ஹதீஸ்கள்
#7206
ஸஹீஹ் முஸ்லிம் - Paradise, its Description, its Bounties and its Inhabitants
மிக்தாத் பின் அல்அஸ்வத் (ரலி) அவர்கள் கூறியதாவது: "மறுமை நாளில் சூரியன் படைப்பினங்களுக்கு அருகில் கொண்டுவரப்படும். எந்த அளவுக்கென்றால், அவர்களுக்கும் அதற்கும் இடையில் ஒரு மைல் தொலைதூரமே இருக்கும். அப்போது மக்கள் தம் செயல்களுக்கேற்ப வியர்வையில் மூழ்குவார்கள். சிலரது வியர்வை அவர்களின் கணுக்கால்கள்வரையிலும், சிலரது வியர்வை முழங்கால்கள் வரையிலும், சிலரது வியர்வை இடுப்பு வரையிலும், சிலரது வியர்வை வாய் வரையிலும் எட்டிவிடும்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டேன். இதைக் கூறியபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது கையால் வாயை நோக்கி சைகை செய்தார்கள். இதன் அறிவிப்பாளரான சுலைம் பின் ஆமிர் (ரஹ்) அவர்கள், "அல்லாஹ்வின் மீதாணையாக! "மைல்" என்று பூமியின் தொலைதூர அளவைக் குறிப்பிட்டார்களா? அல்லது கண்ணில் தீட்டப் பயன்படும் அஞ்சனக்கோலின் அளவைக் குறிப்பிட்டார்களா என்பது எனக்குத் தெரியவில்லை" என்று கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا الحكم بن موسى ابو صالح، حدثنا يحيى بن حمزة، عن عبد الرحمن بن، جابر حدثني سليم بن عامر، حدثني المقداد بن الاسود، قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول " تدنى الشمس يوم القيامة من الخلق حتى تكون منهم كمقدار ميل " . قال سليم بن عامر فوالله ما ادري ما يعني بالميل امسافة الارض ام الميل الذي تكتحل به العين . قال " فيكون الناس على قدر اعمالهم في العرق فمنهم من يكون الى كعبيه ومنهم من يكون الى ركبتيه ومنهم من يكون الى حقويه ومنهم من يلجمه العرق الجاما " . قال واشار رسول الله صلى الله عليه وسلم بيده الى فيه
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Paradise, its Description, its Bounties and its Inhabitants
- Hadith Index
- #7206
- Book Index
- 75
Grades
- -
