ஹதீஸ்கள்
#7553
ஸஹீஹ் முஸ்லிம் - Commentary on the Qur'an
ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (நயவஞ்சகர்களின் தலைவன்) அப்துல்லாஹ் பின் உபை பின் சலூலிடம் "முசைக்கா", "உமைமா" எனப்படும் இரு அடிமைப் பெண்கள் இருந்தனர். அவன் அவ்விருவரையும் நிர்பந்தித்து விபசாரத்தில் ஈடுபடுத்திவந்தான். அவ்விரு (அடிமைப்) பெண்களும் நபி (ஸல்) அவர்களிடம் (வந்து) அதைப் பற்றி முறையிட்டனர். அப்போதுதான், "உங்கள் பெண்களை விபசாரத்திற்கு நிர்பந்திக்காதீர்கள்" என்று தொடங்கி, "மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்" (24:33)என்பது வரை அல்லாஹ் அருளினான். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Commentary on the Qur'an
- Hadith Index
- #7553
- Book Index
- 31
Grades
- -