தனர். ரஜப் மாதத்தி(ன் முதல் பத்து நாட்களி)ல் பலியிடப்படும் பிராணி ‘அத்தீரா’ ஆகும்.8 அத்தியாயம் :
حدثنا علي بن عبد الله، حدثنا سفيان، قال الزهري حدثنا عن سعيد بن المسيب، عن ابي هريرة، عن النبي صلى الله عليه وسلم قال " لا فرع ولا عتيرة ". قال والفرع اول نتاج كان ينتج لهم، كانوا يذبحونه لطواغيتهم، والعتيرة في رجب