ஹதீஸ்கள்
#7193
ஸஹீஹ் முஸ்லிம் - Paradise, its Description, its Bounties and its Inhabitants
சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (5:103ஆவது இறைவசனத்திலுள்ள) "பஹீரா" என்பது, (அறியாமைக் கால) சிலைகளுக்காக (அவற்றின் பெயரால்) பால் கறக்கக்கூடாதெனத் தடை விதிக்கப்பட்டுவந்த ஒட்டகமாகும்; மக்களில் யாரும் அதன் பாலைக் கறக்கமாட்டார்கள். "சாயிபா" என்பது, (அறியாமைக் காலத்தில் நோய் நிவாரணம் போன்ற தேவைகள் நிறைவேற வேண்டும் என்ற வேண்டுதலில்) சிலைகளுக்காக (நேர்ந்து) சுதந்திரமாகத் திரியவிடப்பட்டு வந்த ஒட்டகமாகும். அதன் மீது எந்தச் சுமையும் ஏற்றப்படாது. அபூஹுரைரா (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாகப் பின்வருமாறு சொன்னார்கள்: "அம்ர் பின் ஆமிர் அல்குஸாஈ" தமது குடலை இழுத்தபடி நரகத்தில் சென்று கொண்டிருப்பதை நான் கண்டேன். முதன் முதலாக "சாயிபா" (ஒட்டகத்தைச் சிலைகளுக்காக நேர்ச்சை செய்து) திரியவிட்டவர் அவர்தான். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثني عمرو الناقد، وحسن الحلواني، وعبد بن حميد، قال عبد اخبرني وقال، الاخران حدثنا يعقوب، - وهو ابن ابراهيم بن سعد - حدثنا ابي، عن صالح، عن ابن، شهاب قال سمعت سعيد بن المسيب، يقول ان البحيرة التي يمنع درها للطواغيت فلا يحلبها احد من الناس واما السايبة التي كانوا يسيبونها لالهتهم فلا يحمل عليها شىء . وقال ابن المسيب قال ابو هريرة قال رسول الله صلى الله عليه وسلم " رايت عمرو بن عامر الخزاعي يجر قصبه في النار وكان اول من سيب السيوب
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Paradise, its Description, its Bounties and its Inhabitants
- Hadith Index
- #7193
- Book Index
- 62
Grades
- -
