ஹதீஸ்கள்
#7552
ஸஹீஹ் முஸ்லிம் - Commentary on the Qur'an
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (நயவஞ்சகர்களின் தலைவன்) அப்துல் லாஹ் பின் உபை பின் சலூல், தன் அடிமைப் பெண்ணிடம், "நீ சென்று விபசாரத்தில் ஈடுபட்டு எதையேனும் ஈட்டி வா" என்று சொன்னான். அப்போதுதான் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், "கற்பொழுக்கம் நாடும் உங்கள் பெண்களை இவ்வுலக வாழ்க்கையின் சாதனங்களைப் பெறுவதற்காக விபசாரத்துக்கு நிர்பந்திக்காதீர்கள். யாரேனும் அவர்களை நிர்பந்தித்தால் நிர்பந்திக்கப்பட்ட அப்பெண்களை அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்" (24:33) எனும் வசனத்தை அருளினான். - இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا ابو بكر بن ابي شيبة، وابو كريب جميعا عن ابي معاوية، - واللفظ لابي كريب - حدثنا ابو معاوية، حدثنا الاعمش، عن ابي سفيان، عن جابر، قال كان عبد الله بن ابى ابن سلول يقول لجارية له اذهبي فابغينا شييا فانزل الله عز وجل { ولا تكرهوا فتياتكم على البغاء ان اردن تحصنا لتبتغوا عرض الحياة الدنيا ومن يكرههن فان الله من بعد اكراههن} لهن { غفور رحيم}
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Commentary on the Qur'an
- Hadith Index
- #7552
- Book Index
- 30
Grades
- -
