Loading...

Loading...
நூல்கள்
௫௦௪ ஹதீஸ்கள்
உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் (என் சிறிய தாயார்) ஆயிஷா (ரலி) அவர்களிடம், “அநாதை(ப் பெண்களை மணந்துகொண்டு அவர்)கள் விஷயத்தில் நீதி செலுத்த இயலாது என நீங்கள் அஞ்சினால், உங்களுக்கு விருப்பமான பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நான்கு நான்காக நீங்கள் மணந்துகொள்ளலாம்” எனும் (4:3ஆவது) இறைவசனம் குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள் (பின்வருமாறு) விளக்கமளித்தார்கள்: என் சகோதரி (அஸ்மாவின்) மகனே! இந்த (வசனத்தில் கூறப்பட்டுள்ள) பெண், தன் காப்பாளரின் பொறுப்பில் வளர்கின்ற- அவருடைய செல்வத்தில் பங்காளியாக இருக்கின்ற அநாதைப் பெண் ஆவாள். அவளது செல்வத்தாலும் அழகாலும் கவரப்பட்டு, அவளுடைய காப்பாளர் அவளது மஹ்ர் (மணக்கொடை) விஷயத்தில் நீதியுடன் நடக்காமல் - மற்றவர்கள் அவளுக்கு அளிப்பது போன்ற மஹ்ரை அவளுக்கு அளிக்காமல்-அவளை மணமுடித்துக்கொள்ள விரும்புகிறார் எனும் நிலையில் இருப்பவள் ஆவாள். இவ்விதம் காப்பாளர்கள் தம் பொறுப்பி லிருக்கும் அநாதைப் பெண்களை அவர்களுக்கு நீதி செலுத்தாமல், அவர்களைப் போன்ற பெண்களுக்குக் கொடுக்கப்படும் மஹ்ரில் மிக உயர்ந்த மஹ்ர் எதுவோ அதை அவர்களுக்கு அளிக்காமல் அவர்களை மணமுடித்துக்கொள்ள அவர்களுக்கு (இந்த இறைவசனத்தின் வாயிலாக)த் தடை விதிக்கப்பட்டது. அந்தப் பெண்களைத் தவிரவுள்ள மற்றப் பெண்களில் தங்களுக்கு விருப்பமான பெண்களை மணமுடித்துக்கொள்ளும்படி அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டது. இந்த இறைவசனம் அருளப்பெற்ற பின்பும் மக்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தீர்ப்புக் கேட்டு வரலாயினர். ஆகவே அல்லாஹ், “பெண்கள் விஷயத்தில் விளக்கம் கூறுமாறு (நபியே!) உம்மிடம் அவர்கள் கோருகின்றனர்” என்று தொடங்கும் (4:127ஆவது) வசனத்தை அருளினான். மேலும் (இந்த) பிந்திய வசனத்தில் (4:127) உயர்ந்தோன் அல்லாஹ் “மேலும் யாரை நீங்கள் மணந்துகொள்ள விரும்புவதில்லையோ...” என்று கூறியிருப்பது, உங்களில் (காப்பாளராயிருக்கும்) ஒருவர் தம் (பராமரிப்பில் இருந்துவரும்) அநாதைப் பெண்ணை அவள் செல்வமும் அழகும் குறைந்தவளாக இருக்கும்போது அவளை (மணந்துகொள்ள) விரும்பாமலிருப்பதைக் குறிப்பதாகும். அப்பெண்கள் செல்வத்திலும் அழகிலும் குறைந்தவர்களாக இருக்கும்போது அவர்களை மணந்துகொள்ள காப்பாளர்கள் விரும்பாமலிருந்த காரணத்தால், அவர்கள் எந்த அநாதைப் பெண்களின் செல்வத்திற்கும் அழகிற்கும் ஆசைப்பட்டார்களோ அந்தப் பெண்களையும் “நீதியான முறையிலேயே அல்லாமல் வேறு எந்த வகையிலும் மணமுடித்துக்கொள்ளலாகாது' என்று அவர்களுக்குத் தடை விதிக்கப்பட்டது.3 அத்தியாயம் :
حدثنا عبد العزيز بن عبد الله، حدثنا ابراهيم بن سعد، عن صالح بن كيسان، عن ابن شهاب، قال اخبرني عروة بن الزبير، انه سال عايشة عن قول الله، تعالى {وان خفتم ان لا تقسطوا في اليتامى}. فقالت يا ابن اختي، هذه اليتيمة تكون في حجر وليها، تشركه في ماله ويعجبه مالها وجمالها، فيريد وليها ان يتزوجها، بغير ان يقسط في صداقها، فيعطيها مثل ما يعطيها غيره، فنهوا عن ان ينكحوهن، الا ان يقسطوا لهن، ويبلغوا لهن اعلى سنتهن في الصداق، فامروا ان ينكحوا ما طاب لهم من النساء سواهن. قال عروة قالت عايشة وان الناس استفتوا رسول الله صلى الله عليه وسلم بعد هذه الاية فانزل الله {ويستفتونك في النساء} قالت عايشة وقول الله تعالى في اية اخرى {وترغبون ان تنكحوهن} رغبة احدكم عن يتيمته حين تكون قليلة المال والجمال قالت فنهوا ان ينكحوا عن من رغبوا في ماله وجماله في يتامى النساء، الا بالقسط، من اجل رغبتهم عنهن اذا كن قليلات المال والجمال
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: “அநாதைகளைப் பராமரிப்பவர் செல்வராக இருந்தால், அவர் (அநாதை களின் சொத்துகளிலிருந்து உண்பதைத்) தவிர்த்துக்கொள்ளட்டும். அவர் ஏழையாக இருந்தால் முறைப்படி உண்ணட்டும்!” எனும் (4:6ஆவது) இறைவசனம் அநாதையின் செல்வம் தொடர்பாக அருளப்பட்டது. (அதைப்) பராமரிப்பவர் ஏழையாக இருந்தால், அதைப் பராமரிப்பதற்குப் பகரமாக நியாயமான அளவு அதிலிருந்து (எடுத்து) உண்ணலாம். (இதுதான் அதன் பொருள்.)4 அத்தியாயம் :
حدثني اسحاق، اخبرنا عبد الله بن نمير، حدثنا هشام، عن ابيه، عن عايشة رضى الله عنها في قوله تعالى {ومن كان غنيا فليستعفف ومن كان فقيرا فلياكل بالمعروف} انها نزلت في مال اليتيم اذا كان فقيرا، انه ياكل منه مكان قيامه عليه، بمعروف
