Loading...

Loading...
நூல்கள்
௧௧௩ ஹதீஸ்கள்
மைமூனா (பின்த் ஹாரிஸ்-ர-) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நெய்யில் விழுந்துவிட்ட எ- குறித்து வினவப்பட்டது. அதற்கு “அந்த எ-யையும் அதைச் சுற்றியுள்ள நெய்யையும் (உடனே) எடுத்து எறிந்து விடுங்கள்; உங்கள் நெய்யைச் சாப்பிடுங் கள்” என்று அவர்கள் பதிலளித்தார்கள். அத்தியாயம் :
حدثنا اسماعيل، قال حدثني مالك، عن ابن شهاب، عن عبيد الله بن عبد الله، عن ابن عباس، عن ميمونة، ان رسول الله صلى الله عليه وسلم سيل عن فارة سقطت في سمن فقال " القوها وما حولها فاطرحوه. وكلوا سمنكم
மைமூனா (ரலி) அவர்கள் கூறியதாவது: நெய்யில் விழுந்துவிட்ட எலியைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் வினவப் பட்டது. அதற்கு அவர்கள், “அந்த எ-யையும் அதைச் சுற்றியுள்ள நெய்யையும் எடுத்து (உடனே) எறிந்துவிடுங்கள் (மீதி நெய்யைச் சாப்பிடுங்கள்)” என்று பதிலளித் தார்கள். மஅன் (பின் ஈசா-ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இந்த ஹதீஸை மா-க் (ரஹ்) அவர்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் வழியாக மைமூனா (ரலி) அவர்களிடமிருந்து எண்ணற்ற முறை எமக்கு அறிவித்துள்ளார்கள். அத்தியாயம் :
حدثنا علي بن عبد الله، قال حدثنا معن، قال حدثنا مالك، عن ابن شهاب، عن عبيد الله بن عبد الله بن عتبة بن مسعود، عن ابن عباس، عن ميمونة، ان النبي صلى الله عليه وسلم سيل عن فارة سقطت في سمن فقال " خذوها وما حولها فاطرحوه ". قال معن حدثنا مالك ما لا احصيه يقول عن ابن عباس عن ميمونة
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் பாதையில் ஒரு முஸ்-முக்கு ஏற்படுத்தப்பட்ட ஒவ்வொரு காயமும், தாக்கப்பட்டபோது இருந்த அதே கோலத்தைப் போன்றே மறுமை நாளில் இரத்தம் பீறிட்ட நிலையில் இருக்கும். அந்த நிறம் இரத்தத்தின் நிறத்தில் இருக்கும்; அதன் வாடையோ கஸ்தூரி வாடையாக இருக்கும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا احمد بن محمد، قال اخبرنا عبد الله، قال اخبرنا معمر، عن همام بن منبه، عن ابي هريرة، عن النبي صلى الله عليه وسلم قال " كل كلم يكلمه المسلم في سبيل الله يكون يوم القيامة كهييتها اذ طعنت، تفجر دما، اللون لون الدم، والعرف عرف المسك
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நாம் (காலத்தால்) பிந்தியவர்களாகவும் (மறுமையில் தகுதியால்) முந்தியவர் களாகவும் உள்ளோம். அத்தியாயம் :
حدثنا ابو اليمان، قال اخبرنا شعيب، قال اخبرنا ابو الزناد، ان عبد الرحمن بن هرمز الاعرج، حدثه انه، سمع ابا هريرة، انه سمع رسول الله صلى الله عليه وسلم يقول " نحن الاخرون السابقون
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஓடாமல் தேங்கி நிற்கும் தண்ணீரில் உங்களில் யாரும் சிறுநீர் கழிக்கவும் வேண்டாம்; பின்னர் அதில் குளிக்கவும் வேண்டாம். மேற்கண்ட இரு ஹதீஸ்களையும் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக் கிறார்கள். அத்தியாயம் :
وباسناده قال " لا يبولن احدكم في الماء الدايم الذي لا يجري، ثم يغتسل فيه
