ஹதீஸ்கள்
#7349
ஸஹீஹ் முஸ்லிம் - Tribulations and Portents of the Last Hour
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: இப்னு ஸாயித் என்னிடம் பேசியபோது, அவனைப் பழிப்பதற்கு எனக்கு வெட்கமாக இருந்தது. அவன், "(விவரம் தெரியாத காரணத்தால், என்னை "தஜ்ஜால்" என்று நினைக்கும்) பொது மக்களை நான் பொருட்படுத்தவில்லை. (ஆனால்,) முஹம்மத் (ஸல்) அவர்களின் தோழர்களே! உங்களுக்கும் எனக்குமிடையே என்ன பிரச்சினை? நபி (ஸல்) அவர்கள், "அவன் (தஜ்ஜால்) யூதன்" என்று சொல்லவில்லையா? ஆனால், நானோ இஸ்லாத்தை ஏற்றுவிட்டேன்; "அவனுக்குக் குழந்தையேதும் பிறக்காது" என்று நபியவர்கள் சொன்னார்கள். எனக்குக் குழந்தை இருக்கிறது. "அவன் மக்காவுக்குள் நுழைவதை அல்லாஹ் தடைசெய்துவிட்டான்" என்று நபியவர்கள் கூறினார்கள். நான் ஹஜ் செய்துவிட்டேன்" என்று கூறினான். இவ்வாறு அவனது சொல்,என்னில் ஒரு மதிப்பை உண்டாக்கும் அளவுக்கு அவன் பேசிக்கொண்டேயிருந்தான். பிறகு அவன், "அறிந்துகொள்க: அல்லாஹ்வின் மீதாணையாக! இப்போது அவன் (தஜ்ஜால்) எங்கே இருக்கிறான் என்பதை நான் அறிவேன். அவனுடைய தந்தையையும் தாயையும் நான் அறிவேன்" என்றான். அவனிடம் "அந்த (தஜ்ஜால் எனும்) மனிதனாக நீ இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறாயா?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அவன், "அவ்வாறு என்னிடம் கோரப்பட்டால் அதை நான் வெறுக்கமாட்டேன்" என்றான். இந்தத் தகவல் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا يحيى بن حبيب، ومحمد بن عبد الاعلى، قالا حدثنا معتمر، قال سمعت ابي يحدث، عن ابي نضرة، عن ابي سعيد الخدري، قال قال لي ابن صايد واخذتني منه ذمامة هذا عذرت الناس ما لي ولكم يا اصحاب محمد الم يقل نبي الله صلى الله عليه وسلم " انه يهودي " . وقد اسلمت . قال " ولا يولد له " . وقد ولد لي . وقال " ان الله قد حرم عليه مكة " . وقد حججت . قال فما زال حتى كاد ان ياخذ في قوله . قال فقال له اما والله اني لاعلم الان حيث هو واعرف اباه وامه . قال وقيل له ايسرك انك ذاك الرجل قال فقال لو عرض على ما كرهت
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Tribulations and Portents of the Last Hour
- Hadith Index
- #7349
- Book Index
- 113
Grades
- -