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: பாகப்பிரிவினையின்போது உற வினர்கள், அநாதைகள், ஏழைகள் ஆகியோர் வந்துவிட்டால் அவர்களுக் கும் அதிலிருந்து (சிறிது) அளியுங்கள். மேலும், அவர்களிடம் கனிவான வார்த்தை களைக் கூறி (அனுப்பி)விடுங்கள்” எனும் (4:8ஆவது) வசனம், (சட்டம்) நடை முறையிலுள்ள வசனமாகும்; காலாவதியாக்கப்பட்ட வசனமன்று.5 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.6 அத்தியாயம் :
حدثنا احمد بن حميد، اخبرنا عبيد الله الاشجعي، عن سفيان، عن الشيباني، عن عكرمة، عن ابن عباس رضى الله عنهما {واذا حضر القسمة اولو القربى واليتامى والمساكين} قال هي محكمة وليست بمنسوخة. تابعه سعيد عن ابن عباس
ஜாபிர் (ரலி) அவர்கள் கூறிய தாவது: நபி (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி) அவர்களும் (என்) பனூ சலிமா குலத்தாரிடையே நான் (நோயுற்றுத் தங்கி) இருந்தபோது நடந்தே வந்து என்னை நலம் விசாரித்தார்கள். நபி (ஸல்) அவர்கள், நான் (நோயின் கடுமையால்) சுயநினைவு இழந்தவனாக இருந்த நிலையில் என்னைக் கண்டார்கள். ஆகவே, சிறிது தண்ணீரைக் கொண்டு வரச்சொல்லி அதிலிருந்து அங்கத் தூய்மை செய்து என்மீது தெளித்தார்கள். நான் மூர்ச்சை தெளிந்து, “அல்லாஹ்வின் தூதரே! நான் என் செல்வத்தை என்ன செய்ய வேண்டுமென்று எனக்குக் கட்டளையிடுகிறீர்கள்!” என்று கேட்டேன். அப்போதுதான், “அல்லாஹ் உங்கள் பிள்ளைகளின் (பாகப்பிரிவினை) விஷயத்தில் உங்களுக்கு (இவ்வாறு) கட்டளையிடுகின்றான்” என்று தொடங்கும் (4:11ஆவது) வசனம் அருளப்பெற்றது.7 அத்தியாயம் :
حدثنا ابراهيم بن موسى، حدثنا هشام، ان ابن جريج، اخبرهم قال اخبرني ابن منكدر، عن جابر رضى الله عنه قال عادني النبي صلى الله عليه وسلم وابو بكر في بني سلمة ماشيين فوجدني النبي صلى الله عليه وسلم لا اعقل، فدعا بماء فتوضا منه، ثم رش على، فافقت فقلت ما تامرني ان اصنع في مالي يا رسول الله فنزلت {يوصيكم الله في اولادكم}
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (இறந்தவரின்) சொத்து (அவருடைய) பிள்ளைகளுக்குரியதாக இருந்தது; (இறந்தவரின்) இறுதிவிருப்பம் (மூலம் கிடைப்பது) மட்டுமே தாய் தந்தையருக்கு உரியதாக இருந்துவந்தது. அல்லாஹ் அதிலிருந்து, தான் விரும்பி யதை மாற்றி(யமைத்து), ஆணுக்கு இரு பெண்களின் பங்கை நிர்ணயித்துத் தாய் தந்தையரில் (தலா) ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பங்கையும் மூன்றில் ஒரு பங்கையும் நிர்ணயித்தான். மனைவிக்கு எட்டில் ஒரு பங்கையும் நான்கில் ஒரு பங்கையும் கணவனுக்குப் பாதிப் பங்கையும் நான்கில் ஒரு பங்கையும் நிர்ணயித்தான்.8 அத்தியாயம் :
حدثنا محمد بن يوسف، عن ورقاء، عن ابن ابي نجيح، عن عطاء، عن ابن عباس رضى الله عنهما قال كان المال للولد، وكانت الوصية للوالدين، فنسخ الله من ذلك ما احب، فجعل للذكر مثل حظ الانثيين، وجعل للابوين لكل واحد منهما السدس والثلث، وجعل للمراة الثمن والربع، وللزوج الشطر والربع
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: “(அறியாமைக் காலத்தில்) ஒரு மனிதர் இறந்துவிட்டால் அவருடைய வாரிசுகளே அவருடைய மனைவியின் மீது அதிக உரிமை உடையவர்களாக இருந்துவந்தனர். அவர்களில் சிலர் விரும்பினால் அவளைத் தாமே மணமுடித்துக்கொள்ளவும் செய்வார்கள். விரும்பினால் (வேறெவருக்காவது) அவளை மணமுடித்துக் கொடுத்துவிடுவார்கள். விரும்பினால் மணமுடித்துக் கொடுக்க(ôது அப்படியே விட்டுவிடுவார்கள்; வாழ அனுமதிக்க)மாட்டார்கள். ஆக, அவளுடைய வீட்டாரை விட (இறந்த கணவனின் வாரிசுகளான) அவர்கள்தான் அவள்மீது அதிக உரிமையுடையவர்களாக இருந்தார்கள். அப்போதுதான் இது தொடர்பாக, “இறைநம்பிக்கையாளர்களே! (விதவைப்) பெண்களை நீங்கள் பலவந்தமாக அடைவது அனுமதிக்கப்பட்டதன்று. மேலும், அவர்கள் வெளிப்படையான இழிசெயல் எதையும் செய்தாலன்றி, அவர்களுக்கு நீங்கள் வழங்கிய (மஹ்ர் போன்ற)வற்றில் ஒரு பகுதியைப் பறித்துக்கொள்வதற்காக அவர்களை நீங்கள் கட்டாயப்படுத்தாதீர்கள்” எனும் (4:19ஆவது) வசனம் அருளப்பெற்றது. இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا محمد بن مقاتل، حدثنا اسباط بن محمد، حدثنا الشيباني، عن عكرمة، عن ابن عباس،. قال الشيباني وذكره ابو الحسن السوايي ولا اظنه ذكره الا عن ابن عباس، {يا ايها الذين امنوا لا يحل لكم ان ترثوا النساء كرها ولا تعضلوهن لتذهبوا ببعض ما اتيتموهن} قال كانوا اذا مات الرجل كان اولياوه احق بامراته، ان شاء بعضهم تزوجها، وان شاءوا زوجوها، وان شاءوا لم يزوجوها، فهم احق بها من اهلها، فنزلت هذه الاية في ذلك
