ஹதீஸ்கள்
#243
ஸஹீஹ் அல்-புகாரீ - Ablutions (Wudu')
அபூஹாஸிம் (சலமா பின் தீனார்-ரஹ்) அவர்கள் கூறியதாவது: சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்களிடம், “(உஹுதுப் போரில்) நபி (ஸல்) அவர்களின் காயத்திற்கு எது மருந்தாக இடப்பட்டது?” என்று மக்கள் கேட்டார்கள். அப்போது எனக்கும் (அறிவிப்பாளர் அபுல்ஆலியா) சஹ்ல் (ரலி) அவர்களுக்கும் இடையில் வேறு யாரும் இருக்கவில்லை (அந்த அளவுக்கு நெருக்கமாக நாங்கள் இருவரும் இருந்தோம்.)- அதற்கு சஹ்ல் (ரலி) அவர்கள், “இதைப் பற்றி என்னைவிட அறிந்தவர்கள் தற்போது யாரும் இல்லை. அலீ (ரலி) அவர்கள் தமது கேடயத்தில் தண்ணீர் கொண்டுவர, ஃபாத்திமா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் முகத்தி-ருந்து இரத்தத்தைக் கழுவிக்கெண்டிருந்தார்கள். (கட்டுக் கடங்காமல் இரத்தம் வழியவே ஒரு ஈச்சம்) பாய் எடுத்துக் கரிக்கப்பட்டது. (பிறகு கரிக்கப்பட்ட) பாயி(ன் சாம்ப-)னை நபியவர்களின் காயத்தில் வைத்து அழுத்தப்பட்டது” என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Ablutions (Wudu')
- Hadith Index
- #243
- Book Index
- 109
Grades
- -