ஹதீஸ்கள்
#6201
ஸஹீஹ் முஸ்லிம் - Introduction
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் தூங்கிக்கொண்டிருந்தபோது (கனவில்) என்னைச் சொர்க்கத்தில் கண்டேன். அங்கிருந்த மாளிகை ஒன்றின் ஓரத்தில் ஒரு பெண் அங்கத் தூய்மை (உளூ) செய்துகொண்டிருந்தாள். அப்போது நான், "இந்த மாளிகை யாருக்குரியது?" என்று கேட்டேன். அவர்கள் (வானவர்கள்), "உமர் பின் அல்கத்தாபுக்குரியது" எனப் பதிலளித்தனர். (அந்த மாளிகைக்குள் நான் செல்ல நினைத்தேன்.) உமரின் தன்மான உணர்வு என் நினைவுக்கு வந்தது. உடனே அங்கிருந்து திரும்பிவந்துவிட்டேன். இதன் அறிவிப்பாளரான அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: இ(வ்வாறு அவர்கள் கூறிய)தைக் கேட்டு உமர் (ரலி) அவர்கள் அழுதார்கள். அந்த அவையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நாங்கள் அனைவரும் இருந்தோம். பிறகு உமர் (ரலி) அவர்கள், "என் தந்தை தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! தங்களிடமா நான் தன்மான உணர்வைக் காட்டுவேன், அல்லாஹ்வின் தூதரே!" என்று கேட்டார்கள். - மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثني حرملة بن يحيى، اخبرنا ابن وهب، اخبرني يونس، ان ابن شهاب، اخبره عن سعيد بن المسيب، عن ابي هريرة، عن رسول الله صلى الله عليه وسلم انه قال " بينا انا نايم اذ رايتني في الجنة فاذا امراة توضا الى جانب قصر فقلت لمن هذا فقالوا لعمر بن الخطاب . فذكرت غيرة عمر فوليت مدبرا " . قال ابو هريرة فبكى عمر ونحن جميعا في ذلك المجلس مع رسول الله صلى الله عليه وسلم ثم قال عمر بابي انت يا رسول الله اعليك اغار وحدثنيه عمرو الناقد، وحسن الحلواني، وعبد بن حميد، قالوا حدثنا يعقوب بن، ابراهيم حدثنا ابي، عن صالح، عن ابن شهاب، بهذا الاسناد مثله
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Introduction
- Hadith Index
- #6201
- Book Index
- 0
Grades
- -