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: இந்த (4:33ஆவது) வசனத்தின் மூலத்திலுள்ள “மவாலிய' எனும் சொல்லுக்கு “வாரிசுகள்' என்பது பொருள். இவ்வசனத்தின் விவரமாவது: முஹாஜிர்கள் மதீனாவுக்கு வந்தபோது (ஆரம்பத்தில்) அன்சாரி (ஒருவர் இறந்து விட்டால் அவரு)க்கு அவருடைய உறவினர்கள் அன்றி (அவருடைய) முஹாஜிர் (நண்பர்) வாரிசாகிவந்தார். நபி (ஸல்) அவர்கள் முஹாஜிர்களுக்கும் அன்சாரிகளுக்கும் இடையே (இஸ்லாமிய) சகோதரத்துவத்தை ஏற்படுத்தியிருந்ததே இதற்குக் காரணம். (பின்னர்) “தாய் தந்தையரும் நெருங்கிய உறவினரும் விட்டுச்சென்ற (சொத்)திலிருந்து (பங்கு பெறுகின்ற) வாரிசுகளை நாம் ஒவ்வொருவருக்கும் ஏற்படுத்தியுள்ளோம்” எனும் (4:33ஆவது) வசனம் அருளப்பெற்றபோது இந்த நியதி (இறைவனால்) மாற்றப்பட்டுவிட்டது. பின்னர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் யாருடன் உடன்படிக்கை செய்துள்ளீர்களோ அவர்களுக்கு வாரிசுரிமை போய், உதவி புரிதல், ஒத்துழைப்பு நல்குதல், அறிவுரை பகர்தல் ஆகியவைதான் உள்ளன. உடன்படிக்கை செய்துகொண்டவருக்காக இறுதிவிருப்பம் (வேண்டுமானால்) தெரிவிக்கலாம்.10 இதன் அறிவிப்பாளர்களான அபூ உசாமா (ரஹ்) அவர்கள் இத்ரீஸ் (ரஹ்) அவர்களிடமும், இத்ரீஸ் (ரஹ்) அவர்கள் தல்ஹா பின் முஸர்ரிஃப் (ரஹ்) அவர்களி டமும் ஹதீஸைக் கேட்டுள்ளார்கள்.11 அத்தியாயம் :
حدثني الصلت بن محمد، حدثنا ابو اسامة، عن ادريس، عن طلحة بن مصرف، عن سعيد بن جبير، عن ابن عباس رضى الله عنهما {ولكل جعلنا موالي} قال ورثة. {والذين عاقدت ايمانكم} كان المهاجرون لما قدموا المدينة يرث المهاجر الانصاري دون ذوي رحمه للاخوة التي اخى النبي صلى الله عليه وسلم بينهم فلما نزلت {ولكل جعلنا موالي} نسخت، ثم قال {والذين عاقدت ايمانكم } من النصر، والرفادة والنصيحة، وقد ذهب الميراث ويوصي له. سمع ابو اسامة ادريس، وسمع ادريس طلحة
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களது காலத்தில் மக்கள் சிலர், “அல்லாஹ்வின் தூதரே! மறுமை நாளில் நாங்கள் எங்கள் இறைவனைக் காண்போமா?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “ஆம்! (காண்பீர்கள்.) மேகமே இல்லாத நண்பகல் வெளிச்சத்தில் சூரியனைப் பார்க்க ஒருவரை ஒருவர் முண்டியடிப்பீர்களா?” என்று கேட்டார்கள். மக்கள், “இல்லை' என்று கூறினர். நபி (ஸல்) அவர்கள், “மேகமே இல்லாத பௌர்ணமி இரவின் வெளிச்சத்தில் நிலவைக் காண்பதற்காக நீங்கள் ஒருவருக்கு ஒருவர் முண்டியடித்துக்கொள்வீர்களா?” என்று கேட்டார்கள். மக்கள் (அப்போதும்) “இல்லை' என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள், “இவ்விரண்டில் ஒன்றைப் பார்க்க நீங்கள் ஒருவருக்கொருவர் முண்டியடித்துக்கொள்ளாததைப் போன்றே மறுமை நாளில் கண்ணியமும் மகத்துவமும் மிக்க அல்லாஹ்வைக் காணவும் நீங்கள் முண்டியடித்துக் கொள்ளமாட்டீர்கள்” என்று கூறிவிட்டுப் பின்வருமாறு விளக்கி னார்கள்: மறுமை நாள் ஏற்படும்போது அறிவிப் பாளர் ஒருவர், “ஒவ்வொரு சமுதாய மும் (உலக வாழ்வில்) தாம் வழிபட்டுக் கொண்டிருந்தவர்களைப் பின்தொடர்ந்து செல்லட்டும்” என்று அறிவிப்பார். அப்போது அல்லாஹ்வை விடுத்துக் கற்பனைக் கடவுளர்களையும் கற்சிலைகளையும் வழிபட்டுக்கொண்டிருந்தவர்கள் ஒருவர்(கூட) எஞ்சாமல் (அனைவரும்) நரக நெருப்பில் விழுவர். முடிவில் அல்லாஹ்வை வழிபட்டுக்கொண்டு நன்மைகளும் புரிந்துகொண்டிருந்தவர்கள், அல்லது (அல்லாஹ்வையும் வழிபட்டுக்கொண்டு பாவங்களும் புரிந்துவந்த) பாவிகள், மேலும் வேதக்காரர்களில் மிஞ்சியவர்கள் ஆகியோர் தவிர வேறெவரும் மீதியில்லாத நிலையில் (வேதக்காரர்களான) யூதர்கள் அழைக்கப்படுவர். அவர்களிடம், “யாரை நீங்கள் வழிபட்டுக்கொண்டிருந்தீர்கள்?” என்று கேட்கப்படும். அவர்கள், “அல்லாஹ்வின் மைந்தர் உஸைர் அவர்களை நாங்கள் வழிபட்டுக் கொண்டிருந்தோம்” என்று பதிலளிப்பார்கள். அப்போது அவர்களிடம், “நீங்கள் பொய்யுரைக்கிறீர்கள். அல்லாஹ் தனக்கு எந்தத் துணைவியையும் குழந்தையையும் ஏற்படுத்திக்கொள்ளவில்லை” என்று கூறப் படும். மேலும், “இப்போது உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று கேட்கப்படும். அதற்கு அவர்கள் “எங்கள் இறைவா! எங்களுக்குத் தாகமாக உள்ளது. எங்களுக்கு (நீர்) புகட்டுவாயாக!” என்பார்கள். உடனே நீங்கள் தண்ணீர் உள்ள (அந்த) இடத்திற்குச் செல்லக் கூடாதா என (ஒரு