ஹதீஸ்கள்
#6368
ஸஹீஹ் முஸ்லிம் - The Merits of the Companions
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் கழிப்பிடத்திற்குச் சென்றார்கள். நான் அவர்களுக்காக (அங்கத் தூய்மை செய்ய) தண்ணீர் வைத்தேன். அவர்கள் வெளியே வந்ததும் "இதை வைத்தவர் யார்?" என்று கேட்டார்கள். மக்கள், "இப்னு அப்பாஸ்" என்று கூறினர். நபி (ஸல்) அவர்கள், "இறைவா! அவருக்கு மார்க்கத்தில் (நல்ல) விளக்கத்தை அளிப்பாயாக"என்று பிரார்த்தித்தார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஸுஹைர் பின் ஹர்ப் (ரஹ்) அவர்களது அறிவிப்பிலேயே மேற்கண்டவாறு இடம்பெற்றுள்ளது. அபூபக்ர் பின் அந்நள்ர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், (மக்கள் என்பதற்குப் பதிலாக) "நான், இப்னு அப்பாஸ்(தான் வைத்தேன்)"என்று கூறியதாக இடம் பெற்றுள்ளது. அத்தியாயம் :
حدثنا زهير بن حرب، وابو بكر بن النضر قالا حدثنا هاشم بن القاسم، حدثنا ورقاء بن عمر اليشكري، قال سمعت عبيد الله بن ابي يزيد، يحدث عن ابن عباس، انوسلم اتى الخلاء فوضعت له وضوءا فلما خرج قال " من وضع هذا " . في رواية زهير قالوا . وفي رواية ابي بكر قلت ابن عباس . قال " اللهم فقهه
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- The Merits of the Companions
- Hadith Index
- #6368
- Book Index
- 198
Grades
- -
