ஹதீஸ்கள்
#7390
ஸஹீஹ் முஸ்லிம் - Tribulations and Portents of the Last Hour
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் மக்காவையும் மதீனாவையும் தவிர தஜ்ஜாலின் கால்படாத எந்த ஊரும் இராது. மதீனாவின் ஒவ்வொரு நுழைவாயிலிலும் வானவர்கள் அணிவகுத்து நின்று மதீனாவைப் பாதுகாப்பார்கள். ஆகவே, தஜ்ஜால் (மதீனாவுக்கு வெளியிலுள்ள) உவர் நிலத்தில் இறங்கித் தங்குவான். அப்போது மதீனா மூன்று முறை குலுங்கும். உடனே மதீனாவிலிருந்து ஒவ்வொரு இறைமறுப்பாளனும் நயவஞ்சகனும் அவனை நோக்கிப் புறப்பட்டுவருவார்கள். இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். - மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் "ஆகவே, தஜ்ஜால் "அல்ஜுருஃப்" எனும் இடத்திலுள்ள உவர் நிலத்திற்குச் சென்று, தனது கூடாரத்தை அமைப்பான். அப்போது ஒவ்வொரு நயவஞ்சகனும் நயவஞ்சகியும் அவனை நோக்கி (மதீனாவிற்குள்ளிருந்து) புறப்பட்டுவருவார்கள்" என்று இடம் பெற்றுள்ளது. அத்தியாயம் :
حدثني علي بن حجر السعدي، حدثنا الوليد بن مسلم، حدثني ابو عمرو، - يعني الاوزاعي - عن اسحاق بن عبد الله بن ابي طلحة، حدثني انس بن مالك، قال قال رسول الله صلى الله عليه وسلم " ليس من بلد الا سيطوه الدجال الا مكة والمدينة وليس نقب من انقابها الا عليه الملايكة صافين تحرسها فينزل بالسبخة فترجف المدينة ثلاث رجفات يخرج اليه منها كل كافر ومنافق
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Tribulations and Portents of the Last Hour
- Hadith Index
- #7390
- Book Index
- 151
Grades
- -