திசையைச்) சுட்டிக்காட்டப்படும். பிறகு (அத்திசையிலுள்ள) நரகத்தின் பக்கம் அவர்கள் கொண்டுசெல்லப்படுவார்கள். அது கானலைப் போலக் காணப்படும். அதன் ஒரு பகுதி மற்றொரு பகுதியைச் சிதைத்துக்கொண்டிருக்கும். அப்போது அவர்கள் அந்த நரக நெருப்பில் விழுவார்கள். பிறகு கிறித்தவர்கள் அழைக்கப்பட்டு, “நீங்கள் எதை வழிபட்டுக்கொண்டிருந் தீர்கள்?” என்று அவர்களிடம் கேட்கப்படும். அவர்கள், “நாங்கள் அல்லாஹ்வின் மைந்தர் மசீஹை (ஈசாவை) வழிபட்டுக்கொண்டிருந்தோம்” என்று கூறுவர். அப்போது அவர்களிடம், “நீங்கள் பொய்யுரைக்கிறீர்கள். அல்லாஹ் (தனக்கு) எந்தத் துணைவியையும் குழந்தையையும் ஏற்படுத்திக்கொள்ளவில்லை” என்று கூறப்பட்ட பின் அவர்களைப் பார்த்து, “உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று கேட்கப்படும். முன்பு (யூதர்கள்) கூறியதைப் போன்று இவர்களும் கூறுவர். இறுதியில் அல்லாஹ்வை வழிபட்டுக்(கொண்டு நன்மைகளும் புரிந்து)கொண்டிருந்த நல்லோர், அல்லது (அல்லாஹ்வையும் வழிபட்டுக்கொண்டு பாவங்களும் புரிந்துவந்த) தீயோர் தவிர வேறெவரும் மீதியில்லாத நிலையில் அவர்களிடம் அகிலத்தாரின் இரட்சகன் வருவான். (அவனின் தன்மைகளை முன்பே அறிந்திருந்ததன் மூலம் தம் உள்ளத்தில்) அவனைப் பற்றி அவர்கள் எண்ணிவைத்திருந்த தோற்றங்களில் (அடையாளம் கண்டுகொள்வதற்கு) மிக நெருக்கமானதொரு தோற்றத்தில் (அவன் வருவான்).12 அப்போது, “எதை நீங்கள் எதிர் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள்? ஒவ்வாரு சமுதாயமும் (உலகில்) தாம் வழிபட்டுக் கொண்டிருந்தவற்றைப் பின்தொடர்ந்து சென்றுகொண்டிருக்கின்றனரே!” என்று கேட்கப்படும். அவர்கள், “உலகத்தில் நாங்கள் (வாழ்க்கையின் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்காக) இந்த மக்களிடம் அதிக அளவில் தேவை யுள்ளவர்களாக இருந்தும், அவர்களுடன் ஒட்டி உறவாடிக்கொண்டிராமல் அவர் களைப் பிரிந்திருந்தோம். (அப்படி யிருக்க, இப்போதா அவர்களைப் பின்தொடர்வோம்?) நாங்கள் வழிபட்டுக் கொண்டிருந்த எங்கள் இறைவனையே நாங்கள் (இத்தருணத்தில்) எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறோம்” என்று பதிலளிப்பர். அதற்கு அல்லாஹ், “நானே உங்கள் இறைவன்” என்பான். அதற்கு அவர்கள், “நாங்கள் அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்கமாட்டோம்” என்று இரண்டு தடவையோ அல்லது மூன்று தடவையோ கூறுவர்.13 அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒருமுறை) நபி (ஸல்) அவர்கள் என்னிடம், “எனக்கு (குர்ஆனை) ஓதிக் காட்டுங்கள்” என்று சொன்னார்கள். நான், “தங்கள்மீதே குர்ஆன் அருளப்பட்டுக் கொண்டிருக்க, தங்களுக்கே நான் ஓதிக்காட்டுவதா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஏனெனில், நான் பிறரிடமிருந்து அதைக் கேட்க விரும்புகிறேன்” என்று சொன்னார்கள். ஆகவே, நான் அவர்களுக்கு “அந்நிசா' அத்தியாயத்தை ஓதிக்காட்டினேன். “ஒவ்வொரு சமுதாயத்தாரிலிருந்தும் (அவர்களுடைய நபியாகிய) சாட்சியை நாம் (மறுமையில்) கொண்டுவரும்போதும், (நபியே!) உம்மை இவர்களுக்கெதிரான சாட்சியாகக் கொண்டுவரும்போதும் (இவர்களின் நிலை) எப்படியிருக்கும்?” எனும் (4:41ஆவது) வசனத்தை நான் அடைந்தபோது நபி (ஸல்) அவர்கள், “நிறுத்துங்கள்” என்று சொன்னார்கள். அப்போது அவர்களின் கண்கள் இரண்டும் கண்ணீரைச் சொரிந்துகொண்டிருந்தன.14 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا صدقة، اخبرنا يحيى، عن سفيان، عن سليمان، عن ابراهيم، عن عبيدة، عن عبد الله، قال يحيى بعض الحديث عن عمرو بن مرة، قال قال لي النبي صلى الله عليه وسلم " اقرا على ". قلت اقرا عليك وعليك انزل قال " فاني احب ان اسمعه من غيري ". فقرات عليه سورة النساء حتى بلغت {فكيف اذا جينا من كل امة بشهيد وجينا بك على هولاء شهيدا} قال " امسك ". فاذا عيناه تذرفان
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது: (என் சகோதரி) அஸ்மாவின் கழுத்து மாலையொன்று (ஒரு பயணத்தில் என்னிட மிருந்து) தொலைந்துவிட்டது. ஆகவே, நபி (ஸல்) அவர்கள் அதைத் தேடுவதற்காகச் சிலரை அனுப்பிவைத்தார்கள். அப்போது தொழுகை (நேரம்) வந்துவிட்டது. அப்போது அவர்கள் அங்கத் தூய்மை யுடன் இருக்கவில்லை. (உளூ செய்வதற்கு) தண்ணீரும் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. ஆகவே, உளூ இன்றியே அவர்கள் தொழுதார்கள். அப்போதுதான் உயர்ந்தோன் அல்லாஹ் தயம்மும் (மாற்று அங்கத் தூய்மை பற்றிய சட்டத்தைக் கூறும்) இறைவசனத்தை அருளினான்.15 அத்தியாயம் :