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு நாள்) நபி (ஸல்) அவர்கள் இறையில்லம் (கஅபா) அருகில் தொழுது கொண்டிருந்தார்கள். அப்போது அபூ ஜஹ்லும் அவனுடைய சகாக்களும் (அங்கே) அமர்ந்திருந்தனர். அவர்களில் சிலர் சிலரிடம், “இறைச்சிக்காக அறுக்கப் பட்ட இன்ன குடும்பத்தாரின் ஒட்டகக் கருவைச் சுற்றியுள்ள சவ்வைக் கொண்டு வந்து முஹம்மத் சிரவணக்கம் (சஜ்தா) செய்யும்போது அவரது முதுகின் மீது வைப்பவர் யார்?” என்று கேட்டனர். அக்கூட்டத்திலேயே படுபாதகனாயிருந்த ஒருவன் புறப்பட்டுச் சென்று, அதைக் கொண்டு வந்து, நபி (ஸல்) அவர்கள் சிரவணக்கம் (சஜ்தா) செய்யும் நேரம் பார்த்து அவர்களின் இரு தோள்களுக்கிடையில் முதுகின் மீது போட்டான். இதையெல்லாம் நான் பார்த்துக்கொண்டுதான் இருந்தேன். என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. அப்போது எனக்கு (மட்டும்) உதவக் கூடியவர்கள் இருந்திருந்தால் (அதை நான் தடுத்திருப்பேன்.) இந்நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டி ருந்த (அபூஜஹ்லும் சகாக்களும்) ஒருவர்மீது ஒருவர் விழுந்து சிரிக்கத் தொடங்கினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தலையை உயர்த்தாமல் சஜ்தாவிலேயே இருந்தார்கள். (நபி (ஸல்) அவர்களின் புதல்வி, சிறுமி) ஃபாத்திமா (ரலி) அவர்கள் வந்து, அவர்களின் முதுகி-ருந்து அவற்றைத் தூக்கி வீசும் வரையில் (அப்படியே இருந்தார்கள்). பிறகு தமது தலையை உயர்த்தி, “இறைவா! குறைஷியரை நீ கவனித்துக் கொள்” என்று மூன்று முறை பிராத்தித் தார்கள். தங்களுக்கெதிராக நபி (ஸல்) அவர்கள் பிராத்தனை புரிந்தது குறைஷி யருக்கு மனவேதனை அளித்தது. (காரணம்,) அந்த (மக்கா) நகரில் செய்யப் படும் பிராத்தனை ஏற்கப்படும் என்று அவர்களும் நம்பிக்கை வைத்திருந்தனர். பிறகு நபி (ஸல்) அவர்கள் (அங்கிருந் தோரின்) பெயர்களைக் குறிப்பிட்டு, “இறைவா! அபூஜஹ்லை நீ கவனித்துக் கொள்வாயாக! உத்பா பின் ரபீஆ, ஷைபா பின் ரபீஆ, வலீத் பின் உத்பா, உமய்யா பின் கலஃப், உக்பா பின் அபீமுஐத் ஆகியோரைக் கவனித்துக்கொள்வாயாக!” என்று (அறுவரின் பெயர் குறிப்பிட்டு) பிரார்த்தனை செய்தார்கள். அறிவிப்பாளர்களில் ஒருவர் குறிப்பிடுகிறார்: ஏழாவது நபரின் பெயரையும் நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். ஆனால், அதை நாங்கள் மறந்துவிட்டோம். தொடர்ந்து அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள்: என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட நபர்கள் (பத்ர் போரில்) கொல்லப்பட்டு ‘கலீபு பத்ர்’ எனும் அந்தப் பாழும் கிணற்றில் கிடந்ததை நான் பார்த்தேன். அத்தியாயம் :
حدثنا عبدان، قال اخبرني ابي، عن شعبة، عن ابي اسحاق، عن عمرو بن ميمون، عن عبد الله، قال بينا رسول الله صلى الله عليه وسلم ساجد ح قال وحدثني احمد بن عثمان قال حدثنا شريح بن مسلمة قال حدثنا ابراهيم بن يوسف عن ابيه عن ابي اسحاق قال حدثني عمرو بن ميمون ان عبد الله بن مسعود حدثه ان النبي صلى الله عليه وسلم كان يصلي عند البيت، وابو جهل واصحاب له جلوس، اذ قال بعضهم لبعض ايكم يجيء بسلى جزور بني فلان فيضعه على ظهر محمد اذا سجد فانبعث اشقى القوم فجاء به، فنظر حتى اذا سجد النبي صلى الله عليه وسلم وضعه على ظهره بين كتفيه وانا انظر، لا اغير شييا، لو كان لي منعة. قال فجعلوا يضحكون ويحيل بعضهم على بعض، ورسول الله صلى الله عليه وسلم ساجد لا يرفع راسه، حتى جاءته فاطمة، فطرحت عن ظهره، فرفع راسه ثم قال " اللهم عليك بقريش ". ثلاث مرات، فشق عليهم اذ دعا عليهم قال وكانوا يرون ان الدعوة في ذلك البلد مستجابة ثم سمى " اللهم عليك بابي جهل، وعليك بعتبة بن ربيعة، وشيبة بن ربيعة، والوليد بن عتبة، وامية بن خلف، وعقبة بن ابي معيط ". وعد السابع فلم يحفظه قال فوالذي نفسي بيده، لقد رايت الذين عد رسول الله صلى الله عليه وسلم صرعى في القليب قليب بدر
