ஹதீஸ்கள்
#7466
ஸஹீஹ் முஸ்லிம் - Zuhd and Softening of Hearts
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (தபூக் பயணத்தில்) மக்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் "ஸமூத்" கூட்டத்தார் வாழ்ந்த பகுதியான "ஹிஜ்ர்" பிரதேசத்தில் இறங்கி, அங்கிருந்த கிணறுகளில் நீரிறைத்தார்கள். அதைக் கொண்டு மாவு குழைத்தார்கள். அப்போது அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இறைத்த நீரைக் கொட்டி விடுமாறும், (அந்தத் தண்ணீரால்) குழைக்கப்பட்ட அந்த மாவை ஒட்டகங்களுக்குத் தீனியாகப் போட்டுவிடுமாறும் உத்தரவிட்டார்கள். மேலும், (ஸாலிஹ் நபியின்) ஒட்டகம் வந்து நீரருந்திய கிணற்றிலிருந்து நீரிறைத்துக் கொள்ளுமாறு உத்தரவிட்டார்கள். - மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. ஆயினும் அதில், ("கிணறுகளிலிருந்து" என்பதைக் குறிக்க "ஆபார்" என்பதற்குப் பதிலாக) "பிஆர்" என்ற சொல்லும், ("குழைத்தார்கள்" என்பதைக் குறிக்க "அஜனூ" என்பதற்குப் பதிலாக) "இஃதஜனூ" என்ற சொல்லும் இடம்பெற்றுள்ளன. அத்தியாயம் :
حدثني الحكم بن موسى ابو صالح، حدثنا شعيب بن اسحاق، اخبرنا عبيد الله، عن نافع، ان عبد الله بن عمر، اخبره ان الناس نزلوا مع رسول الله صلى الله عليه وسلم على الحجر ارض ثمود فاستقوا من ابارها وعجنوا به العجين فامرهم رسول الله صلى الله عليه وسلم ان يهريقوا ما استقوا ويعلفوا الابل العجين وامرهم ان يستقوا من البير التي كانت تردها الناقة
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Zuhd and Softening of Hearts
- Hadith Index
- #7466
- Book Index
- 49
Grades
- -
