ஹதீஸ்கள்
#6393
ஸஹீஹ் முஸ்லிம் - The Merits of the Companions
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஹஸ்ஸான் (ரலி) அவர்கள் (நபி (ஸல்) அவர்களிடம்), "அல்லாஹ்வின் தூதரே! அபூசுஃப்யானுக்கெதிராக (அவருடைய வசைக்கவிகளுக்குப் பதிலடி கொடுக்க) எனக்கு அனுமதி அளியுங்கள்" என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "(அவரோடு இணைந்துள்ள) என்னுடைய வமிசாவளியை அவரிடமிருந்து எப்படி (பிரித்துப் பாடுவீர்கள்)?" என்று கேட்டார்கள். அதற்கு ஹஸ்ஸான் (ரலி) அவர்கள், "தங்களை மேன்மைப்படுத்தியுள்ள (இறை)வன் மீதாணையாக! (அவர்களைப் பற்றி நான் எதிர்க் கவிகூறும்போது) குழைத்த மாவிலிருந்து முடி உருவப்படுவதைப் போன்று உங்களை உருவி எடுத்துவிடுவேன்" என்று கூறினார்கள். "ஹாஷிம் கிளையின் மக்ஸூம் குலமகளின் மக்களுக்கே மேன்மையின் சிகரம் உரியது. ஆனால், (அபூசுஃப்யானே!) உமது தந்தை, (அப்து மனாஃபின்) அடிமையாவார்" என்பதே (இயைபுத் தொடையில் அமைந்த) அவரது அந்தக் கவிதையாகும். - மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில், "ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் (குறைஷி) இணைவைப்பாளர்களைத் தாக்கி (எதிர்க் கவி) பாட அனுமதி கேட்டார்கள்" என்றே ஹதீஸ் ஆரம்பமாகிறது. "அபூசுஃப்யானுக்கெதிராக" எனும் குறிப்பு இல்லை. அதில் ("குழைத்த மாவு" என்பதைக் குறிக்க "அல்கமீர்" என்பதற்குப் பகரமாக) "அல்அஜீன்" எனும் சொல் காணப்படுகிறது. அத்தியாயம் :
حدثنا يحيى بن يحيى، اخبرنا يحيى بن زكرياء، عن هشام بن عروة، عن ابيه، عن عايشة، قالت قال حسان يا رسول الله ايذن لي في ابي سفيان قال " كيف بقرابتي منه " . قال والذي اكرمك لاسلنك منهم كما تسل الشعرة من الخمير . فقال حسان وان سنام المجد من ال هاشم بنو بنت مخزوم ووالدك العبد قصيدته هذه
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- The Merits of the Companions
- Hadith Index
- #6393
- Book Index
- 223
Grades
- -
