ஹதீஸ்கள்
#7549
ஸஹீஹ் முஸ்லிம் - Commentary on the Qur'an
பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: (அறியாமைக் காலத்தில்) அன்சாரிகள் "ஹஜ்" செய்(ய "இஹ்ராம்" கட்டி முடித்)துவிட்டு, மீண்டும் (வீட்டுக்கு) வருவதானால், வீடுகளில் அதன் (முன்பக்க வாசல் வழியாக நுழையாமல்) பின்பக்க வாசல் வழியேதான் நுழைவார்கள்.இந்நிலையில் அன்சாரிகளில் ஒருவர் தமது (வீட்டின்) முன்வாசல் வழியாகவே நுழைந்துவிட்டார். இது குறித்து அவரிடம் (ஆட்சேபணை) கூறப்பட்டது. அப்போதுதான், "நீங்கள் வீடுகளுக்குள் அவற்றின் பின்புற வழியாக வருவது புண்ணியமன்று" (2:189) எனும் இறைவசனத்தொடர் அருளப்பெற்றது. இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا ابو بكر بن ابي شيبة، حدثنا غندر، عن شعبة، ح وحدثنا محمد بن المثنى، وابن بشار - واللفظ لابن المثنى - قالا حدثنا محمد بن جعفر، عن شعبة، عن ابي اسحاق، قال سمعت البراء، يقول كانت الانصار اذا حجوا فرجعوا لم يدخلوا البيوت الا من ظهورها - قال - فجاء رجل من الانصار فدخل من بابه فقيل له في ذلك فنزلت هذه الاية {وليس البر بان تاتوا البيوت من ظهورها}
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Commentary on the Qur'an
- Hadith Index
- #7549
- Book Index
- 27
Grades
- -
