ஹதீஸ்கள்
#6733
ஸஹீஹ் முஸ்லிம் - Destiny
அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது கையிலிருந்த குச்சியால் தரையைக் குத்திக் கீறியபடி (தலையைக் கவிழ்த்தவாறு) உட்கார்ந்திருந்தார்கள். பிறகு தமது தலையை உயர்த்தி, "உங்களில் (பிறந்துவிட்ட) எவருக்கும் சொர்க்கத்திலுள்ள, அல்லது நரகத்திலுள்ள அவரது இருப்பிடம் அறியப்படாமல் இருப்பதில்லை" என்று கூறினார்கள். மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! பிறகு எதற்காக நாங்கள் நல்லறங்கள் செய்ய வேண்டும்? நாங்கள் (எங்கள் விதியின் மீது) பாரத்தைப் போட்டுவிட்டு (நல்லறங்கள் ஏதும் செய்யாமல்) இருந்துவிடமாட்டோமா?" என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இல்லை; நீங்கள் செயலாற்றுங்கள். (நல்லார், பொல்லார்) எல்லாருக்கும் அவரவர் எதற்காகப் படைக்கப்பட்டுள்ளனரோ அது எளிதாக்கப்படும்" என்று கூறினார்கள். பிறகு, "யார் (பிறருக்கு) வழங்கி (இறைவனை) அஞ்சி, நல்லவற்றை உண்மைப் படுத்துகிறாரோ..." என்று தொடங்கி, "சிரமத்தின் வழியை எளிதாக்குவோம்" (92:5-10) என்பது வரை ஓதிக்காட்டினார்கள். இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் அலீ (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا ابو بكر بن ابي شيبة، وزهير بن حرب، وابو سعيد الاشج قالوا حدثنا وكيع، ح وحدثنا ابن نمير، حدثنا ابي، حدثنا الاعمش، ح وحدثنا ابو كريب، - واللفظ له - حدثنا ابو معاوية، حدثنا الاعمش، عن سعد بن عبيدة، عن ابي عبد الرحمن السلمي، عن علي، قال كان رسول الله صلى الله عليه وسلم ذات يوم جالسا وفي يده عود ينكت به فرفع راسه فقال " ما منكم من نفس الا وقد علم منزلها من الجنة والنار " . قالوا يا رسول الله فلم نعمل افلا نتكل قال " لا . اعملوا فكل ميسر لما خلق له " . ثم قرا { فاما من اعطى واتقى * وصدق بالحسنى} الى قوله { فسنيسره للعسرى}
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Destiny
- Hadith Index
- #6733
- Book Index
- 11
Grades
- -