حدثنا محمد، اخبرنا عبدة، عن هشام، عن ابيه، عن عايشة رضى الله عنها قالت هلكت قلادة لاسماء فبعث النبي صلى الله عليه وسلم في طلبها، رجالا فحضرت الصلاة وليسوا على وضوء. ولم يجدوا ماء، فصلوا وهم على غير وضوء، فانزل الله. يعني اية التيمم
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: “அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்து நடங்கள்! (அவ்வாறே) அவனுடைய தூதருக்கும், உங்களில் அதிகாரம் உடையவர்களுக்கும் கீழ்ப்படிந்து நடங்கள்” எனும் (4:59ஆவது) வசனம், நபி (ஸல்) அவர்கள் அப்துல்லாஹ் பின் ஹுதாஃபா பின் கைஸ் பின் அதீ (ரலி) அவர்களை (தளபதியாக்கி) ஒரு படைப்பிரிவினருடன் அனுப்பியபோது இறங்கியது.16 அத்தியாயம் :
حدثنا صدقة بن الفضل، اخبرنا حجاج بن محمد، عن ابن جريج، عن يعلى بن مسلم، عن سعيد بن جبير، عن ابن عباس رضى الله عنهما {اطيعوا الله واطيعوا الرسول واولي الامر منكم}. قال نزلت في عبد الله بن حذافة بن قيس بن عدي، اذ بعثه النبي صلى الله عليه وسلم في سرية
உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (என் தந்தை) ஸுபைர் (ரலி) அவர்களுக்கு “அல்ஹர்ரா' எனுமிடத்திலிருந்த கால்வாய் ஒன்றின் விஷயத்தில் அன்சாரிகளில் ஒருவருடன் தகராறு ஏற்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள், “ஸுபைரே! (முதலில் உங்கள் தோப்புக்கு) நீங்கள் நீர் பாய்ச்சிக்கொள்ளுங்கள். பிறகு உங்கள் பக்கத்திலிருப்பவருக்குத் தண்ணீரை அனுப்புங்கள்” என்று சொன்னார்கள். (இதைக் கேட்ட) அந்த அன்சாரி, “அல்லாஹ்வின் தூதரே! அவர் உங்கள் அத்தை (ஸஃபிய்யா பின்த் அப்தில் முத்தலிபின்) மகன் என்பதாலா (அவருக்குச் சாதகமாக தீர்ப்பளிக்கிறீர்கள்)?” என்று கேட்டார். இதைச் செவியுற்ற நபி (ஸல்) அவர்களின் முகம் நிறம் மாறி (கோபத்தில் சிவந்து)விட்டது. பிறகு நபி (ஸல்) அவர்கள் (ஸுபைர் (ரலி) அவர்களைப் பார்த்து), “ஸுபைரே! (உங்கள் மரங்களுக்கு) நீர் பாய்ச்சிக் கொள்ளுங்கள். பிறகு வரப்பு களைச் சென்றடையும்வரை தண்ணீரைத் தடுத்து நிறுத்துங்கள். பிறகு உங்கள் பக்கத்திலிருக்கும் தோப்புக்காரருக்குத் தண்ணீரை விட்டுவிடுங்கள்” என்று சொன்னார்கள். அந்த அன்சாரித் தோழர் தம்மைக் கோபப்படுத்தியபோது நபி (ஸல்) அவர்கள் ஸுபைர் (ரலி) அவர்களின் உரிமையைத் தெளிவான தீர்ப்பின் மூலம் முழுமையாக வழங்கிவிட்டார்கள். அதற்குமுன் அவர்கள் இருவருக்குமே சகாயம் கிடைக்கும் வகையில் ஒரு தீர்ப்பைச் சுட்டிக்காட்டியிருந்தார்கள். ஸுபைர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: குர்ஆனின், “(நபியே!) உம்முடைய இறைவன்மீது சத்தியமாக! அவர்கள் தமக்கிடையே ஏற்பட்ட (சண்டை சச்சரவு முதலிய)வற்றில் உம்மை நீதிபதியாக ஏற்றுக்கொண்டு, பின்னர் நீர் அளிக்கின்ற தீர்ப்புக் குறித்துத் தம் உள்ளங்களில் எத்தகைய அதிருப்தியும் கொள்ளாமல் முற்றிலும் அதற்கு இணங்கி நடக்காத வரை அவர்கள் இறைநம்பிக்கை கொண்டவர்களாகமாட்டார்கள்” எனும் (4:65ஆவது) வசனம் இது தொடர்பாக அருளப்பெற்றது என்றே நான் எண்ணுகிறேன்.17 அத்தியாயம் :
حدثنا علي بن عبد الله، حدثنا محمد بن جعفر، اخبرنا معمر، عن الزهري، عن عروة، قال خاصم الزبير رجلا من الانصار في شريج من الحرة، فقال النبي صلى الله عليه وسلم " اسق يا زبير ثم ارسل الماء الى جارك ". فقال الانصاري يا رسول الله ان كان ابن عمتك فتلون وجهه ثم قال " اسق يا زبير ثم احبس الماء حتى يرجع الى الجدر، ثم ارسل الماء الى جارك ". واستوعى النبي صلى الله عليه وسلم للزبير حقه في صريح الحكم حين احفظه الانصاري، كان اشار عليهما بامر لهما فيه سعة. قال الزبير فما احسب هذه الايات الا نزلت في ذلك {فلا وربك لا يومنون حتى يحكموك فيما شجر بينهم}
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(இறுதியாக) நோயுற்றுவிடுகின்ற எந்த ஓர் இறைத்தூதருக்கும் உலக வாழ்வு - மறுமை வாழ்வு ஆகிய இரண்டில் விரும்பியதைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் வாய்ப்பு வழங்கப்படாமல் இருந்ததில்லை” என்று சொல்ல நான் கேட்டிருக்கிறேன். நபி (ஸல்) அவர்கள் எந்த நோயில் (உயிர்) கைப்பற்றப்பட்டார்களோ அந்த நோயின்போது அவர்களின் குரல் கடுமையாகக் (கட்டிக்கொண்டு) கம்மிப் போய்விட்டது. அப்போது அவர்கள், “அல்லாஹ் யார்மீது தன் அருட்கொடைகளைப் பொழிந்தானோ அந்த இறைத்தூதர்கள், உண்மையாளர்கள், உயிர்த் தியாகிகள், உத்தமர்களுடன் (என்னைச் சொர்க்கத்தில் சேர்த்தருள்)” என்று சொல்லிக் கொண்டிருந்ததை நான் கேட்டேன். (இதிலிருந்து) நபி (ஸல்) அவர்களுக்கும் (அந்த இறுதி) வாய்ப்பு வழங்கப்பட்டுவிட்டது என்பதை நான் அறிந்துகொண்டேன்.18 அத்தியாயம் :
