ஹதீஸ்கள்
#6178
ஸஹீஹ் முஸ்லிம் - The Merits of the Companions
இப்னு அபீமுளைக்கா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஆயிஷா (ரலி) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் பிரதிநிதியாக ஒருவரை ஆக்குவதாயிருந்தால் யாரை ஆக்கியிருப்பார்கள்?" என்று கேட்கப்பட்டது. அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், "அபூபக்ர் (ரலி) அவர்களை (ஆக்கியிருப்பார்கள்)" என்று பதிலளித்தார்கள். "அபூபக்ருக்குப் பிறகு யாரை?" என்று கேட்கப்பட்டது. அதற்கு "உமர் (ரலி) அவர்களை" என்று பதிலளித்தார்கள். "உமருக்குப் பிறகு யாரை?" என்று கேட்கப் பட்டபோது, "ஆபூஉபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி) அவர்களை" என்று கூறிவிட்டு அத்தோடு நிறுத்திக் கொண்டார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
وحدثني الحسن بن علي الحلواني، حدثنا جعفر بن عون، عن ابي عميس، ح وحدثنا عبد بن حميد، - واللفظ له - اخبرنا جعفر بن عون، اخبرنا ابو عميس، عن ابن، ابي مليكة سمعت عايشة، وسيلت، من كان رسول الله صلى الله عليه وسلم مستخلفا لو استخلفه قالت ابو بكر . فقيل لها ثم من بعد ابي بكر قالت عمر . ثم قيل لها من بعد عمر قالت ابو عبيدة بن الجراح . ثم انتهت الى هذا
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- The Merits of the Companions
- Hadith Index
- #6178
- Book Index
- 10
Grades
- -
