ஹதீஸ்கள்
#5678
ஸஹீஹ் முஸ்லிம் - Greetings
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் தம் துணைவியார் ஒருவருடன் இருந்தார்கள். அப்போது அவர்களைக் கடந்து ஒரு மனிதர் சென்றார். நபி (ஸல்) அவர்கள் அந்த மனிதரை அழைத்தார்கள். அவர் வந்ததும், "இன்ன மனிதரே! இவர் என்னுடைய இன்ன துணைவி ஆவார்" என்று கூறினார்கள். அப்போது அந்த மனிதர், "அல்லாஹ்வின் தூதரே! நான் யாரைச் சந்தேகித்தாலும் தங்களைச் சந்தேகிக்கப்போவதில்லை" என்று கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள், "ஷைத்தான், மனிதனின் இரத்த நாளங்களில் எல்லாம் ஓடுகிறான்" என்று கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا عبد الله بن مسلمة بن قعنب، حدثنا حماد بن سلمة، عن ثابت البناني، عن انس، ان النبي صلى الله عليه وسلم كان مع احدى نسايه فمر به رجل فدعاه فجاء فقال " يا فلان هذه زوجتي فلانة " . فقال يا رسول الله من كنت اظن به فلم اكن اظن بك . فقال رسول الله صلى الله عليه وسلم " ان الشيطان يجري من الانسان مجرى الدم
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Greetings
- Hadith Index
- #5678
- Book Index
- 32
Grades
- -