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் தமது ஆடையில் உமிழ்ந்தார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் சயீத் பின் அபீமர்யம் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் இந்த ஹதீஸ் நீளமாக இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
حدثنا محمد بن يوسف، قال حدثنا سفيان، عن حميد، عن انس، قال بزق النبي صلى الله عليه وسلم في ثوبه. طوله ابن ابي مريم قال اخبرنا يحيى بن ايوب حدثني حميد قال سمعت انسا عن النبي صلى الله عليه وسلم
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: போதை தரும் (தன்மை உள்ள) எல்லாப் பானங்களும் தடை செய்யப் பட்டவை ஆகும். இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا علي بن عبد الله، قال حدثنا سفيان، قال حدثنا الزهري، عن ابي سلمة، عن عايشة، عن النبي صلى الله عليه وسلم قال " كل شراب اسكر فهو حرام
அபூஹாஸிம் (சலமா பின் தீனார்-ரஹ்) அவர்கள் கூறியதாவது: சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்களிடம், “(உஹுதுப் போரில்) நபி (ஸல்) அவர்களின் காயத்திற்கு எது மருந்தாக இடப்பட்டது?” என்று மக்கள் கேட்டார்கள். அப்போது எனக்கும் (அறிவிப்பாளர் அபுல்ஆலியா) சஹ்ல் (ரலி) அவர்களுக்கும் இடையில் வேறு யாரும் இருக்கவில்லை (அந்த அளவுக்கு நெருக்கமாக நாங்கள் இருவரும் இருந்தோம்.)- அதற்கு சஹ்ல் (ரலி) அவர்கள், “இதைப் பற்றி என்னைவிட அறிந்தவர்கள் தற்போது யாரும் இல்லை. அலீ (ரலி) அவர்கள் தமது கேடயத்தில் தண்ணீர் கொண்டுவர, ஃபாத்திமா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் முகத்தி-ருந்து இரத்தத்தைக் கழுவிக்கெண்டிருந்தார்கள். (கட்டுக் கடங்காமல் இரத்தம் வழியவே ஒரு ஈச்சம்) பாய் எடுத்துக் கரிக்கப்பட்டது. (பிறகு கரிக்கப்பட்ட) பாயி(ன் சாம்ப-)னை நபியவர்களின் காயத்தில் வைத்து அழுத்தப்பட்டது” என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :
حدثنا محمد، قال اخبرنا سفيان بن عيينة، عن ابي حازم، سمع سهل بن سعد الساعدي،، وساله الناس، وما بيني وبينه احد باى شىء دووي جرح النبي صلى الله عليه وسلم فقال ما بقي احد اعلم به مني، كان علي يجيء بترسه فيه ماء، وفاطمة تغسل عن وجهه الدم، فاخذ حصير فاحرق فحشي به جرحه
அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்றபோது, அவர்கள் தமது கையி-ருந்த ஒரு குச்சியால் பல் துலக்கிக்கொண்டிருப்பதைக் கண்டேன். அப்போது அவர்கள் தமது வாயில் குச்சியை வைத்து வாந்தி எடுப்பதைப் போன்று ‘ஊவ் ஊவ்’ என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். அத்தியாயம் :
حدثنا ابو النعمان، قال حدثنا حماد بن زيد، عن غيلان بن جرير، عن ابي بردة، عن ابيه، قال اتيت النبي صلى الله عليه وسلم فوجدته يستن بسواك بيده يقول " اع اع "، والسواك في فيه، كانه يتهوع
ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் இரவில் (உறங்கி) எழுந்ததும் பல் துலக்கு(ம் குச்சியால் தமது வாயைக் கழுவி சுத்தம் செய்)வார்கள். அத்தியாயம் :
حدثنا عثمان، قال حدثنا جرير، عن منصور، عن ابي وايل، عن حذيفة، قال كان النبي صلى الله عليه وسلم اذا قام من الليل يشوص فاه بالسواك
