ஹதீஸ்கள்
#7060
ஸஹீஹ் முஸ்லிம் - Characteristics of the Day of Judgment, Paradise, and Hell
மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில், "நான் நபி (ஸல்) அவர்களுடன் மதீனாவில் ஒரு வேளாண் பூமியில் சென்று கொண்டிருந்தேன்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. அவற்றில் அலீ பின் கஷ்ரம் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், ("நீங்கள் கொடுக்கப் பட்டுள்ளீர்கள்" என்பதற்குப் பதிலாக) "அவர்கள் கொடுக்கப்பட்டுள்ளார்கள்" என்று இடம் பெற்றுள்ளதாக ஈசா பின் யூனுஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாகக் காணப்படுகிறது. வகீஉ (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "நீங்கள் கொடுக்கப்பட்டுள்ளீர்கள்" என்றே இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
حدثنا ابو بكر بن ابي شيبة، وابو سعيد الاشج قالا حدثنا وكيع، ح وحدثنا اسحاق بن ابراهيم الحنظلي، وعلي بن خشرم، قالا اخبرنا عيسى بن يونس، كلاهما عن الاعمش، عن ابراهيم، عن علقمة، عن عبد الله، قال كنت امشي مع النبي صلى الله عليه وسلم في حرث بالمدينة . بنحو حديث حفص غير ان في حديث وكيع وما اوتيتم من العلم الا قليلا . وفي حديث عيسى بن يونس وما اوتوا . من رواية ابن خشرم
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Characteristics of the Day of Judgment, Paradise, and Hell
- Hadith Index
- #7060
- Book Index
- 16
Grades
- -