حدثنا محمد بن عبد الله بن حوشب، حدثنا ابراهيم بن سعد، عن ابيه، عن عروة، عن عايشة رضى الله عنها قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول " ما من نبي يمرض الا خير بين الدنيا والاخرة ". وكان في شكواه الذي قبض فيه اخذته بحة شديدة فسمعته يقول {مع الذين انعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين} فعلمت انه خير
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நானும் என் தாயாரும் (மக்காவில் இஸ்லாத்தை ஏற்றிருந்த) ஒடுக்கப்பட்ட பலவீனமான பிரிவினரைச் சேர்ந்தவர் களாயிருந்தோம்.19 அத்தியாயம் :
حدثني عبد الله بن محمد، حدثنا سفيان، عن عبيد الله، قال سمعت ابن عباس، قال كنت انا وامي، من المستضعفين
இப்னு அபீமுளைக்கா (அப்துல்லாஹ் பின் அப்திர் ரஹ்மான்-ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “எந்த உத்தியையும் கையாள முடியாமல், எந்த வழியும் தெரியாமல் பலவீனமான நிலையில் இருக்கும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் ஆகியோரைத் தவிர” எனும் (4:98ஆவது) இறைவசனத்தை ஓதிவிட்டு, “(ஹிஜ்ரத் செய்ய இயலாததால்) அல்லாஹ் மன்னிப்பளித்த (பலவீனமான)வர்களில் நானும் என் தாயாரும் இருந்தோம்” என்று சொன்னார்கள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (4:90ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ஹஸிரத்' (மனம் ஒப்பாது) எனும் சொல்லுக்கு, “(அவர்களின் உள்ளங்கள் இடம் கொடுக்காமல்) குறுகிக்கொண்டன' என்பது பொருள். (4:135ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “தல்வூ' (தவறாகச் சாட்சியம் கூறினால்) எனும் சொல்லுக்கு, “நீங்கள் (உண்மைக்குப் புறம்பாகச்) சாட்சியம் சொல்ல நாக்கைச் சுழற்றினால்” என்பது பொருள். மற்றவர்கள் கூறுகின்றனர்: (4:100ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “முராஃகம்' எனும் சொல்லுக்கு “புலம்பெயரும் இடம்' (தஞ்சம் புகுமிடம்) என்று பொருள். (இதன் இறந்த கால வினைச் சொல்லான) “ராஃகம்த்து' எனும் சொல்லுக்கு, “நான் என் சமுதாயத்தைத் துறந்துவிட்டேன்” என்பது பொருள். (4:103ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “மவ்கூத்' எனும் சொல்லுக்கு “அவர்களுக்கு நேரம் குறிக்கப்பட்ட (கடமை)' என்பது பொருள். அத்தியாயம் :
حدثنا سليمان بن حرب، حدثنا حماد بن زيد، عن ايوب، عن ابن ابي مليكة، ان ابن عباس، تلا {لا المستضعفين من الرجال والنساء والولدان} قال كنت انا وامي ممن عذر الله. ويذكر عن ابن عباس {حصرت} ضاقت {تلووا} السنتكم بالشهادة. وقال غيره المراغم المهاجر. راغمت هاجرت قومي. {موقوتا} موقتا وقته عليهم
ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் 4:88ஆவது இறைவசனம் குறித்துக் கூறியதாவது: (உஹுத் போருக்காக) நபி (ஸல்) அவர்களுடன் (சென்று) இருந்தவர்களில் சிலர் (நயவஞ்சகர்கள்) உஹுதிலிருந்து (வழியிலேயே) திரும்பி வந்துவிட்டனர். இவர்கள் விஷயத்தில் (என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது தொடர்பாகக் கருத்து வேறுபாடு கொண்டு) மக்கள் இரு பிரிவினராக ஆகிவிட்டனர். ஒரு பிரிவினர், “(நயவஞ்சகர்களாகிய) அவர்களைக் கொன்றுவிடுங்கள் (அல்லாஹ்வின் தூதரே!)” என்று கூறினர். மற்றொரு பிரிவினர், “(வெளிப்படையில் முஸ்லிம்களாகிய அவர்களைக் கொல்ல) வேண்டாம்” என்று கூறினர். அப்போதுதான், “உங்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது? நயவஞ்சகர்கள் விஷயத்தில் இரு (வேறு கருத்துகள் கொண்ட) குழுவினராய் ஆகிவிட்டீர்களே! அல்லாஹ்வோ அவர்களை, அவர்கள் சம்பாதித்துக்கொண்ட (தீய)வற்றின் காரணத்தால் தலைகுனியச் செய்துவிட்டான்” எனும் (4:88ஆவது) இறைவசனம் அருளப்பெற்றது. மேலும், நபி (ஸல்) அவர்கள், “மதீனா தூய்மையானது; நெருப்பு, வெள்ளியின் அழுக்கை நீக்கிவிடுவதைப் போல் அது தீமையை அகற்றிவிடும்” என்றுசொன்னார்கள்.20 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அமைதியளிக்கக்கூடிய அல்லது அச்சம் தரக்கூடிய ஏதேனும் செய்தி அவர்களிடம் வந்தால் அதை அவர்கள் பரப்பிவிடுகிறார்கள். ஆனால், அதைத் தூதரிடமும் அவர்களில் பொறுப்புள்ளவர்களிடமும் தெரிவித்திருப்பார் களாயின், நுணுகி ஆராயும் திறனுடையவர்கள் அ(ச்செய்தியின் உண்மை நிலை)தனை நன்கு அறிந்திருப்பார்கள் (எனும் 4:83ஆவது வசனத்தொடர்). (இந்த வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) “அஃதாஊ' எனும் சொல்லுக்கு “பரப்பிவிடுவார்கள்' என்பது பொருள். “யஸ்தன்பித்தூன' எனும் சொல்லுக்கு “ஆராய்ந்து முடிவு செய்கிறார்கள்' என்பது பொருள். (4:86ஆவது வசனத்தின் மூலத்தி லுள்ள) “ஹசீப்' எனும் சொல்லுக்கு “போதுமானவன்' என்பது பொருள். (4:117ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “இனாஸ்' எனும் சொல் கல், மண் போன்ற உயிரற்ற பொருட்களைக் குறிக்கும். “மரீத்' எனும் சொல்லுக்கு “(தீமையில்) பிடிவாதமாக இருப்பவன்' என்பது பொருள். (4:119ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ஃபலயுபத்திகுன்ன' எனும் சொற்றொடருக்கு “அவர்கள் (தம் கால்நடைகளின் காதுகளைக்) கிழித்துத் துண்டிப்பார்கள்” என்பது பொருள். (4:122ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “கீல்' எனும் பதமும் “கவ்ல்' எனும் பதமும் (பேச்சு, சொல் எனும்) ஒரே பொருள் கொண்டவை ஆகும். (4:155ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள “தபஅ' எனும் சொல்லின் செயப்பாட்டு வினைச்சொல்லான) “துபிஅ' எனும் சொல்லுக்கு “முத்திரையிடப்பட்டது' என்பது பொருள். அத்தியாயம் :
حدثني محمد بن بشار، حدثنا غندر، وعبد الرحمن، قالا حدثنا شعبة، عن عدي، عن عبد الله بن يزيد، عن زيد بن ثابت رضى الله عنه {فما لكم في المنافقين فيتين} رجع ناس من اصحاب النبي صلى الله عليه وسلم من احد، وكان الناس فيهم فرقتين فريق يقول اقتلهم. وفريق يقول لا فنزلت {فما لكم في المنافقين فيتين} وقال " انها طيبة تنفي الخبث كما تنفي النار خبث الفضة
சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இது (4:93ஆவது வசனம், இராக்கைச் சேர்ந்த) கூஃபாவாசிகள் (அதன் சட்டம் மாற்றப்பட்டுவிட்டதா இல்லையா என்பது தொடர்பாகக்) கருத்து வேறுபாடு கொண்டிருந்த வசனமாகும். நான் இந்த வசனம் குறித்து விளக்கம் கேட்பதற்காக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் சென்று அதைப் பற்றிக் கேட்டேன். அவர்கள், “ஓர் இறைநம்பிக்கை யாளரை வேண்டுமென்றே கொலை செய்கின்றவனுக்குரிய தண்டனை நரகமேயாகும்” எனும் இந்த (4:93ஆவது) வசனம் அருளப்பெற்றது. இதுதான் (இறைநம்பிக்கையாளரைக் கொலை செய்யும் குற்றம் தொடர்பாக) இறங்கிய கடைசி வசனமாகும்; இதை எதுவும் காலாவதியாக்கவில்லை” என்று கூறினார்கள்.21 அத்தியாயம் :
حدثنا ادم بن ابي اياس، حدثنا شعبة، حدثنا مغيرة بن النعمان، قال سمعت سعيد بن جبير، قال {اية} اختلف فيها اهل الكوفة، فرحلت فيها الى ابن عباس فسالته عنها فقال نزلت هذه الاية {ومن يقتل مومنا متعمدا فجزاوه جهنم} هي اخر ما نزل وما نسخها شىء
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் 4:94ஆவது வசனம் குறித்துக் கூறியதாவது: ஒரு மனிதர் தமது சிறு ஆட்டு மந்தை(யை மேய்த்துக்கொண்டு அதன்) உடனிருந்தார். அப்போது (ஒரு படைப் பிரிவில் வந்த) முஸ்லிம்கள் அவரை (வழியில்) கண்டனர். அவர், “அஸ்ஸலாமு அலைக்கும்” (உங்கள்மீது சாந்தி உண்டாகட்டும்) என்று கூறினார். அவர்கள் அவரைக் கொன்றுவிட்டனர். அவரது ஆட்டுமந்தையையும் எடுத்துக்கொண்டனர். அப்போது இது தொடர்பாக (பின்வரும்) வசனத்தை அல்லாஹ் அருளினான். இறைநம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் இறைவழியில் (அறப்போருக் காக) புறப்படுவீர்களாயின் (பகைவரையும் நண்பரையும்) தெளிவாகப் பிரித்தறிந்துகொள்ளுங்கள். இவ்வுலகப் பொருளை நீங்கள் அடைய விரும்பி, (தம்மை இறைநம்பிக்கையாளர் என்று காட்ட) உங்களுக்கு முகமன் (சலாம்) கூறியவரிடம், நீர் இறைநம்பிக்கையாளர் அல்லர் என்று சொல்லாதீர்கள். (4:94) (இங்கே “உலகப் பொருள்' என்பது) அந்த ஆட்டு மந்தைதான்.22 அறிவிப்பாளர் அதாஉ பின் அபீ ரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், (இந்த வசனத்தில் “சலாம்' எனும் வார்த்தையை) சலாம் என்றே ஓதினார்கள். (சலம் என்று உச்சரிக்கவில்லை.) அத்தியாயம் :
حدثني علي بن عبد الله، حدثنا سفيان، عن عمرو، عن عطاء، عن ابن عباس رضى الله عنهما {ولا تقولوا لمن القى اليكم السلام لست مومنا}. قال قال ابن عباس كان رجل في غنيمة له فلحقه المسلمون فقال السلام عليكم، فقتلوه واخذوا غنيمته، فانزل الله في ذلك الى قوله {عرض الحياة الدنيا} تلك الغنيمة. قال قرا ابن عباس السلام
சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் மர்வான் பின் அல்ஹகமைப் பள்ளிவாசலில் பார்த்தேன். அவரை நோக்கிச் சென்று அவருக்குப் பக்கத்தில் அமர்ந்துகொண்டேன். அப்போது அவர், ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) தமக்குத் தெரிவித்ததாக எங்களிடம் கூறினார்: “இறைநம்பிக்கையாளர்களில் அறப்போரில் கலந்துகொள்ளாமல் இருந்துவிட்டவர்களும், தம் உயிராலும் பொருளாலும் அல்லாஹ்வின் வழியில் அறப்போர் புரிந்தவர்களும் சமமாகமாட்டார்கள்” எனும் (4:95ஆவது) வசனத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (நான் எழுதிப் பதிவு செய்வதற்காக) என்னிடம் ஓதிக்காட்டிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் என்னிடம் ஓதிக்காட்டிக்கொண்டிருக்கும்போது, இப்னு உம்மி மக்த்தூம் (ரலி) அவர்கள் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீதாணையாக, என்னால் அறப்போர் புரிய முடிந்திருந்தால் அறப்போர் புரிந் திருப்பேன்” என்று சொன்னார்கள். அவர் கண்பார்வையற்றவராக இருந்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தொடை என் தொடை மீதிருக்க, அவர்கள்மீது அல்லாஹ் (வேத அறிவிப்பை) அருளினான். ஆகவே, என் தொடை நசுங்கிப்போய்விடுமோ என்று நான் அஞ்சும் அளவுக்கு நபி (ஸல்) அவர்களின் தொடை என்மீது கனத்து (அழுத்தத் தொடங்கி)விட்டது. பிறகு அந்நிலை அகன்றது. அப்போதுதான் அல்லாஹ் “இடையூறு உள்ளவர்கள் தவிர' எனும் சொற்றொடரை (மேற்கண்ட வசனத்துடன் சேர்த்து) அருளியிருந்தான்.23 அத்தியாயம் :
حدثنا اسماعيل بن عبد الله، قال حدثني ابراهيم بن سعد، عن صالح بن كيسان، عن ابن شهاب، قال حدثني سهل بن سعد الساعدي، انه راى مروان بن الحكم في المسجد، فاقبلت حتى جلست الى جنبه، فاخبرنا ان زيد بن ثابت اخبره ان رسول الله صلى الله عليه وسلم املى عليه لا يستوي القاعدون من المومنين والمجاهدون في سبيل الله فجاءه ابن ام مكتوم وهو يملها على قال يا رسول الله، والله لو استطيع الجهاد لجاهدت وكان اعمى فانزل الله على رسوله صلى الله عليه وسلم وفخذه على فخذي، فثقلت على حتى خفت ان ترض فخذي، ثم سري عنه، فانزل الله {غير اولي الضرر}
பராஉ (ரலி) அவர்கள் கூறியதாவது: “இறைநம்பிக்கையாளர்களில் அறப்போரில் கலந்துகொள்ளாமல் இருந்து விட்டவர்களும், தம் உயிராலும் பொருளாலும் அல்லாஹ்வின் வழியில் அறப் போர் புரிந்தவர்களும் சமமாகமாட்டார்கள்” எனும் (4:95ஆவது) இறைவசனம் அருளப்பெற்றபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்களை அழைக்க, அவர் (வந்து) அதை எழுதினார். அப்போது இப்னு உம்மி மக்த்தூம் (ரலி) அவர்கள் வந்து தமது ஊனத்தைப் பற்றி முறையிட்டார். அப்போதுதான் அல்லாஹ், “இடையூறு உள்ளவர்கள் தவிர' எனும் சொற்றொடரை அருளினான்.24 அத்தியாயம் :
حدثنا حفص بن عمر، حدثنا شعبة، عن ابي اسحاق، عن البراء رضى الله عنه قال لما نزلت {لا يستوي القاعدون من المومنين} دعا رسول الله صلى الله عليه وسلم زيدا فكتبها، فجاء ابن ام مكتوم فشكا ضرارته، فانزل الله {غير اولي الضرر}
حدثني محمد بن عبد العزيز، حدثنا ابو عمر، حفص بن ميسرة عن زيد بن اسلم، عن عطاء بن يسار، عن ابي سعيد الخدري رضى الله عنه ان اناسا في زمن النبي صلى الله عليه وسلم قالوا يا رسول الله، هل نرى ربنا يوم القيامة قال النبي صلى الله عليه وسلم " نعم، هل تضارون في روية الشمس بالظهيرة، ضوء ليس فيها سحاب ". قالوا لا. قال " وهل تضارون في روية القمر ليلة البدر، ضوء ليس فيها سحاب ". قالوا لا. قال النبي صلى الله عليه وسلم " ما تضارون في روية الله عز وجل يوم القيامة، الا كما تضارون في روية احدهما، اذا كان يوم القيامة اذن موذن تتبع كل امة ما كانت تعبد. فلا يبقى من كان يعبد غير الله من الاصنام والانصاب الا يتساقطون في النار، حتى اذا لم يبق الا من كان يعبد الله، بر او فاجر وغبرات اهل الكتاب، فيدعى اليهود فيقال لهم من كنتم تعبدون قالوا كنا نعبد عزير ابن الله. فيقال لهم كذبتم، ما اتخذ الله من صاحبة ولا ولد، فماذا تبغون فقالوا عطشنا ربنا فاسقنا. فيشار الا تردون، فيحشرون الى النار كانها سراب، يحطم بعضها بعضا فيتساقطون في النار، ثم يدعى النصارى، فيقال لهم من كنتم تعبدون قالوا كنا نعبد المسيح ابن الله. فيقال لهم كذبتم، ما اتخذ الله من صاحبة ولا ولد. فيقال لهم ماذا تبغون فكذلك مثل الاول، حتى اذا لم يبق الا من كان يعبد الله من بر او فاجر، اتاهم رب العالمين في ادنى صورة من التي راوه فيها، فيقال ماذا تنتظرون تتبع كل امة ما كانت تعبد. قالوا فارقنا الناس في الدنيا على افقر ما كنا اليهم، ولم نصاحبهم، ونحن ننتظر ربنا الذي كنا نعبد. فيقول انا ربكم، فيقولون لا نشرك بالله شييا. مرتين او ثلاثا