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் ஒரு குச்சியால் பல் துலக்கிக் கொண்டிருப்பதைப் போன்று (கனவு) கண்டேன். அப்போது என்னிடம் இரு மனிதர்கள் வந்தனர். அவ்விருவரில் ஒருவர் மற்றவரைவிட (வயதில்) பெரிய வராயிருந்தார். நான் அவ்விருவரில் வயதில் சிறியவரிடம் அந்தப் பல் துலக்கும் குச்சியைக் கொடுத்தேன். அப்போது “வயதில் மூத்தவரிடம் முதலில் கொடுப்பீ ராக” என்று எனக்குச் சொல்லப்பட்டது. உடனே அவ்விருவரில் வயதில் பெரிய வரிடம் அதைக் கொடுத்து விட்டேன். இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அபூஅப்தில்லாஹ் (புகாரீயாகிய நான்) கூறுகிறேன்: மற்றோர் அறிவிப்பில், நுஐம் (பின் ஹம்மாத்-ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸின் மூல உரையை இப்னு உமர் (ரலி) அவர்கள் வாயிலாகச் சுருக்கமாக அறிவித்துள்ளார்கள். அத்தியாயம் :
وقال عفان حدثنا صخر بن جويرية، عن نافع، عن ابن عمر، ان النبي صلى الله عليه وسلم قال " اراني اتسوك بسواك، فجاءني رجلان احدهما اكبر من الاخر، فناولت السواك الاصغر منهما، فقيل لي كبر. فدفعته الى الاكبر منهما ". قال ابو عبد الله اختصره نعيم عن ابن المبارك عن اسامة عن نافع عن ابن عمر
பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: (என்னிடம்) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீர் உமது படுக்கைக்குச் செல்லும்போது தொழுகைக்காக அங்கத் தூய்மை செய்வதைப் போன்று அங்கத் தூய்மை செய்துகொள்வீராக. பிறகு உமது வலப்பக்கமாக சாய்ந்து படுத்துக் கொள்வீராக. பிறகு பின்வருமாறு கூறுவீராக: அல்லாஹும்ம! அஸ்லம்(த்)து வஜ்ஹீ இலை(க்)க; வ ஃபவ்வள்(த்)து அம்ரீ இலை(க்)க; வ அல்ஜஃ(த்)து ழஹ்ரீ இலை(க்)க ரஃக்ப(த்)தன் வ ரஹ்ப(த்)தன் இலை(க்)க; லா மல்ஜஅ வலா மன்ஜா மின்(க்)க இல்லா இலை(க்)க. அல்லா ஹும்ம ஆமன்(த்)து பி கிதாபி(க்)கல்லதீ அன்ஸல்(த்)த; வ பி நபிய்ய(க்)கல்லதீ அர்சல்(த்)த. இறைவா! உன்னிடம் நான் என்னை ஒப்படைத்தேன். எனது காரியத்தை உன்னிடமே ஒப்படைத்தேன். என் விவகாரங்கள் அனைத்திலும் உன்னையே சார்ந்திருக்கிறேன். உன்மீதுள்ள ஆவ-லும் அச்சத்திலும்தான் (இவற்றை நான் செய்தேன்). உன்னிடமிருந்து தப்பிக்கவும் ஒதுங்கிடவும் உன்னைத் தவிர வேறு போக்கிடமில்லை. நீ அருளிய உனது வேதத்தையும் நீ அனுப்பிவைத்த உன் தூதரையும் நான் நம்பினேன்”. (இவ்வாறு பிரார்த்தனை செய்துவிட்டு உறங்கி) அந்த இரவில் நீர் இறந்துவிட்டால் நீர் (இஸ்லாம் எனும்) இயற்கை மரபில் இறந்தவராவீர். இந்தப் பிராத்தனையை உமது (இரவின்) இறுதிப் பேச்சாக ஆக்கிக்கொள்வீராக! இந்த நபிமொழியின் அறிவிப்பாளரான பராஉ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நான் நபி (ஸல்) அவர்களிடம் இந்தப் பிரார்த்தனையைத் திரும்பச் சொல்லிக் காட்டினேன். “இறைவா! நீ அருளிய உனது வேதத்தையும் நீ அனுப்பிவைத்த தூதரையும் நான் நம்பினேன்” என்று கூறியபோது, (தூதர் என்பதைக் குறிக்க) ‘வ ரசூலிக்க’ என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், “இல்லை ‘வ நபிய்யிக்க’ என்றே குறிப்பிடுவீராக” என்றார்கள். அத்தியாயம் :
حدثنا محمد بن مقاتل، قال اخبرنا عبد الله، قال اخبرنا سفيان، عن منصور، عن سعد بن عبيدة، عن البراء بن عازب، قال قال النبي صلى الله عليه وسلم " اذا اتيت مضجعك فتوضا وضوءك للصلاة، ثم اضطجع على شقك الايمن، ثم قل اللهم اسلمت وجهي اليك، وفوضت امري اليك، والجات ظهري اليك، رغبة ورهبة اليك، لا ملجا ولا منجا منك الا اليك، اللهم امنت بكتابك الذي انزلت، وبنبيك الذي ارسلت. فان مت من ليلتك فانت على الفطرة، واجعلهن اخر ما تتكلم به ". قال فرددتها على النبي صلى الله عليه وسلم فلما بلغت " اللهم امنت بكتابك الذي انزلت ". قلت ورسولك. قال " لا، ونبيك الذي ارسلت