ஹதீஸ்கள்
#6059
ஸஹீஹ் முஸ்லிம் - Virtues
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஹாரிஸ் பின் ஹிஷாம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், "தங்களுக்கு வேத அறிவிப்பு (வஹீ) எப்படி வருகின்றது?" என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், "சில நேரங்களில் மணியோசையைப் போன்று எனக்கு வேத அறிவிப்பு வரும். அவ்வாறு வருவது எனக்கு மிகவும் கடினமாக இருக்கும். பிறகு அச்செய்தியை நான் மனனமிட்டுக்கொண்ட நிலையில் அந்நிலை என்னை விட்டு விலகிவிடும். இன்னும் சில நேரங்களில், வானவர் ஒருவர் மனித உருவில் என்னிடம் வ(ந்து செய்திகளைத் த)ருவார். அவர் கூறுவதை நான் நினைவிலிருத்திக்கொள்வேன்"என்று பதிலளித்தார்கள். இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا ابو بكر بن ابي شيبة، حدثنا سفيان بن عيينة، ح وحدثنا ابو كريب، حدثنا ابو اسامة، وابن، بشر جميعا عن هشام، ح وحدثنا محمد بن عبد الله بن نمير، - واللفظ له - حدثنا محمد بن بشر، حدثنا هشام، عن ابيه، عن عايشة، ان الحارث بن هشام، سال النبي صلى الله عليه وسلم كيف ياتيك الوحى فقال " احيانا ياتيني في مثل صلصلة الجرس وهو اشده على ثم يفصم عني وقد وعيته واحيانا ملك في مثل صورة الرجل فاعي ما يقول
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Virtues
- Hadith Index
- #6059
- Book Index
- 117
Grades
- -
