ஹதீஸ்கள்
#5726
ஸஹீஹ் முஸ்லிம் - Greetings
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் பாம்புக்கடிக்கு ஓதிப் பார்த்துக்கொள்ள "ஹஸ்ம்" குடும்பத்தாருக்கு அனுமதியளித்தார்கள். மேலும்,அஸ்மா பின்த் உமைஸ் (ரலி) அவர்களிடம், "என் சகோதரர் (ஜஅஃபரின்) மக்களுடைய உடல்களை நான் மெலிந்திருக்கக் காண்கிறேனே ஏன்? அவர்கள் வறுமையில் வாடுகின்றனரா?" என்று கேட்டார்கள். அதற்கு அஸ்மா (ரலி) அவர்கள், "இல்லை; கண்ணேறு அவர்களை வேகமாகப் பாதிக்கிறது" என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அவர்களுக்கு ஓதிப்பார்ப்பீராக" என்று கூறினார்கள். நான் அவர்களிடம் (ஒரு துஆவை) எடுத்துரைத்தேன். நபி (ஸல்) அவர்கள் "(அதையே) அவர்களுக்கு ஓதிப்பார்ப்பீராக" என்று கூறினார்கள். அத்தியாயம் :
حدثني عقبة بن مكرم العمي، حدثنا ابو عاصم، عن ابن جريج، قال واخبرني ابو الزبير، انه سمع جابر بن عبد الله، يقول رخص النبي صلى الله عليه وسلم لال حزم في رقية الحية وقال لاسماء بنت عميس " ما لي ارى اجسام بني اخي ضارعة تصيبهم الحاجة " . قالت لا ولكن العين تسرع اليهم . قال " ارقيهم " . قالت فعرضت عليه فقال " ارقيهم
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Greetings
- Hadith Index
- #5726
- Book Index
- 80
Grades
- -
