ஹதீஸ்கள்
#6283
ஸஹீஹ் முஸ்லிம் - The Merits of the Companions
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (என்னிடம்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூன்று இரவுகள் உன்னை நான் கனவில் கண்டுள்ளேன். வானவர் ஒருவர் உன்னைப் பட்டுத் துணியொன்றில் என்னிடம் எடுத்து வந்து, "இவர் உங்கள் மனைவி"என்று கூறுகிறார். அப்போது நான் உன் முக்காட்டுத் துணியை விலக்கிப் பார்த்தேன். அதில் இருந்தது நீதான். அப்போது நான் "இ(க்கனவான)து அல்லாஹ்வின் தரப்பிலிருந்து வந்ததாயின், இதை அல்லாஹ் நனவாக்குவான்" என்று கூறலானேன். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا خلف بن هشام، وابو الربيع، جميعا عن حماد بن زيد، - واللفظ لابي الربيع - حدثنا حماد، حدثنا هشام، عن ابيه، عن عايشة، انها قالت قال رسول الله صلى الله عليه وسلم " اريتك في المنام ثلاث ليال جاءني بك الملك في سرقة من حرير فيقول هذه امراتك . فاكشف عن وجهك فاذا انت هي فاقول ان يك هذا من عند الله يمضه
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- The Merits of the Companions
- Hadith Index
- #6283
- Book Index
- 113
Grades
- -
