ஹதீஸ்கள்
#6407
ஸஹீஹ் முஸ்லிம் - The Merits of the Companions
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "அஷ்அரீ" குலத்தைச் சேர்ந்த என் நண்பர்கள் (தம் பணிகளை முடித்துக்கொண்டு) இரவில் (இருப்பிடங்களில்) நுழையும்போது, அவர்கள் குர்ஆன் ஓதும் ஓசையை நான் அறிவேன். பகல் நேரங்களில் அவர்கள் தங்கியிருக்கும் இடங்களை நான் பார்த்திருக்காவிட்டாலும் இரவில் அவர்கள் குர்ஆன் ஓதும் ஓசையைக் கேட்டு அவர்கள் தங்கியிருக்கும் இடங்களை நான் அடையாளம் கண்டுகொள்கிறேன். அவர்களில் விவேகம் மிக்க ஒருவர் இருக்கிறார். அவர் "குதிரைப் படையினரை" அல்லது "எதிரிகளை"ச் சந்தித்தால்,அவர்களைப் பார்த்து (வெருண்டோடாமல்) "என் தோழர்கள், தங்களுக்காகக் காத்திருக்கும்படி உங்களுக்கு உத்தரவிடுகின்றனர்" என்று கூறுவார். அத்தியாயம் :
حدثنا ابو كريب، محمد بن العلاء حدثنا ابو اسامة، حدثنا بريد، عن ابي بردة، عن ابي موسى، قال قال رسول الله صلى الله عليه وسلم " اني لاعرف اصوات رفقة الاشعريين بالقران حين يدخلون بالليل واعرف منازلهم من اصواتهم بالقران بالليل وان كنت لم ار منازلهم حين نزلوا بالنهار ومنهم حكيم اذا لقي الخيل - او قال العدو - قال لهم ان اصحابي يامرونكم ان تنظروهم
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- The Merits of the Companions
- Hadith Index
- #6407
- Book Index
- 238
Grades
- -
