ஹதீஸ்கள்
#6413
ஸஹீஹ் முஸ்லிம் - The Merits of the Companions
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: "அப்போது உங்களில் இரு குழுவினர் துணிவிழந்து (திரும்பி)விட எண்ணினர். ஆனால், அவர்களுக்கு அல்லாஹ் உதவியாள(னாய் இருந்தா)ன்" (3:122) எனும் இறை வசனம், பனூ சலிமா மற்றும் பனூ ஹாரிஸா கூட்டத்தாராகிய எங்களைக் குறித்தே அருளப்பெற்றது. "இந்த வசனம் அருளப்பெறாமலிருந்திருந்தால் நன்றாயிருந்திருக்குமே" என்று நாங்கள் விரும்பமாட்டோம். ஏனெனில், வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், "அவர்களுக்கு அல்லாஹ் உதவியாள(னாய் இருந்தா)ன்" என்று (எங்களை மேன்மைப்படுத்திக்) கூறுகிறானே (பிறகு எப்படி அவ்வாறு விரும்ப முடியும்?). இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا اسحاق بن ابراهيم الحنظلي، واحمد بن عبدة، - واللفظ لاسحاق - قالا اخبرنا سفيان، عن عمرو، عن جابر بن عبد الله، قال فينا نزلت { اذ همت طايفتان منكم ان تفشلا والله وليهما} بنو سلمة وبنو حارثة وما نحب انها لم تنزل لقول الله عز وجل { والله وليهما}
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- The Merits of the Companions
- Hadith Index
- #6413
- Book Index
- 243
Grades
- -
